Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனா­தி­பதி நினைத்­தாலும் மாற்ற முடி­யாது - ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனா­தி­பதி நினைத்­தாலும் மாற்ற முடி­யாது -  ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர

 

(நா.தனுஜா)

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறைவேற்­றப்­பட்ட போது நான் மாத்­தி­ரமே அதற்கு எதிர்ப்பை வெளி­யிட்டேன். எனினும் அப்­போது என்னை அறி­வில்­லா­தவன் என்றும், இன­வாதி என்றும் தூற்­றி­னார்கள். ஆனால் இப்­போது ஜனா­தி­ப­தியே 19ஆவது திருத்தம் இரத்துச் செய்­யப்­பட வேண்டும் என்று கூறு­கிறார்.

sarath.jpg

இருப்­பினும் இனிமேல் அதனை நீக்­கு­வ­தென்­பது கடி­மா­ன­தொரு காரியம். இது நாட்­டிற்குப் பாத­க­மா­னது என்ற விட­யத்தை ஜனாதிபதி 4 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரேயே சிந்­தித்­தி­ருக்க வேண்டும் என்று ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்­தி­ருக்­கிறார்.  

அர­சி­ய­ல­மைப்பின் 18 ஆவது திருத்தம் சர்­வா­தி­கா­ரத்­தையும், 19ஆவது திருத்தம் நிலை­யற்ற அர­சாங்­கத்­தை­யுமே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.இவ்­விரு திருத்­தங்­க­ளையும் இரத்துச் செய்தால் மாத்­திரமே மக்­க­ளா­ணையை மதிக்கும் ஓர் அர­சாங்­கத்தை உரு­வாக்க முடியும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கிறார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர மாத்­திரம் அதற்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்தார்.  எனவே அவ­ரிடம் இது­ கு­றித்து வின­விய போதே இவ்­வாறு பதி­ல­ளித்தார். அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், 

பாரா­ளு­மன்­றத்தில் 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு 4 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் தான் அது தீங்­கா­னது என்ற விடயம் ஜனா­தி­ப­திக்குப் புரிந்­தி­ருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது அதற்கு எதி­ராக நான் மட்­டுமே வாக்­க­ளித்தேன். அப்­போது பலர் எனக்­கெ­தி­ரான கருத்­து­களை முன்­வைத்­தார்கள். என்னை அறி­வில்­லா­தவன் என்றும், இன­வாதி என்றும் தூற்­றி­னார்கள்.

ஆனால் அப்­போது நான் கடு­மை­யாக எதிர்த்த 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் நிலை­யற்ற அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும், அதனை இரத்துச் செய்ய வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி சிறி­சேன கூறு­கிறார். 

இது நாட்­டுக்குப் பாத­க­மா­னது என்ற விட­யத்தை முன்­கூட்­டியே உணர்ந்­தி­ருக்­காத, ஒரு தூர­நோக்கு சிந்­த­னை­யற்ற மனிதர் ஒரு­போதும் சிறந்த தலை­வ­ராக இருக்க முடி­யாது. தற்­போது நாட்டை அமெ­ரிக்­கா­வுக்கு முழு­வ­து­மாகக் குத்­த­கைக்கு வழங்­கி­னாலும் கூட ஜனா­தி­ப­தி­யால் அதனைத் தடுக்க முடி­யாது. 

அர­சாங்­கத்தைக் கலைக்­கவும் முடி­யாது. அதற்கு ஏற்­ற­வாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரு­வாக்கும் 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் என்ற முடிச்­சுக்குள் சிக்­கிக்­கொள்ள வேண்டாம் என அன்று கூறினேன். ஆனால் அவர் அதனைச் செவி­ம­டுக்­க­வில்லை. தற்­போ­தேனும் பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்று 19 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும். ஆனாலும் அது சாத்தியமற்ற தொரு விடயமாகும். அது நாட்டிற்குக் கேடானது என்று ஜனாதிபதி கூறினாலும் கூட அதை அவரால் நீக்க முடியாது. ஜனாதிபதி சிறிசேனவைப் பொறுத்தவரை இவ்விடயத்தை மிகத் தாமதமாகவே உணர்ந்திருக்கிறார் என்றே கூற வேண்டும்  என்றார்.

 

https://www.virakesari.lk/article/59006

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.