Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் கொள்கை வலுப்பெறுகிறது அரசுதான் அதற்கு தென்பூட்டுகிறது!

Featured Replies

தமிழீழக் கொள்கை வலுப்பெறுகிறது அரசுதான் அதற்கு தென்பூட்டுகிறது!

ஐக்கிய தேசியக் கட்சி சாடல்

ஐக்கிய தேசியக் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தமிழீழக்கொள்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு அந்தக் கொள்கைக்குத் தென்பூட்டி வளர்த்து வருகிறது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்திவரும் விமா னத் தாக்குதல்கள் இதனையே தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு நேற்று அரசைச் சாடியிருக்கின்றது எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த தாவது:

புலிகள் தற்போது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கட்டுநாயக்கா விமானத்தளம் மீது அவர் கள் இத்தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து பலாலி விமானத்தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பலமணிநேரம் கட்டுநாயக்கா அதிர்ந்தது

அதேபோல் நேற்றிரவும் (வியாழன் இரவு) புலிகள் கட்டுநாயக்காவுக்கு வந்து தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது. அவர்கள் தாக்குதல் நடத்தினார்களா அல்லது படையினர் வெறுமனே துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தார்களா என்று தெரியவில்லை.

திடீரெனப் பாரிய வெடிச்சத்தங்கள் கேட் கத் தொடங்கின. எனது வீடும் கம்பஹாவில் இருப்பதால் சம்பவதினத்தன்று வீட்டி லேயே தங்கியிருந்தேன். தொடர்ந்து வெடிச் சத்தங்களும் குண்டுவெடிப்புச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின.

மக்கள் அச்சம் காரணமாக வீடுகளைவிட்டு வெளியேறத் தொடங்கினர். நானும் அவ் வாறானதொரு நிலையையே எதிர்நோக்கி னேன். பலமணி நேரங்களாக கட்டுநாயக் காப் பிரதேசம் அதிர்ந்தது.

நாட்டில் எங்குமே பாதுகாப்பில்லை

உண்மையில் இது மிகவும் பாரதூரமான ஒன்று. இப்போது நாட்டில் எங்குமே பாதுகாப்பில்லை. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த நிலைமை தொடர்வது எமது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல.

எமது ஆட்சியில் புலிகளை பேச்சு மேசைக்கு இழுத்துவர எம்மால் முடிந்தது. அதுமாத்திரமின்றி புலிகளின் தமிழீழக் கொள்கையைத் தோற்கடித்து ஒரு நாட்டிற் குள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளப் புலி களை இணங்கச் செய்தோம்.

புலிகள் தமிழீழக் கொள்கையைக் கை விட்டு நாம் முன்வைத்த அதிகாரப் பகிர்வு முறையைப் பரிசீலிக்கத் தயாராகினர். அதற்கான பேச்சு இடம்பெற்றுக் கொண்டி ருந்தபோதுதான் எமது அரசு கவிழ்க்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் அவர் நாம் விட்ட இடத்திலிருந்து சமாதான முயற்சியைத் தொடருவார் என நாம் நம்பி னோம். ஆனால் அவர் பொய்யான ஒரு யுத்தத்தைத்தான் முன்னெடுக்கின்றார்.

யுத்தத்தினால் தீர்வு கிடைக்காது

யுத்தம் மூலம் தீர்வுகாண முடியாது என்பதை நன்கு உணர்ந்தே நாம் சமாதான முயற்சியில் இறங்கினோம்.

ஆனால் மஹிந்த மீண்டும் யுத்தத்திற்கே வந்துவிட்டார். புலிகள் கைவிட்ட தமிழீழக் கொள்கையை இந்த யுத்தம் கார ணமாக மீண்டும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

தமிழீழம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுவிட் டன என்று புலிகளின் பேச்சாளர் இளந்திரை யன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குத் தெரி வித்துள்ளார்.

தமிழீழக் கொள்கையை புலிகள் மீண்டும் வலுப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவே வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் முன் கொண்டு செல்லும் யுத்தமே இந்த நிலைக் குக் காரணம்.

யுத்தம் செய்வதாகவிருந்தால் வெற்றிகரமாகச் செய்யவேண்டும். இல்லையேல் செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைக்க வேண் டும். இப்படி யுத்தம் செய்தால் எமது மக்கள் தான் அழிவார்கள்.

மட்டக்களப்பில் கருணாவின் ஆட்சி

புதுவருடத்திற்கு முன் கிழக்கைக் கைப் பற்றி விடுவோம் என்று அரசு சொன்னது. அது நடந்ததா? புலிகளின் பகுதிகளுக்கு படை யினர் ஷெல் தாக்குதல் நடத்துகின்றனர். புலிகள் பின்வாங்கியுள்ளனர். மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மக்களின் உடைமைகள் அழிக்கப்படுகின்றன, சூறையாடப்படுகின்றன.

கருணா குழு போன்ற சிறு சிறு ஆயுதக் குழுக் களை உருவாக்கி வைத்துக்கொண்டு பொய் மையான இந்த நடவடிக்கையை அரசு மேற் கொள்கிறது.

மட்டக்களப்பில் கருணாவின் ஆட்சியே நடக்கின்றது. அங்கு பொலிஸார் அவர்களின் கடமையைச் செய்யமுடியாமல் தடுமாறுகின் றனர். இதுதான் கிழக்கை அரசு கைப்பற்றும் லட்சணமா? இந்த மாதிரியான யுத்தம் மூலம் என்றைக்குமே தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. என்றார். (சி)

உதயன்

//மக்கள் அச்சம் காரணமாக வீடுகளைவிட்டு வெளியேறத் தொடங்கினர். நானும் அவ் வாறானதொரு நிலையையே எதிர்நோக்கி னேன். பலமணி நேரங்களாக கட்டுநாயக் காப் பிரதேசம் அதிர்ந்தது.

நாட்டில் எங்குமே பாதுகாப்பில்லை//

ம்ம் நாங்கள் எத்த்ட்னை வருடமாக வீட்டை விட்டு வெளியே பங்கருக்குள்ளயே இருந்திருக்கம்...இப்ப தங்களுக்கு வந்ததும் தான் பாதுகாப்பு இல்லையாம்...

இதை பார்க்கும் போது ஒரு சாதாரண அரசியல் நாடகமாகவே இருக்கு...ஆளும் கட்சியை எதிர்கட்சி சாடுவது...

கொடுமை!

இது மட்டும் இல்லை தூயவா இதைவிட இன்னும் அனுபவிக்க வேண்டும் அப்ப தான் சிங்களவனுக்கு புரியும்

  • தொடங்கியவர்

ம்ம் நாங்கள் எத்த்ட்னை வருடமாக வீட்டை விட்டு வெளியே பங்கருக்குள்ளயே இருந்திருக்கம்...இப்ப தங்களுக்கு வந்ததும் தான் பாதுகாப்பு இல்லையாம்...

இது மட்டும் இல்லை தூயவா இதைவிட இன்னும் அனுபவிக்க வேண்டும் அப்ப தான் சிங்களவனுக்கு புரியும்

வான் தாக்குதல் அச்சத்தினால் இரவோடு இரவாக வெளியேற்றம்

கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது மீண்டும் புலி கள் தாக்குதல் நடத்த முற்படுகின்றனர் எனக் கூறிக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு படையினர் மேற்கொண்ட தற் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கட்டுநாயக்க பிர தேச வாசிகள் பதற்றத்தால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து, மீண்டும் நேற்றுக்காலையிலேயே தமது வீடுகளுக்குத் திரும் பினர் என்று தெரியவந்துள்ளது.

படையினர் மேற்கொண்ட தற்பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கட்டுநாயக்கவைச் சுற்றியுள்ள பல பிரதே சங்கள் அதிரத்தொடங்கின.

ஏற்கனவே கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது புலி கள் வான் தாக்குதல்கள் நடத்தியிருந்தமை காரணமாக மீண் டும் அவர்கள் நேற்றுத் தாக்குதல் நடத்துகின்றனர் என்று எண்ணி அப்பிரதேச மக்கள் பீதியடைந்தனர்.

இதனால் கட்டுநாயக்க, சீதுவை, ஜா எல, கந்தானை போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த பலர் பாதுகாப்பான தூர இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.

இந்த மக்கள் வத்தளையிலும் நீர்கொழும்பிலுமுள்ள தமது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர் என்று சொல்லப்படுகின்றது.

அவர்கள் இடம்பெயர்ந்த நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்ததால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே இடம்பெயர்ந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக்காலை மீண்டும் அவர்கள் தமது சொந்த இடங் களுக்குத் திரும்பிவிட்டனர். எனினும், எந்நேரமும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அவர்களிடம் காணப் படுகின்றது.

உதயன்

இதுதான் ஆரம்பம் :lol:

அமரதுங்க தங்கள் ஆட்சியில் புலிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுபோல் பேசியுள்ளார்.

யாரும் எந்த அரசும் எப்போதும் புலிகளை அடக்க முயன்று வெற்றிபெற்றதில்லை. மாறாக ஒவ்வொரு தடவையும் அழுத்தங்களை எதிர்நோக்கும்போது, புலிகள் தமது விஸ்வரூபத்தினை உலகிற்குக் காட்டி, மென்மேலும் பலமடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய இராணுவம் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து ஒடுக்க நினைத்தபோது - உலகின் 4ஆவது இராணுவ சக்தியை எதிர்த்துப் போரிட்டது.

புலிகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியபோது - வன்னியைத் தமது கோட்டையாக மாற்றியது.

ஜயசிக்குறு நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலத்தை இராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது - கிளிநொச்சியை மீட்டது.

...

தற்போது இராணுவம் கிழக்கை வெற்றிகொள்ள முயன்றபோது - வான்தாக்குதல்.

இவ்வளவு காலமும் தமிழ் சனம் பங்கருக்குள்ள ஓடிச்சுது இப்ப சிங்களவன் ஓடுறான் நகைச்சுவையாய் இல்லை

காலம் செய்யும் கோலமிது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.