Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடுங்கி எடுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு ஏது வழி?

Featured Replies

பிடுங்கி எடுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு ஏது வழி?

தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள் தாம்" என்று சில வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல இருகட்சிகளுமே செயற்படுகின்றன.

பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அணி திரட்டி, அவர்களின் ஐக்கியத்தைத் தனது வலிமையாக்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலங்காலமாகத் தான் பின்பற்றி வரும் சிங்களத் தேசியவாத இரும்புப் பிடியில் இருந்து சற்றேனும் விலகுவாதாக இல்லை. அதன் சிங்களத் தேசியக் கடுங்கோட்பாட்டுப் பிடிக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கின்றது மஹிந்த ராஜபக்ஷவின் திமிர்த்தனத் தலைமை. இதன் காரணாமாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நீதி வழியில் தீர்வு காணும் அமைதி முயற்சிகளில் இருந்து அது விலகிச் செல்கின்றது. பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினரான தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் நீதித் தீர்வு ஒன்றை வழங்குவதை விட இராணுவப் பலத்தின் அடிப்படையில் போரியல் செயற்பாட்டின் போக்கில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகான அது முயல்கின்றது என்பது அப்பட்டமாகவே வெளிப்படுகின்றது.

இனப்பிரச்சினை இவ்வாளவு மோசமாக முற்றி, பெரும் உள்நாட்டுப் போராக வெடித்த பின்னரும் கூட, நியாயமான உரிமைகளை வழங்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தமிழருக்குத் தருவதற்கு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்பது, இனப்பிரச்சினைக்கான தீர்வை சிபாரிசு செய்வதற்கான அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைப்புக்கு அக்கட்சி சமர்ப்பிக்க உள்ள யோசனையின் அடிப்படை நமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.

எல்லாக் கட்சிகளும் இந்தக் குழுவுக்கு தமது தீர்வு யோசனைத் திட்டங்களைச் சமர்ப்பித்த நிலையில் நீண்ட காலம் இழுத்தடித்து விட்டு, அடுத்த மாத முற்பகுதியில் (அதாவது அடுத்த வாரத்தில்) அதை சமர்பிப்பதாக அக்கட்சி அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்டபடி மே முதல் வாரத்தில் அது சமர்ப்பிக்கப்படுமா அல்லது இன்னும் இழுத்தடிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த யோசனையின் அடிப்படை அம்சம் எவ்வாறு அமையும் என்பது பற்றிய தகவல் மட்டும் வெளியாகிவிட்டது. நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி அதன் தீர்வு யோசனை அமைகின்றது. "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல" தமிழர் தாயகத்துக்கான அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை உளுத்துப் போன மாவட்ட அபிவிருத்திச் சபை மட்டத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றது அதிபர் மஹிந்தரின் ஆளும் கட்சி.

எண்பதுகளின் முற்பகுதியில் அப்போதைய ஜெயவர்த்தன அரசினால் முன்வைக்கப்பட்டு, நடை முறைப்படுத்தப்பட்டு, தமிழர் தாயகத்தால் நிராகரித்து ஒதுக்கப்பட்டு, செல்லாக்காசாகிப் போன மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையை தமிழர் தேசம் மீது திணித்து இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என ஆளும் கட்சி கனவு காண்கின்றது.

பௌத்த சிங்களப் பேரினவாதிகளை முற்றாக அரவணைத்து நிற்கும் ஆளும் கட்சிதான் இப்படி யதார்த்தம் புரியாமல் இறுமாப்புடன் நடக்கின்றது என்றால், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் தானும் அதற்கு சளைத்ததல்ல பேரினவாதப் போக்குடைய கட்சிதான் என்பதை நிரூபிக்க ஒற்றைகக் காலில் நிற்கின்றது.

இந்த ஐ.தே.கட்சி, ஆட்சியிலிருந்த இரண்டரை ஆண்டு காலத்திலேயே பிந்திய அமைதி முயற்சி கள் சமாதானப் பேச்சுகள் மேற்கொள்ளப்பட்டன. "தமிழர் தாயகமான வடக்கு கிழக்குக்கு உள் ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப் படையிலான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வழங்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராயத் தமிழர் தரப்புடன் இணக்கியதும் இதே ஐ.தே.க. தலைமையிலான அரசுதான். 2002 இறுதியில் ஒஸ்லோ பேச்சுகளின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஒப்பமிட்டு இதை உறுதிப்படுத்தியிருந்தது ஐ.தே.க. அரசு.

ஆனால், தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்கினால் தென்னிலங்கை பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் பெரும்பான்மை ஆதரவை இழந்து விடுவோம் என்ற யதார்த்தம் புரியத் தொடங்கியதும், அக்கட்சியும் தனது சுருதியை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஐ.தே.க.வின் இப்போதைய நிலைப்பாட்டை அக்கட்சியின் எம்.பியும் அரசமைப்பு விவகார நிபு ணருமான கே. என் சொக்ஸி வெளியிட்டிருக்கின்றார். ஆளும் ஸ்ரீ.ல.சு. கட்சி கூறுவது போல மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை மூலம் இனப்பிரச்சி னைக்குத் தீர்வு காணமுடியாது என்று கூறியுள்ள அவர், மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கு வதன் மூலம், இப்பிரச்சினையைத் தீரக்கலாம் என்கிறார். வடக்கையும் கிழக்கையும் கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்கும் வரை தற்காலிகமாக இணைக்கலாம் என்றும் கூறுகின்றார்.

எண்பதுகளின் முற்பகுதியில் கொண்டுவரப் பட்டு பயனின்றிச் செயலிழந்த மாவட்ட அபிவிருத் திச் சபை முறையையும் எண்பதுகளின் பிற்பகுதி யில் கொண்டு வரப்பட்டு அதேபோல பயனின்றிப் போன மாகாண சபை முறையையும் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன சிங்கள மக்களின் இரு பிரதான பிரதான இரு கட்சிகளும். "வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்துக்கு உள்ள சயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி அலகு" குறித்து இணக்கம் கண்ட ஐ.தே.கட்சியே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் எறியது போல, பேரினவாதக் கொப்பில் ஏறி நின்றுகொண்டு மாகாண சபை என்ற தமிழரால் ஏற்கனவே நிராகரிக் கப்பட்ட பழைய பல்லவியைப் பாடுகின்றது. அது வும் தமிழர் தாயகத்தின் ஐக்கியத்தை தற்காலிக ஏற்பாடாக மட்டும் அது பிரேரிக்கின்றது.

ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை உள்வாங்க விரும்பாமல், பெரும்பான்மைச் செருக்கில் நிற்கும் தென்னிலங்கையிடம் "மயிலே! மயிலே! இறகு போடு!" என்ற பாணியில் கையேந்தி நிற்பதில் பலனில்லை அர்த்தமில்லை. இறகு தேவையானால் பிடுங்கித்தான் எடுக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தமிழர்களை அந்த நிலைக்கே தள்ளி வருகிறது சிங்களத்துவம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.