Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''விடுதலைப்புலிகளை இலகுவாக கையாள முடியாமலிப்பதே சிங்கள அரசுகளுக்குள்ள பிரச்சினை''

Featured Replies

''விடுதலைப்புலிகளை இலகுவாக கையாள முடியாமலிப்பதே சிங்கள அரசுகளுக்குள்ள பிரச்சினை''

-மனோகரன்-

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தீர்மானிக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் இப்போது சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தெரிவித்தார். இன்றைய சூழலில் அவர் சொல்வது ஒருவகையில் சரிதான்.

சிறிலங்காவில் இப்பொழுது அரசியலும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. ஏன் இராணுவ நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கின்றது.

அரசியலைப் பொறுத்து இந்த மாதிரித் தேக்கங்கள் சிலபோது ஏற்படுவது உண்டு. ஆனால், அது நாட்டைப் பாதிக்காத வகையில் ஒரு இடைமாறு காலகட்டத்துக்குரிய தயாரிப்பு நிலைக்கானதாக இருக்கும். அரசியலில் தேக்கம் ஏற்படும்போது அதன் விளைவுகள் பொருளாதாரத்திலும் ஏனைய அம்சங்களிலும் பிரதிபலிக்கும் என்பார்கள். அதுதான் இப்போது இலங்கை அரசியலில் நடக்கிறது.

விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் முறித்துக் கொண்டபோதே இலங்கையின் அரசியல் நெருக்கடிக்குள்ளாகி விட்டதென்று பேசப்பட்டது. ஏனெனில் பேச்சுவார்த்தையை மையமாக வைத்துத்தான் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் வரையப்பட்டன. இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகள்கூட இனப்பிரச்சினைத் தீர்வையே அவதானிக்கின்றன. முதலீட்டாளர்கள் கூட இனப்பிரச்சினைத் தீர்வென்பது எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்தே முதலீட்டுக்கான தீர்மானத்தை எடுக்கிறார்கள்.

எனவே, இனப்பிரச்சனைக்குத் தீர்வு, அதற்கான பேச்சுவார்த்தை என்பவை தவிர்க்க முடியாதவாறு முக்கியம் பெற்றுவிட்டன. இவற்றை மையமாக வைத்தே கடந்த இருபதாண்டு காலமும் சிறிலங்காவில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே கவனிக்கலாம். தேர்தலின்போது இனப்பிரச்சினைதான் முக்கியமான விசயமாகப் பேசப்படுகிறது. அதிலும் இனப்பிரச்சினையை போர்மூலம் தீர்ப்பதாக எந்தத்தரப்பும் சொல்லிக்கொண்டு தேர்தலில் நின்றதில்லை. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் மட்டும் இனப்பிரச்சினையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க வேண்டும் என்று அறிவித்தன. ஆனால், இவை ஆட்சி அமைக்க முடியாத கட்சிகள் என்பதைக்கவனிக்கலாம்.

இதுவரைகாலமும் ஆட்சியமைத்த ஐ.தே.க வும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு என்று தெரிவித்தே ஆட்சியமைத்தன. இந்த அறிவிப்பை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும்.

முதலில் சர்வதேச சமூகத்தை அனுசரித்தே இந்தக்கட்சிகள் இவ்வாறு அறிவிப்பைச் செய்கின்றன. சர்வதேச சமூகம் போருக்கு ஆதரவளின்றதோ இல்லையோ அது வெளியே இவ்வாறுதான் விரும்புவதாகத்தான் காட்டுகிறது. அதாவது போரைத்தவிர்த்து சமாதானத்தை கட்டியெழுப்பவே விரும்புவதாக அதன் அறிவிப்புகள் இருக்கின்றன.

இரண்டாவது சிங்கள மக்களுக்கு இந்தக்கட்சிகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டுமென சொல்லியிருக்கின்றன. இப்படிச் சொல்லித்தான் அந்த மக்களிடமிருந்து ஆதரவைப்பெற்று ஆட்சிக்கு வருகின்றன. அப்படியே வந்துமிருக்கின்றன.

மூன்றாவது தமிழ் மக்களிடமும் இந்தக்கட்சிகள் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படமுடியும் என்றும் அதுவே தமது நோக்கமென்றும் சொல்லியிருக்கின்றன.

இப்படி இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இருபது வருசமாக ஒரு கருத்தை, ஒரு நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தே ஆட்சியை அமைத்திருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும்தான் மாறிமாறி ஆட்சியையும் அமைத்திருக்கின்றன. இதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இந்தக்கட்சிகள் இதுவரையிலும் என்ன செய்திருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். உண்மையில் இவை ஆட்சிக்கு வருவதற்கான ஒரு உபாயமாகவே இந்த அறிவிப்பைச் செய்கின்றன. மற்றும்படி இவற்றின் மனதில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றியோ மெய்யாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பற்றியோ ஒரு சிறு புள்ளியளவு தீர்மானம்கூட இல்லை. ஆனால், அவை பொய்யைச் சொல்ல வேண்டியுள்ளது. ஏன் இவை இப்படி தமக்கு விருப்பமில்லாமலே பொய்யைச் சொல்கின்றன? அதற்கான பின்னணி என்ன? ஏன் இந்தக் கட்சிகளால் அவை பின்பற்றுகின்;ற இனக்குரோத நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. அல்லது இனப்பிரச்சினை பற்றிய பேச்சையே எடுக்காமல் வேறு முக்கியமான விசயங்ளை எடுக்கமுடியாமல் போகிறது.

அப்படி தவிர்க்கமுடியாத அளவுக்கு இனப்பிரச்சினை ஆகிவிட்டது. இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டாலே அவற்றுக்கு அச்சுறுத்தல் இல்லை. இல்லையெனில் எப்போதும் நெருக்கடி நிலை தவிர்க்க முடியாதவாறு கருவளையமாக சூழ்ந்தே இருக்கும். இந்தக் கருவளையம் மற்ற எல்லா அம்சங்களையும் மறைத்துவிடும்.

இனப்பிரச்சினை மற்ற எல்லாக் குறைபாடுகளையும் மறைக்கக் கூடியவாறு போரை ஆதாரமாக்கி வளர்க்கப்பட்டிருக்கிறது. போரின் போது எல்லாக் குறைபாடுகளையும் மறைத்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. போர் கேள்விகளுக்கு இடமில்லாதிருப்பதால் அதனைப் பயன்படுத்தி ஆட்சியின் அத்தனை குறைபாடுகளையும் வெளியே தெரியாமல் பாதுகாத்துவிட முடிகிறது. அத்துடன் போரை எதிர்த்தரப்பு எதிர்க்கமுடியாதவாறு அதற்குத் தேசியச்சாயமும் பூசப்பட்டுள்ளது. இதனால் போருக்கு ஆதரவளிக்கத் தயங்குவோர் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் எதிரானவர்கள் என்ற சித்திரத்தை சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு வாய்பாடாகவும் கோட்பாடாகவும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல சிங்களத் தேசியவாதத்திற்கே அவர்கள் எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் போரைப்பற்றி யாரும் கேள்வி கேட்கமுடியதென்ற ஒரு பாதுகாப்பான நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழர்களிpன் உயிர்ப்பிரச்சினையை வைத்தே சிங்களக்கட்சிகள் தமது எல்லா விளையாட்டுகளையும் செய்கின்றன. இதைவைத்தே அவை எப்போதும் ஆட்சியையும் பிடிக்கின்றன. அதேமாதிரி தமிழரின் இந்தப் பிரச்சினையை வைத்தே அவை ஆட்சியையும் நடத்துகின்றன.

இதில் ஒரு வேடிக்கையும் உண்டு. ஆட்சிக்கு வந்தவுடன் விரும்பியோ விரும்பாமலோ இவை பேச்சுவார்த்தையை நடத்துகின்றன. அதுவும் விடுதலைப் புலிகளுடன் தான் இவை பேசுகின்றன. விடுதலைப்புலிகளை அங்கீகரித்து அந்த அமைப்பை ஏற்றுக்கொண்டுதான் பேசுகின்றன. ஆனால், பின்னர் பேச்சை முறிக்கும்போது தாம் ஏற்றுக்கொண்டு சமமாக இருந்து பேச்சுநடத்திய தரப்பை முற்றாக நிராகரிக்கின்றன. பிறகு அடுத்த தடவை மீண்டும் தேர்தலில் நிற்கும்போது மறுபடியும் பேச்சுவார்த்தை என்கின்றன. அதுவும் விடுதலைப்புலிகளுடன் பேசுவதாகவே பகிரங்கமாக அறிவிக்கின்றன.

இதெல்லாம் அரசியலில் சாதாரணமாக நடக்கிற காரியங்கள்தானே. இதிலென்ன புதினமிருக்கிறது என்று யாரும் கேட்கலாம். இந்தக்கேள்வி இந்தக் கட்சிகளுக்குரியதல்ல. இது சர்வதேச சமூகத்துக்கும் சிங்கள மக்களுக்கும் உரியது. தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் அவர்கள் இந்தக்கட்சிகளின் பேச்சையோ வாக்குறுதிகளையோ நம்பவில்லை. அதனால் அவர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைமூலம்தான் தீர்வென்றால் அதனை நோக்கி இவை ஏன் செல்லவில்லை என்ற கேள்வி எதற்காக எழுப்பப்படாமலிருக்கிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது பேச்சல்லாத வேறுவழியில் திரும்பும்போது அது நாட்டின் அரசியலையும் முழுஅசைவையும் பாதிக்கிறது. யுத்தத்தின்மூலம் நாடு பிளவுபட்டால் அதை அடுத்த கட்டத்தை உருவாக்கும். இந்த விடயம் தனியாகப் பார்க்கப்பட வேண்டியது.

இப்போது ஏற்பட்டிருக்கிற தேக்க நிலையும் இப்படியான ஒன்றுதான். ஆக, ஒன்று தெளிவாகப்புரிகிறது. இனப்பிரச்சினைதான எல்லாவற்றுக்கும் ஆதார மையமாக இருக்கிறதென்று.

சிங்கள மக்கள் இனப்பிரச்சினையைத்தீர்க்க பல தடவைகள் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்கள். அப்படித் தெரிவிக்கும் விதமாகவே அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்து அதற்கான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், அதற்கு மாறாகவே ஆட்சியிலிருந்தவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். இதேபோல சர்வதேச சமூகத்தையும் இவர்கள் முற்றாக ஏமாற்றியே வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழர்களை அவர்கள் எப்படிக் கையாண்டிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. தங்களின் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகிற அரசு தனக்கு எதிர்நிலையில் உள்ள மக்களை எப்படிக் கையாளும் என்பதற்கு அதிகம் விளக்கங்கள் தேவையில்லை.

இவ்வாறான ஒரு பழகிய வாய்ப்பாட்டுத்தனத்தில் தான் தொடர்ந்து சிறிலங்காவின் ஆட்சியும் தமிழ் பிரச்சினையும் தொடரப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காமலே தவிர்ப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகளை ஒரு கருவியாக்கப் பார்க்கின்றனர்.

இனப்பிரச்சினையைத் தாம் தீர்ப்பதற்கு தயார் ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் தான் தடையாக இருக்கின்றனர் என்று இவை சொல்லிவருகின்றன. இதன் அர்த்தம் என்ன? தமிழ் மக்களை பலமற்ற ஒரு தரப்பாக ஆக்கிவிட்டால் தாம் விரும்பியவாறு அவர்களைக் கையாள முடியும் என நினைக்கிறார்கள். இப்பொழுது மலையக்கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் எப்படிக் கையாளுகின்றனரோ அதேபோல அல்லது அதையும் விட கீழாக தமிழ் மக்களைக் கையாண்டு விடலாம் என்றே கருதுகின்றனர்.

இதற்கு விடுதலைப்புலிகளைக் குற்றம் சுமத்தி அவர்களால்தான் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என இவர்கள் சொல்லி வருகின்றனர். உண்மையில் இதன் பொருள் என்னவென்றால் விடுதலைப்புலிகளை இலகுவில் கையாள முடியாமல் இருக்கிறது என்பதுதான். இலகுவில் கையாளக்கூடிய பாரம்பரியத்தைக் கடந்தவர்கள் விடுதலைப்புலிகள் என்பதுதான் சிங்களத் தலைமைகளின் தீராப்பிரச்சினை.

நினைத்த பாட்டுக்கு தமிழ்மக்களை பயன்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருக்கிறார்கள் என்பது சிங்களத்தரப்புக்கு ஜீரணிக்கவே முடியாத ஒரு விவகாரம். விகிதாசாரத்தைப் பொறுத்தவரையில் சிறுபான்மையாக இருக்கிற ஒரு இனம் இப்படிச் சவாலாக இருப்பதென்பது அவர்களின் உளவியலைப் பாதிக்கிறது. இங்கேதான் அடிப்படைப் பிரச்சினையுண்டு. இந்த உளவியற் சிக்கல்தான் இனப்பிரச்சினையின் மையமே.

இனவிவகாரங்கள் மற்றும் சமூகவியல் ஆய்வாளர்களின் தெரிவிப்பின்படி இவ்வாறான சமூகங்களில் இந்த மாதிரியான உளவியற்சிக்கல் தீர்க்க முடியாத அளவுக்கு ஆழமாக வேரோடியிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இபபோது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு எதிராக புதிய ஒரு மாற்று அரசாங்கத்தை விரைவில் அமைக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். கொழும்பிலும் இது தொடர்பான அசைவியக்கம் மெல்ல சூடுபிடித்து வருகின்றது. மீண்டும் ரணில் தன்னுடைய பழைய குதிரையைக் கொண்டுவந்து முன்னிறுத்தப் போகிறார். இனப் பிரச்சினையைத் தான் கட்டாயம் தீர்ப்பேன் என்று கதைவிடப்போகிறார்.

தமிழர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்ற மாதிரி.

ஆனால், தமிழர்களுக்கு இவற்றுக்கப்பால் ஒரு பிரச்சினை உண்டு. அதை இந்த இனப் பிரச்சினையின மூலம் ஆழமாக உருவாக்கி விட்டிருக்கிறது சிங்களத்தரப்பு. போரோ சமாதானமோ எதுவாக இருந்தாலும் அவற்றின் நிலையற்ற தன்மையால் தமிழர்கள் எதனையும் உறுதியாகச் செய்யமுடியாமலும் எதனையும் திட்டமிட முடியாமலும் உள்ள நிலையின் விரிவாக்கம் அது.

தனிநபரிலிருந்து நிறுவனங்கள் வரையில் இந்த நிலைக்காளாகியுள்ளன. எந்தத்திட்டங்களையும் வரைய முடியாத அளவுக்கு, எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு தமிழர்களை முடக்குவதே இதன் நோக்கம். இப்படித் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூகத்தை முடக்கி வைப்பதன் மூலம் அதனை பின்தள்ளிவிடலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஒடுக்குமுறையின் பிரதான உத்திகளில் இது பிரதானமானது.

கண்ணுக்குத்தெரியாத இந்த வலையமைப்பின்மூலம் ஒரு சமூகத்தை அதன் இருப்பு நிலையில் இருந்து அகற்றுவது அல்லது நசுக்கி விடுவது என்ற ஆதிக்கத் தரப்பின் நிலைப்பாடு இது. இதற்கு வெளிப்படையான ஆதாரங்களில்லை. இதனால் வெளியுலகில் இந்தப்பிரச்சினையை இலகுவாக பகிரங்கப்படுத்த முடியாது.

ஆனால், போராடும் சமூகத்தை நசுக்குவதற்கான உயர்தபட்ச வலு இந்த அணுகுமுறைக்குண்டு. இதனால், இந்த அணுகுமுறையை ஒடுக்குமுறையாளர்;கள் முக்கியமாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களின் ஆணிவேர் வரையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மிக நுட்பமாக இந்தக்காரியம் நிகழ்த்தப்படுகிறது.

தமிழரின் பிரதேசத்தில் எந்தவிதமான அபிவிருத்திப்பணிகளையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது என்று சர்வ தேசத் தொண்டர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு இந்த அமைப்புகள் தெரிவித்திருக்கின்ற பிரதான காரணம் போர் என்பதே. இந்தப்போரை திட்டமிட்டு அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. போரைக் காரணம் காட்டி அது பொருளாதாரத்தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் நேரடியாகவே மக்களைப்பாதிக்கும் வகையில் விதித்திருக்கிறது.

மக்களின்மீது நெருக்கடியைக்கொடுப்பதே இதன் பிரதான நோக்கம். மக்களைப் பலவீனப்படுத்துவதன் மூலம் போராட்டத்தைப் பின்னடைய வைக்கலாம் என அரசு கருதுகிறது.

அபிவிருத்தித் திட்டங்களோ, உற்பத்தியோ, போக்குவரத்தோ, தொடர்பாடலோ சகலதும் மக்களுக்குரிய அத்தியாவசியத் தேவைக்குரியவை. அவற்றின்மீது கைவைப்பதென்பது நேரடியாக மக்களைப் பாதிப்புக்குள்ளாக்குவதாகவே அமையும். இதைத் தெரிந்து கொண்டே திட்டமிட்டுச் செயவதுதான் மிகப்பயங்கரமான ஒடுக்குமுறை.

இப்படி எதையும் திட்டமிடவும் தீர்மானிக்கவும் முடியாத நெருக்கடி நிலையைத் தமிழருக்கு ஏற்படுத்திய சிங்களத்தரப்பு இப்போது அடுத்த கட்டத்தை எப்படி நகர்த்துவதென்று தெரியாமல் இறுகிப்போயிருப்பதுதான் வேடிக்கையானது. இதைத்தான் ஒரு விளைவுக்கான எதிர் விளைவு என்பது. அவர்கள் விதைத்ததே அவர்களே அறுப்பது என்பதும்.

பல வகையிலும் அடிபட்டு கடுமையான சேதத்திற்குள்ளாகியிருக்கும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.