Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள்''

Featured Replies

''இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள்''

-நா.யோகேந்திரநாதன்-

இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெறுவது ஒரு போர்கால நடைறையாகத் தொடர்ந்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு முறைப்பாடு செய்வதும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு வாக்களிப்பதும் வழமையான சம்பவங்கள்.

ஆனால், மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை அது மட்டுமன்றி அண்மைக்காலத்தில் இடம் பெற்ற தாக்குதல்களில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தன. இதன் காரணமாக தமிழகமே கொதித்தெழுந்தது. மத்திய அரசு கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. சிறிலங்கா அரசோ தங்கள் கடற்படைக்கும் இந்தக்தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மீண்டும் மீண்டும் மறுத்து வந்தது.

அது மட்டுமன்றி இது விடுதலைப் புலிகாளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் எனவும் சிறிலங்கா அரசு கூறி வந்தது. சிறிலங்காவின் இத்தகைய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியக் கடற்படைத் தளபதியும் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், தமிழக மீனவர்களோ இவ்விசயத்தில் மிகவும் தெளிவாகவே இருந்தனர். எனவே, அவர்களின் போhராட்டங்கள் முனைப்படைந்தன. இத்தகைய நிலையில் தழிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக தென்னிந்திய கரையோரக் காவல்படையின் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதனையடுத்து இந்தியக் கடல் எல்லைக்குள் ஆயுதமேந்திய சிங்களவர்கள் இந்தியக் கரையோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தாங்கள் சிங்கள மீனவர்கள் எனவும் தமிழக மீனவர்களால் தங்கள் மீன்பிடி பாதிக்கப்படுவதால் தாங்களே தமிழக மீனவர்கள் மேல் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் மேல் தமிழக நிதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இப்பிரச்சினை ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டது போல் தோற்றம் அளித்த போதும் இச்சம்பவங்களின் பின்னால் பல கேள்விகள் எழச் செய்கின்றன.

இவர்கள் உண்மையில் சிங்கள மீனவர்கள் தானா? இவர்கள் தான் தமிழக மீனவர்கள் மீதான படுகொலைகளை நடாத்தியவர்களா? அப்படியானால் இவர்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் சம்பந்தம் உண்டா? இவர்களுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் தொடர்பு உண்டா? இப்படுகொலைகளுக்கு பின்னால் அரசியல் நோக்கம் உண்டா? இத்தகைய கேள்விகளுக்கு விளக்கம் தேடுவோமானால் பல விடயங்கள் வெளிவரும்.

ஒரு காலத்தில் கடற்படையினர் ஈழக்கடலெங்கும் வெறிகொண்டு திரிந்து வகை தொகை இன்றி தமிழீழ மினவர்களை வேட்டையாடி வந்தனர். இதனால் ஏராளமான தமிழ் மீனவர்கள் உயிர் இழந்தும் காணாமற் போயும் பெரும் அவலங்களை சந்தித்தனர். அது மட்டுமன்றி கடலில் இருந்து கடற்படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக பல கரையோரக் கிராமங்களில் பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டன ஆனால், கடற் புலிகளின் எழுச்சியினால் இத்தகைய கொடுமைகளை முற்றிலும் இல்லாமற் செய்ய முடியா விட்டாலும,; ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. கடற்படையினரும் பேரழிவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை எழுந்தது.

அதாவது சிறிலங்கா அரசுக்கு விடுதலைப்புலிகளின் கடற்படை சிம்ம சொப்பனமாகவே விளங்கி வருகின்றது. எனவே சிறிலங்கா அரசு தரப்பு கடற்புலிகளின் பலத்தை இல்லாமற் செய்வதை ஒரு முக்கிய தேவையாகக் கருதுகிறது.

அதே வேளையில், முன்னாள் சனாதிபதி ஜே .ஆர் ஜெயவர்த்தனா காலத்திலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையே முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவதில் சிறிலங்கா மிக அக்கறையுடனும் தீவிரத்துடனும் செயற்பட்டு வருகின்றது. அதையும் கூட விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகப் பாவிக்கும் முயற்சிகளை எடுத்துவருகின்றன.

விடுதலைப்புலிகளின் கடற்பலத்தை அழிப்பது விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையில் முரண்பாடுகளையும் மோதல்களையும் ஏற்படுத்துவது என்ற இரு நோக்கங்களையும் நிறைவேற்ற சிறிலங்கா அரசு கண்டு பிடித்த ஒரு ஆயுதம் தான் சிறிலங்கா இந்தியக்கடற்படை கூட்டு ரோந்து. இதன் மூலம் விடுதலைப்புலிகளின் கடல் நடமாட்டங்களை கட்டுப்படுத்தவும், இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மோதல்களை ஏற்படுத்தவும் இந்த கூட்டுப்படை ரோந்தை சிறிலங்கா அரசு பயன்படுத்த திட்டமிட்டது.

இதற்கான முயற்சிகள் வெகுதீவிரமாக ராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோரின் இந்திய விஜயங்களின் போது சிறிலங்கா தரப்பால் இந்தக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. எனினும் இந்தியா இவ்விசயத்தில் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கின்றது. இந்தக் கூட்டுப்படை ரோந்து அமுலாக்கத்துக்கு தமிழக முதல்வர் உட்பட தமிழகத்தின் ஏனைய பல தலைவர்களும் பலத்த எதிர்ப்பை தெரிவித்தள்ளனர். இதன் காரணமாக சிறிலங்கா அரசின் நோக்கம் நிறைவேற்றப்பட முடியவில்லை.

எனவே இந்த கூட்டுப்படை ரோந்துக்குத் தேவை ஏற்படும் வகையிலான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டிய தேவை சிறிலங்கா அரசிற்கு எழுந்தது. அதன் விளைவாக எழுந்தது தான் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடத்தியவர்கள் சிங்கள மீனவர்கள் எனவே தெரிவித்துள்ளனர். இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. கடலில் வைத்து இலக்குத் தவறாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமளவுக்கு இவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களா? எனவே இவர்கள் நிச்சயமாக சாhதரன மீனவர்களாக இருக்க முடியாது.

சிறிலங்கா அரசிடம் ஊர்காவல்படை, வனப்பாதுகாப்புப்படை, துணை இராணுவக்குழுக்கள் என பல ஆயுதக் குழுக்கள் உண்டு. எனவே, இத்தாக்குதல்களை நடாத்தியவர்கள் இத்தகைய குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது சீருடை அணியாத கடற்படையினராக இருக்க வேண்டும், அதாவது சிறிலங்கா அரிசின் ஆசியுடனும் அனுசரணையுடனும் செயல்படுபவர்களாகவே இருக்க வேண்டும். ஏற்கனவே சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர். என்ற செய்தியில் சம்பந்தப்பட்டவர்கள் கூட சாதாரண சிங்கள மீனவர்களாக இருக்க முடியாது.

இறுதியில் சிங்கள மீனவர்கள் இந்தியக் கரையோரப் படையினாரல் கைது செய்யப்படும் வரை சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடாத்தி வருவதாகக் கூறி வந்தது.

சிறிலங்கா அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தனது படைகள் மூலமாக மேற்கொண்ட அதே வேளையில் விடுதலைப் புலிகள் மேல் பழியைப் போடுவதன் மூலம் கூட்டுப்படை ரோந்தின் மூலமே தமிழக மீனவர்களக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்ற ஒரு கருத்துருவாக்கத்தை உண்டாக்க முயன்றது.

இந்திய கடற்படை தளபதி கூட ஓரளவிற்கு இதை நம்பும் நிலையும் ஏற்பட்டது. ஆனால், இந்தியக் கரையோரக் காவல்படையினரால் சிறிலங்கா ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து சிறிலங்கா அரசின் சதி அம்பலத்துக்கு வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தின் ஆதரவு பெருகி வரும் காலகட்டங்களில் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் சதி முயற்சிகளில் சிறிலங்கா அரசு இறங்கத் தவறுவதில்லை. இதற்கு சில இந்திய பிராமணிய ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களும் துணை போகின்றன.

ஆனால், சிறிலங்கா அரசின் இத்தகைய முயற்சிகள் தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் உறுதியான நிலைப்பாடும் பழ. நெடுமாறன், வை.கோ, திருமாவளவன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் உடனுக்குடன் எடுக்கும் நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசின் சதி நடவடிக்கைகளை முறியடித்து வருகின்றன.

இந்தியக் கடலில் சிறிலங்கா ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டன. ஆனால், இவை முற்றாக முடிவுக்கு வந்துவிடும் என கூறமுடியாது.

இந்தியாவுக்கும் விடுதலைப்பலிகளுக்கும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை வேறு ஒரு வடிவத்தில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் என்பது நிச்சயம். மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும,; காணாமற் போதல்கள் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் என்பன தொடர்பாகவும் சிறிலங்கா அரசு படுமோசமாக அம்பலப்பட்டுப் போய் நிற்கும் இவ்வேளையில் இந்தியா -விடுதலைப்புலிகள் உறவில் கசப்பை ஏற்படுத்த சிறிலங்கா அரசு எடுக்கும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடியும் என்பது நிச்சயம்.

மூலம் - ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.