Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுவான்கரையில் இடம் பெயர்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு உடைமைகள் சூறை

Featured Replies

படுவான்கரையில் இடம் பெயர்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு உடைமைகள் சூறை

மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் இராணுவ நடவடிக்கையால் மக்கள் இடம் பெயர்ந்த அனைத்துப் பகுதிகளிலும் அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டு உடமைகள் முற்றாகச் சூறையாடப் பட்டுள்ளதுடன் சகல அரச அலுவலகங்களும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

வெல்லாவெளி பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக வெள்ளிக்கிழமை படுவான்கரைப் பகுதிக்குச் சென்று திரும்பிய அரச அதிகாரிகளே இதனைத் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட மேலதிக அரச அதிபர் மகேசன் தலைமையில் சென்ற உயர் மட்ட அதிகாரிகள் அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்.

படுவான்கரையில் பாலையடிவெட்டை, வெல்லாவெளி கண்டுமணி வித்தியாலயம் வரைக்கும் இவர்கள் சென்றுள்ளனர். இராணுவ நடவடிக்கையால் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு நகரில் தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்ற மக்களை மீள் குடியேற்றம் செய்யக் கூடிய சூழ்நிலையை ஆராயும் பொருட்டே இக்குழுவினர் அங்கு சென்று திரும்பியுள்ளார்கள்.

இந்த விஜயத்தின் போது பாடசாலை, வைத்தியசாலை, மின்சாரம், வீதி, பிரதேச செயலக, நீர்பாசன, பலநோக்கு கூட்டுறவுச் சங்க மற்றும் கமநலசேவையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் அங்கு சென்றிருந்தனர்.

இவர்கள், இங்கு அரச கட்டிடங்களான பிரதேச செயலகம், பிரதேச சபை பாடசாலை, வைத்தியசாலை போன்றவற்றையும் ப.நோ.கூ. சங்கங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இதில், அனைத்து கட்டிடங்களின் கதவுகளும் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். போரதீவு பாடசாலை கட்டிடம் முற்றாக உடைக்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பிரதேச செயலகம் உடைக்கப்பட்டு பல கணினிகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பழுகாமம் சமுர்த்தி வங்கியில் ஷெல் வீழ்ந்து வெடித்துள்ளதால் கட்டிடம் சேதமடைந்துள்ளது.

பொதுமக்களின் பௌதீக வளங்களுக்கு பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தாலும் தாம் சென்ற பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர். இதனால், மக்களின் பொருட்கள் களவாடப்பட்டிருக்கலாம் எனவும் அக்குழுவினர் தெரிவித்தார்.

கால்நடைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாது எனவும் சந்திகளில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபிகள் அனைத்தும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தாம் சென்ற பகுதியில், 27 வயோதிபர்கள் அவர்களின் வீடுகளில் இருப்பதாக அங்குள்ள இராணுவத்தினர் இக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்கள். இப்பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு பூசகர்கள் சென்று பூசை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் தற்போது மீள்குடியேற்றம் செய்யக் கூடியதாகவுள்ளது. மக்கள் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டால் எஞ்சியுள்ள சில உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன் மக்கள் மீள் குடியேற்றம் செய்வதன் மூலம் அடிப்படை மற்றும் உட்கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இடம்பெயர்ந்துள்ள மக்கள் மழை, வெயில் என பல்வேறு இன்னலுக்கும் முகம் கொடுக்கும் வேளையில் அவர்களை சொந்த இடங்களில் குடியேற்றம் செய்வதால் அவர்களின் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குழுவினர் மேற்படி பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டாலும் எப்போது மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்ற இறுதி திகதி எதுவும் படைத்தரப்பினரால் வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் 150,000 க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

பாலையடிவெட்டை, கட்டெறும்பு, வெல்லாவெலி பகுதிகளில் மூன்று விசேட அதிரடிப்படை முகாங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.