Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறத்தொடங்கியுள்ள காட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறத்தொடங்கியுள்ள காட்சிகள்

அர­சி­யலில் எப்­போதும் எதிர்­பா­ராத விட­யங்கள், எதிர்­பார்க்­காத சந்­தர்ப்­பங்களில் இடம்­பெறும் என்­பதே யதார்த்­த­ம். அப்­ப­டித்தான் வர­லாறு முழு­வதும் நடந்­துள்­ளது.  தற்­போ­தைய  அர­சியல் சூழ­லிலும்  அவ்­வா­றான  எதிர்­பார்க்­காத விட­யங்கள், எதிர்­பாரா­த­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.   அந்­த­வ­கையில்  தற்­போ­தைய சூழலில் ஜனா­தி­பதி தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற பின்­ன­ணியில் அர­சி­யலில் ஆங்­காங்கே காட்­சிகள் மாற ஆரம்­பித்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.   ஜனா­தி­பதி  தேர்­தலை நோக்­கிய  ரா­ஜ­தந்­திர நகர்­வு­களும் காய்­ந­கர்த்­தல்­களும் ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே இவ்­வாறு காட்­சிகள் மாற ஆரம்­பித்­துள்­ளதை  அவதானிக்க  முடி­கின்­றது. 

அர­சி­யலில் இவ்­வாறு  இடம்­பெ­று­வது  வழ­மை­யா­ன­துதான். கடந்த 2014 ஆம் ஆண்டில்  அப்­போ­தைய ஜனா­தி­ப­தியை எதிர்த்து  மைத்­தி­ரி­பால சிறி­சேன  கள­மி­றங்­குவார் என்று  எவரும் எதிர்­பார்க்­க­வில்லை. அது அன்­றைய திக­தியில் அர­சி­யலை பொறுத்­த­வரைப்  பாரிய அதிர்ச்சி வைத்­தி­ய­மாகக் காணப்­பட்­டது. அவ்­வாறு தேசிய மட்ட பிர­தான தேர்­தல்கள் நெருங்­கும்­போது அர­சி­யலில்,  அர­சி­யல்  காட்­சிகள் மாறு­வ­துடன் பாரிய  அதிர்ச்சி வைத்­தி­யங்­களும் இடம்­பெ­றவே செய்­கின்­றன. 

தற்­போ­தைய சூழலில்    ஜனா­தி­பதி  தேர்தல் விட­யத்தில்  மூன்று தரப்­பி­லி­ருந்து   பிர­தான வகையில் வேட்­பா­ளர்கள்  வெளிப்­பட ஆரம்­பித்­துள்­ளனர்.  ஐக்­கிய தேசியக் கட்சி  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும்  சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வேட்­பா­ளர்கள் கள­மி­றங்க தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.   ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை பிர­தமர் ரணில் விக்­ர­ம­ சிங்க, அமைச்சர் சஜித் பிரே­ம­தாச, சபா­நா­யகர்  கரு ஜய­சூ­ரிய மற்றும்  சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரின் பெயர்கள்  அதிகளவில் பேசப்­ப­டு­கின்­றன.  அதே­போன்று   பொது­ஜன பெர­முன   தரப்­பி­லி­ருந்து கோத்­த­பாய ராஜ­பக்ஷ,  பஷில் ராஜ­பக்ஷ, சமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட சிலரின் பெயர்கள் கூறப்­ப­டு­கின்­றன. சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரும் அடி­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால்   யாரு­டைய பெயரும்  இது­வரை உறு­தி­யாக  வெளிவ­ர­வில்லை. 

ஆனால் எந்­த­வொரு வேட்­பா­ளரும் இது­வரை உறு­தி­யாக அறி­விக்­கப்­ப­டாத நிலையில் பல்­வேறு  தரப்­பி­னரும்  என்ன நடக்­கப்­போ­கின்­றதோ  என்று அங்கலாய்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  சுதந்­திரக் கட்­சியைப் பொறுத்­த­வரை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  மீண்டும் போட்­டி­யி­ட­வேண்டும் என்று கோரப்பட்டு வ­ரு­கின்­றது.  இது தொடர்பில் அக்­கட்­சியின் எம்.பி.க்கள் ஜனா­தி­ப­தி­யிடம் மகஜர் ஒன்­றையும்  அண்­மையில்  சமர்ப்­பித்­தி­ருந்­தனர். ஆனால் இது­வரை ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  இந்த விடயம்   தொடர்­பாக எத­னையும்  கூறா­ம­லேயே இருந்­து­ வ­ரு­கின்றார். அதுவுமன்றி,  அண்­மை யில் நிகழ்வு ஒன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி எதிர்­வரும்  ஜனா­தி­பதி தேர்­தலில் கௌர­வ­மான தீர்­மானம் ஒன்றை  எடுப்­ப­தாக அறி­வித்­தி­ருந்தார். எப்­ப­டி­யி­ருப்­பினும்  எதிர்­வரும்  தேர்­தலில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  போட்­டி­யிட்­டாலும் போட்­டி­யி­டா­விட்­டாலும்  தீர்­மா­ன­மிக்க  கார­ணி­யாக இருப்பார் என்­ப­தனை உறு­தி­யாகக் கூற முடியும். 

மறு­புறம் ஐக்­கிய தேசிய கட்­சியும் இன்று இந்த ஜனா­தி­பதி தேர்தல் விட­யத்தில்  பாரி­ய­ளவில் பேசப்­பட்­டு­ வ­ரு­கின்­றது.  காரணம் ஐக்­கிய தேசிய கட்சி  இன்று ஆளும் கட்­சி­யாக இருக்­கின்ற  சூழலில் அதன் வேட்­பாளர் யார் என்­பதில் அனை­வரும் ஆர்வம்  செலுத்­து­கின்­றனர்.   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க   அடுத்த ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யிட தயா­ரா­கி­ வ­ரு­கின்றார் என்­பது நன்­றாகத்  தெரி­கின்­றது. அவர் தற்­போது அர­சி­யலில்  அதனை நோக்கி  ஆழ­மாக பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்றார். கடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்­டு­களில்  ரணில் விக்­ர­ம­சிங்க  ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டாமல்   விட்­டுக் கொ­டுத்தார். அதன்­படி இம்­முறை  அவர்  அந்த சந்­தர்ப்­பத்தை விட்­டுக்­கொ­டுக்க தயார் இல்லை என்றே தெரி­கின்­றது. 

எனினும் அவ­ருக்குத் தற்­போது கட்­சிக்­குள்­ளி­ருந்தே பாரிய சவால்கள் எழுந்­துள்­ளன என்­பதே உண்­மை­.  அதிலும் இது­வரை காலமும் ரணில் விக்­ர­ம­சிங்­கவே  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்குப் பொருத்­த­மா­னவர் என்று கூறிக்­கொண்­டி­ருந்த மங்­கள சம­ர­வீர  தற்­போது  திடீ­ரென சஜித் பிரே­ம­தா­சவின் பக்­கம் சாய்வது இங்கு கவ­னிக்­கத்­தக்­கது. ரணில் பக்கம் இருந்த  மங்­கள சம­ர­வீர தற்­போது திடீ­ரென   சஜித்தின் பக்கம் குத்­துக்­க­ரணம் அடித்­துள்ளார்.   தற்­போது அமைச்சர் சஜித் பிரே­ம­ தா­சவை  ஜனா­தி­பதி  வேட்­பாளர் என்ற ரீதியில்  மங்­கள ஊக்­கு­விக்க ஆரம்­பித்­துள்ளார்.  இது அர­சி­யலில் பாரிய  கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. மறு­புறம்  சஜித் பிரே­ம­தா­சவும் தான்  தலை­வ­ரா­வ­தற்குத் தயார் என்ற விட­யத்தை கூற ஆரம்­பித்­துள்ளார். அண்­மைக்­காலம் வரை  சஜித் பிரே­ம­தாச இவ்­வாறு கூறி­யி­ருக்­க­வில்லை. எனினும் தற்­போது அவர் இந்த விட­யத்தைப் பகி­ரங்­க­மாக கூற ஆரம்­பித்­துள்ளார். எனின் எப்­படி இது சாத்­தி­ய­மா­கி­யது என்­பதே  கேள்­வி­. மங்­கள,  கடந்­த­கா­லங்­களில் ரணில்­வா­தி­யா­கவே இருந்­து­வந்தார் என்­பது அனை­வ­ருக்கும்   தெரியும். மங்­கள சம­ர­வீர  அர­சி­யலில்  பாரிய அனு­பவம் வாய்ந்­தவர். 

அதிலும்  கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­பதில் கைதேர்ந்­தவர். 2005ஆம் ஆண்டு  மஹிந்த ராஜ­பக்ஷவின் வெற்­றியில்    மங்­கள  சம­ர­வீர பாரி­ய­ளவில் பங்­காற்­றி­யி­ருந்தார். அதே­போன்று 2010ஆம் ஆண்டில்   ஐக்­கிய தேசிய கட்­சி­யையும்  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யையும் ஒரே மேடையில்  ஏற­வைத்த சாத­னையை  மங்­கள  நிகழ்த்­தி­யி­ருந்தார். அவ்­வா­றான  மங்­கள சம­ர­வீ­ரவே கடந்த காலம்  முழு­வதும்  ரணிலை ஆத­ரித்து வந்தார். ஆனால் தற்­போது  திடீ­ரென  சஜித்தை  ஊக்­கு­விக்க ஆரம்­பித்­திருக்கிறார்.

இது தொடர்பில் ஆராய்ந்­ததில்  அண்­மைக்­கா­ல­மாக   பிர­த­ம­ருக்கும் நிதி­ய­மைச்­ச­ராக இருக்கும் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கும் இடையில்  சில முரண்­டு­பா­டுகள் தோன்­றி­ய­தா­கவும்  அதனால் மங்­கள  இவ்­வாறு  சஜித் பக்கம் சரிந்துள்­ள­தா­கவும்  தெரி­கின்­றது. குறிப்­பாக  2018 ஆம் ஆண்டு  ஒக்­டோபர் மாதம் அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்ட சந்­தர்ப்­பத்தில்  மங்­கள சம­ர­வீர  ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் முழு­மை­யாக  இருந்தார். எனினும்   நெருக்­கடி முடி வுக்கு வந்­ததன் பின்னர்  மங்­கள சம­ர­வீர  நிதி­ய­மைச்சை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்­பதில் உறு­தி­யாக இருந்தார். அவ­ரிடம்  இது தொடர்பில்  பேசப்­பட்­ட­போதும் அவர் அதற்குத் தயா­ராக இருக்­க­வில்லை என்று கூறப்­பட்­டது. எனவே  இந்த சந்­தர்ப்­பத்தில்  முரண்­பா­டுகள்  ஆரம்­பித்­தி­ருக்­கலாம். 

இந்த நிலையில்  ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள்   வேட்­பாளர்  தொடர்பில்  இறுதி முடிவு எடுக்­காத நிலை நீடிக்­கின்­றது.  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில்  இருக்­கின்ற பங்­காளிக் கட்­சிகள் சபா­ நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரி­யவை  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­வேண்டும் என்று கோரி­வ­ரு­கின்­றன. முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி என்­பன  கருவை கோரு­கின்­றன. ஆனால் மறு­புறம்  ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் மற்­று­மொரு தரப்­பினர் சஜித் பிரே­ம­தா­சவை  பகி­ரங்­க­மாக ஆத­ரிக்­கின்­றனர். அதே­போன்று  மற்­று­மொரு தர­ப்­பினர்  ரணில் விக்­ர­ம­சிங்­கவே வேட்­பா­ள­ராக வேண்டும் என  கோரி­வ­ரு­கின்­றனர். அகிலவிராஜ் காரி­ய­வசம், ரவி கரு­ணா­நா­யக்க,  கயந்த கரு­ணா­தி­லக்க உள்­ளிட்ட தரப்­பினர் ரணிலை ஆத­ரித்­து­வ­ரு­கின்­றனர். எனவே  ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்குள் ஜனா­தி­பதி  வேட்­பா­ளரைத்   தெரிவு செய்­வதே  பாரிய சவா­லான விட­ய­மா­க­வுள்­ளது.   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவைப்  பொறுத்­த­வரை இந்த சந்­தர்ப்­பத்தை  விட்­டுக்               ­கொ­டுப்பார் என்­பது கடி­ன­ம். அவர் இம்­முறை  போட்­டி­யி­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றார்.  ஆனால்  கட்­சிக்குள் பல  நிலைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. எனவே  வரப்­போ­கின்ற மாதங்கள், வாரங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை பொறுத்­த­வரை சவால்­மிக்­க­தா­கவே உள்­ளன என்­பதே உண்­மை­. எந்த அர­சியல் மாற்­றமும் நடக்­கலாம். கடந்த 1994  ஆம் ஆண்­டி­லி­ருந்து ஐக்­கிய தேசியக் கட்­சியில்  ஜனா­தி­பதி உரு­வா­க­வில்லை.   இறு­தி­யாக  ஐக்­கிய  தேசிய கட்­சியில்  ரண­சிங்க பிரே­ம­தா­சவே  ஜனா­தி­ப­தி­யாக இருந்தார். கடந்த இரண்டு முறை­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ளர் கள் கூட போட்­டி­யி­ட­வில்லை. எனவே ஐக்­கிய தேசியக் கட்சி இம்­முறை  பாரிய  முயற்­சியை  முன்­னெ­டுக்கும் என்றே  தெரி­கின்­றது. எனினும்  சவால்­களைத்  தாண்டி அனை­வ­ரதும் இணக்­கப்­பாட்­டுடன் ஒரு­வரை வேட்­பா­ள­ராக  கள­மி­றக்­க­வேண்­டிய  தேவை  ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உள்ளது. . 

அதே­போன்று மஹிந்த தரப்­பிலும் ஜனா­தி­பதி வேட்­பா­ளரைத்  தெரிவு செய்­வது  சவால்­மிக்க ஒன்றா­கவே உள்­ளது. பெரும்­பாலும்   கோத்­த­பாய  ராஜ­பக்ஷவே மிக அதி­களவில் கூட்டு எதி­ரணி பக்கம் பேசப்­பட்­டு­ வ­ரு­கின்றார்.  கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிப்­போரில் அதி­க­மா­னோர் கோத்­த­ பா­ய­வையே ஆத­ரிக்­கின்­றனர். ஆனாலும்  அங்கும்  மாற்றுக் கருத்­துக்கள் உள்­ளன. நூறு வீதம் அங்கு ஒரு­மித்த கருத்­துக்கள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. ஆனாலும் பெரும்­பா­லா­னோர்  கோத்­தா­வையே ஆத­ரிக்­கின்­றனர் என்­பது மட்டும்   தெரி­கின்­றது.  எனினும் இது குறித்த இறுதி தெரிவை  முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷவே   எடுப்பார் என்று  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் ஆகஸ்ட்  மாதம் 11 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொது­ஜன பெர­முன கட்­சியின்    தேசிய சம்­மே­ள­னத்தில்  யார் வேட்­பாளர் என்ற  அறி­விப்பு வெளியாகும் என்றும் கூறப்­ப­டு­கின்­றது. 

அந்தத் தரப்­பிலும்  சமல் ராஜ­பக்ஷ, பஷில் ராஜ­பக்ஷ உள்­ளிட்­டோரின் பெயர்கள் பேசப்­ப­டு­கின்­றன.  மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின்  தலைவர்  தினேஷ் குண­வர்த்­த­னவின் பெயரும் அடி­ப­டு­கின்­றது. எனினும்  இறுதி முடிவு இன்னும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதன்­படி தற்­போதே காட்­சிகள் மாறத் தொடங்­கி­யுள்­ளன.   ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் கட்­சி­களின் சார்பில் அறி­விக்­கப்­ப­டாத சூழ­லி­லேயே   காட்­சிகள் மாறத்  தொடங்­கி­யுள்­ளன.  இந்­நி­லை யில்   கட்­சி­களின் சார்பில்  வேட்­பா­ளர்கள் அறி­விக்­கப்­பட்டால் எவ்­வா­றான  தாவல்கள் நடக்கும் என்­ப­தனை எதிர்­பார்க்க முடியும்.   இதற்­கி­டையில் பொது­ஜன பெர­மு­னவும்  சுதந்­திரக் கட்­சியும்  பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்தே  தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்டும் என்ற கோரிக்கை வலுத்­து­ வ­ரு­கின்­றது. 

இது தொடர்பில் பொது­ஜன பெர­மு­னவும் சுதந்­திரக் கட்­சியும் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­விட்­டன. ஆனாலும் இது­வரை  பொது­வான கூட்­ட­ணிக்­கான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.   அதிலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­கா­ரமே  இழு­பறிநிலையில் உள்­ளது.   பொது­ஜன பெர­மு­ன­வினர்  ஜனா­தி­பதி வேட்­பாளர் தமது பக்­கத்தில் இருந்தே வர­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றனர். ஆனால் சுதந்­திரக் கட்­சி­யா­னது  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  மைத்­தி­ரி­பா­லவும்  பிர­தமர் வேட்­பா­ள­ராக    மஹிந்த ராஜ­பக்ஷவும் போட்­டி­யி­ட­வேண்டும் என்று கூறி­வ­ரு­கின்­றனர். இந்த விட­யத்தில் இரண்டு தரப்­பி­னரும் விட்­டுக்­கொ­டுக்கும் நிலையில்  இல்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத­னா­லேயே பொது­ஜன பெர­மு­னவும்  சுதந்­திரக் கட்­சியும்   பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைப்­பதில் தொடர்ந்து இழு­பறி நிலை நீடிக்­கின்­றது. 

இத­னி­டையே சிறிய கட்­சி­களும்  ஜனா­தி­பதி   தேர்­தலில் பாரிய வகி­பா­கத்தை ஏற்க­வுள்­ளன.  குறிப்­பாக  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி தேர்­தலில் எடுக்­கப்­போகும் முடிவு தீர்க்­க­மா­ன­தாக அமையும் என்­பது  யதார்த்­தம்.  அக்­கட்சி இது­வரை  அது­பற்றி   எதுவுமே பேசாமல் இருக்­கின்­றது. அதே­போன்று  முஸ்லிம் காங்­கி­ரஸும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும்  என்ன  செய்­யப்­போ­கின்­றன என்­பதும் முக்­கி­ய­மானது.  இந்த இரண்டு கட்­சி­களும் தற்­போது  ஐக்­கிய தேசிய  முன்­ன­ணியில் அங்கம் வகிக்­கின்­றன. ஆனால்   அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம். எதிர்பார்க்காதபோது எதிர்பாராத விடயங்கள் இடம்பெறலாம். எனவே தற்போதைய கூட்டுகள் எதுவும் நிரந்தரம் என்று கூறிவிட முடியாது.

இது இவ்வாறிருக்க,  மக்கள் விடுதலை முன்னணியும் இம்முறை தனித்து  வேட்பாளரை  ஜனாதிபதி  தேர்தலில் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.   அண்மைக்காலமாக  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி  20ஆவது திருத்தத்தையும்  மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் முன்வைத்தது.  தற்போது   அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அது சாத்தியமற்றது என்பது தெளிவாகியுள்ள நிலையில்   மக்கள் விடுதலை  முன்ன ணியும் வேட்பாளரை  களமிறக்க  தீர்மானித்துள்ளதாகத் தெரிகின்றது. 

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் விடயங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன என்பது நிச்சயம். கட்சிகள்  அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றன. வேட்பாளர்களாக வரமுயற்சிப்பவர்கள்  தங்களை அடையாளப்படுத்தும் பணிகளில் மும்முரமாக உள்ளனர். அந்தப் பின்னணியில்  அரசியலில் காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. ரணில் பக்கம் இருந்த மங்கள திடீரென   சஜித் பக்கம் திரும்பியுள்ளார். இனி  தொடர்ந்தும் இதுபோன்ற நகர்வுகள் இடம்பெறலாம்.  எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத விடயங்கள் திடீரென அரசியலில்  நடைபெறலாம்.  ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற நிலையில் இவற்றை அதிகளவில்  எதிர்பார்க்க முடியும். மக்களும் எதிர்பார்த்துக்   கொண்டிருக்கின்றனர். அடுத்த  ஆட்சியை தீர்மானிக்கப்போகின்ற தமது வாக்கைப் பயன்படுத்த மக்களும் தயாராகவே இருக்கின்றனர் என்பதே   நிதர்சனம். 

ரொபட் அன்­டனி 

 

https://www.virakesari.lk/article/60831

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.