Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்புக்காக மின் துண்டிக்கும் சமயங்களில்

Featured Replies

பாதுகாப்புக்காக மின் துண்டிக்கும் சமயங்களில்

ஜெனரேட்டர்களை இயக்காதீர் என அறிவுறுத்து

உல்லாச விடுதிகளில் இதனால் பெரும் திண்டாட்டம்

கொழும்பு, ஏப். 30

பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசு கொழும்பு நகரில் இருட்டடிப்பை (மின்வெட்டு) செய்யும் வேளைகளில் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் உட்பட தொழில் நிறுவனங்களும் தமது ஜெனரேட்டர்களை இயக்கி வெளிச்சமேற்படுத்த முற்படக்கூடாது.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனால் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் பலமணி நேரங்கள் இருளில் மூழ்கடிக்கப்படுவதால் உல்லாசப் பயணிகளுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி உள்ளதோடு, உல்லாசப் பிரயாணத் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர் வான் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பீதியே இப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் மீது இரண்டாவது தடவையாகத் தாக்குதல்களை நடத்த முயற்சித்தபோது நள்ளிரவு வேளையில் திடீரென இரண்டு மணி நேரம் மின் துண்டிக்கப்பட்டு கொழும்பு நகரம் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

இதனால் தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இதனால் பெரும் பீதிக்கு உள்ளாக்கப்பட்டனர்.

"மெழுகுவர்த்திகளின் துணையுடனேயே சிறிய வெளிச்சங்களை ஏற்படுத்த முடிந்தது. இது உல்லாசப்பயணிகளுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி விட்டது' என்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் கூறினார்.

இதேபோன்று நேற்று அதிகாலை வேளை தலைநகரின் கேந்திர நிலையங்கள் மீது வான் புலிகள் தாக்குதல் நடத்திய போதும் இவ்வாறு இரண்டு தடவைகள் அரசினால் இருட்டடிப்பு மேற்கொள்ளப்பட்டது.

வான் புலிகள் இவ்வாறு தாக்குதல்களை நடத்தும்போது அவர்களது விமானங்களை இனங் கண்டு எதிர்த்தாக்குதல் நடத்தி அதனை முறியடிப்பதற்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது. இவ்வேளையில் உல்லாசப் பிரயாண ஹோட்டல்களோ அல்லது தொழில் நிறுவனங்களோ மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர்களை இயக்கி வெளிச்சம் ஏற்படுத்த முற்பட்டால் அது தமது இராணுவ நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் ஹோட்டல் நிர்வாகங்கள் இவ்விடயம் தொடர்பாக தமது வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

உல்லாசப் பிரயாணிகள் பாதுகாப்பு உஷார்ப்படுத்தும் வேளைகளில் தமது அறைகளின், கேட்டின் சீலைகளை முற்றாக மூடிவிட வேண்டும் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாகனங்கள் எதுவும் ஹோட்டல்களுக்கு உள் நுழைவதற்கோ ஹோட்டல்களில் இருந்து வெளியேறுவதற்கோ அனுமதிக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் உல்லாசப் பிரயாணத்துறைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் பல மாடிகளைக் கொண்ட ஹோட்டல்களில் மின் உயர்த்திகளுக்குப் பதிலாக எந்த வகையிலான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது என உல்லாச ஹோட்டல் நிர்வாகங்கள் தடுமாறிப்போயுள்ளன

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.