Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் எந்தச் சவாலையும் சந்திப்பதற்கு அரசு தயார்'

Featured Replies

புலிகளின் எந்தச் சவாலையும் சந்திப்பதற்கு அரசு தயார்'

விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் சந்திப்பதற்கு முழுஅளவில் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை கொழும்பிலும் அதனை அண்மித்த புறநகர்ப் பகுதியிலும் புலிகள் நடத்திய வான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

"விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் சவால்களை சந்திக்கும் முழு ஆற்றலையும் அரசாங்கம் கொண்டுள்ளது.

தேசத்தின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்கம் மீண்டும் தனது உறுதிப்பாட்டை வழங்குகிறது.

கடந்த மாதம் முதல் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் தாழப்பறந்து வந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அவற்றை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கென படையினர் குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் விமானங்களை அழிக்கும் நோக்கில் நேற்று அதிகாலை கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் விமானப் படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் விமானங்கள் வருவது தொடர்பாக தகவல் கிடைத்தபோது அது 20 கடல் மைல் தூரத்திலேயே இருந்துள்ளது. இந்தத் தகவலுடன் தன்னியக்க பாதுகாப்பு கருவிகள் இயங்கிவிட்டன. அதனால் அந்த விமானம் தப்பிச் செல்வதை தவிர வேறெதுவும் செய்யவில்லை.

அவ்வாறு தப்பிச் செல்லும்போது வீசப்பட்ட குண்டுகள் வெடித்து சிறிது சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், உயிர்ச் சேதங்கள் எதுவும் நிகழவில்லை.

அதேநேரம், விமானப் படை விமானங்கள் விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தன. அவை இரணைமடுப் பகுதியில் தரை இறங்கின. அப்போது அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இலகு ரக விமான அச்சுறுத்தல்கள் விரைவில் நீங்கிவிடும். அது தொடர்பாக அரசாங்கமும் படைத்தரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து நாட்டை பாதுகாக்கும் பணியில் முழு அளவில் ஈடுபட்டுள்ளது.

தினக்குரல்

:icon_idea::) :P :P :lol::lol:

ஹாஹா

எத்தனையோ சவால்கள் வான்புலிகள் விடுகீனம் ஆனால் ஒண்டையும் செய்ய துப்பில்லை அதுக்குள்ள வாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.