Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயவை நாடியோர் தடம் புரள்கின்றனர்

Featured Replies

தயவை நாடியோர் தடம் புரள்கின்றனர்

"இது எந்தப் பேயின் சட்டம்? இது என்ன சட்டம்? இதன் பலாபலன் தான் என்ன? உதுதானா ஜனநாயகம்? உதுதானா மனித உரிமை? இது தானா நீங்கள் கூறும் ஐந்து நட்சத்திர ஜனநாயகம்? தினமும் வானொலியில் போதிக்கும் தர்மம் இது தானா? சனிக்கிழமைகளில் ஓதும் வேதம் இதுதானா? இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக - இந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக - கடவுளின் பெயரால் ராஜிநாமா செய்யுமாறு இந்த அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இது 5.01.1991 அன்று மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

உண்மையில் அன்று மகிந்த ராஜபக்ஷ போன்றோர் மனித உரிமைகள் பற்றிப் பேசி சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்க்காவிட்டால் இன்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கையின் மனித உரிமை தொடர்பாக பேச முன்வந்திருக்காது. அன்று மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்றபோது அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சி அரசு பின்வருமாறு குற்றஞ்சுமத்தியது.

ஜோன் அமரதுங்க: வெள்ளைக்காரர்களுக்கு நாட்டைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். மகிந்த ராஜபக்ஷ: ஆம்.நாங்கள் மூடி மறைக்கவில்லை. வெளிப்படையாகவே கொண்டு செல்லுகிறோம்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே! இவர்கள் இங்கிருந்தவாறு விடயத்தை வெள்ளையர்களிடம் கொண்டு சென்றுவிட்டோம் எனக் கூறுகிறார்கள். வெள்ளையர்களிடம் சென்று உதவி கோரிப் பிச்சை எடுத்து உண்பது நல்லது. உதவி வழங்கும் நாடுகளுக்கு நாங்கள் சென்று அவர்களிடம் உங்களால் முடிந்தால் இந்த உதவிகளை நிறுத்துமாறு கோரினோம். இந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் படி அரசிடம் கோருமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். இந்த நாட்டிற்கு உதவிகளை வழங்கும்போது மனித உரிமையைப் பேணுவது தொடர்பாக நிபந்தனை விதிக்குமாறு கோரினோம். அவ்வாறு கோரியது தவறா? என நான் உங்களிடம் கேட்கிறேன்" ஜோன் அமரதுங்க: அது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகும்.

ஜோன் அமரதுங்க போன்றோர்கள் மட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்க போன்றோரும் ஒரே கருத்தை வெளியிட்டனர். அதாவது இலங்கையின் உள்விவகாரத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்வது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகும் என்றனர்.

இருப்பினும் மகிந்த ராஜபக்ஷ சோர்வடையவில்லை. இன்று மகிந்தவின் அரசே மனித உரிமைனை மீறுவதை எதிர்த்து சர்வதேச மனித உரிமை அமைப்பு உலகெங்கும் பிரசாரங்களை மேற்கொண்டுவருவதற்கான காரணம் அன்று மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் உள்விவகாரம் தொடர்பான பிரச்சினையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிற்குக் கொண்டு சென்றதேயாகும்.

ஆனால் இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான பிரச்சினையை சர்வதேச மனித உரிமை அமைப்பு முன்பாக முதன் முதலில் கொண்டு சென்றது வேறுயாருமல்ல. அது ஜே.வி.பி.யே ஆகும். அது 1971 ஆம் ஆண்டிலாகும். 1971 இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் பின்னர் கிளர்சியின்போது மரணமடைந்த மற்றும் காணாமற்போன ஜே.வி.பி. உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் ஜே.வி.பி.சர்வதேச மனித உரிமை அமைப்பின் தயவை நாடியது. சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்நாட்டின் மனித உரிமைப் பிரச்சினையில் தலையிட்டது ஜே.வி.பி.யின் அழைப்பின் பேரிலேயாகும். அந்த நாட்களில் சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அதில் ஜே.வி.பி.உறுப்பினர்கள் மரணமடைந்தது, காணாமற்போனது மற்றும் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் பற்றிய விடயங்கள் அடங்கியிருந்தன.

சர்வதேச மனித உரிமை அமைப்பின் இந்த அறிக்கையை அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "இது சர்வதேசத்தின் சதிவேலை" எனக் கூறிய சிறிமாவோ அந்த அறிக்கையைக் குப்பைக் கூடையில் வீசி விட்டார். இந்த அறிக்கை காரணமாக பிரதமர் சிறிமாவோவின் அரசில் உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கடுமையான கண்டனங்களுக்குள்ளானார்கள். 1971 கிளர்ச்சியின்போது தங்களுக்கு உதவிபுரிய வந்த சர்வதேச மனித உரிமை அமைப்புடன் ஜே.வி.பி.தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வந்தது ஜே.வி.பி.யின் தலைவர் விஜேவீர ஜே.வி.பி.யின் லண்டன் தலைமையகத்தின் ஊடாக இந்த நாட்டில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கு அனுப்பிவைத்தார்.

1983 இல் ஜே.ஆரின் அரசு ஜே.வி.பி. அமைப்பைத் தடைசெய்தபோது 1983 ஒக்டோபர் 8 ஆம் திகதி ஜே.வி.பி.யின் தலைவர் றோஹண விஜேவீர அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அந்தக் கடிதத்தில் ஜே.வி.பி.மீதான தடையை நீக்குமாறு கோரியிருந்தார். அந்தக் கடிதத்தில் றோஹண விஜேவீரவின் கையொப்பத்தின் கீழ் பிற்குறிப்பு ஒன்று காணப்பட்டது. அந்தப் பிற்குறிப்பில் அந்தக் கடிதத்தின் பிரதி சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச மனித உரிமை அமைப்பு ஜே.வி.பி. சார்பாக மேற்கொண்ட சேவைகள் குறித்து றொஹான் குணரத்ன தனது "தொலைந்த புரட்சி" என்ற நூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

"ஜே.வி.பி.அமைப்பை அனுதாபத்துடன் உற்றுநோக்கிய முதலாவது அமைப்பு சர்வதேச மனித உரிமை அமைப்பாகும். அந்த அமைப்பின் ASA 37/02/85 DISTOR:CO என்ற இலக்கத்தையுடையதும்" வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் "இலங்கையின் ஜே.வி.பி. உறுப்பினர்கள்" என்ற தலைப்பிலான அறிக்கையில் 1983 கறுப்பு ஜூலை சம்பவங்களில் (இனக்கலவரத்துடன்) ஜே.வி.பிக்குத் தொடர்புகள் உள்ளன என்பது தொடர்பான சாட்சிகள் எவையுமில்லை எனவும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் ஆயுதந்தரித்துள்ளனர் என இலங்கை அரசு சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி. பாராளுமன்ற ஜனநாயக வழிமுறையை ஒத்த தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்ற முயலும் வேளையில் இலங்கை அரசு அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜே.வி.பி.உறுப்பினர்களைக் கைதுசெய்து சித்திரவதை செய்யப் படுகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையிலான நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசு ஜே.வி.பி.மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்த சர்வதேச மனித உரிமை அமைப்பானது ஜே.வி.பியைப் பாதுகாக்க முயற்சித்துள்ளது. ஜே.வி.பி.உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களிடம் ஆயுதங்கள் எவையும் இருக்கவில்லை எனவும் வன்முறைகளைப் பொலிசாரே மேற்கொண்டு விட்டு அதற்கான பொறுப்பை ஜே.வி.பி. மீது சுமத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பானது ஜே.வி.பி.யை நிரபராதிகள் எனக் காட்டி விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது".

இது "தொலைந்த புரட்சி" என்ற நூலில் சர்வதேச மனித உரிமை அமைப்பு ஜே.வி.பி.க்கும் பக்கச்சார்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.