Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ரயில் பாதையில் தொடரும் இறப்புக்கள்

Featured Replies

200 ரயில் குறுக்கு பாதையில் மின் ஓசை, வர்ண சமிஞ்ஞை பொருத்த நடவடிக்கை

200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் மின் ஓசை மற்றும் வர்ண சமிஞ்ஞைகளுடன் 200 ரயில் குறுக்கு பாதைகள் முழுமையாக உள்வாங்குவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். ரயில் குறுக்க பாதை மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இந்த கேள்வியை முன்வைத்திருந்தார்.

நாடு முழுவதிலும் 1337 ரயில் குறுக்கு பாதைகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் இவற்றுள் 185 ரயில் குறுக்கு பாதைகள் தனியார் துறையினால் கையாளப்படுகின்றது. இதற்கு அமைவாக ரயில் திணைக்களத்தினால் பாதுகாப்பு வழங்கக்கூடிய ரயில் குறுக்கு பாதைகளின் எண்ணிக்கை 1152. இவற்றுள் 608 குறுக்கு பாதைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதி தடைகளுடனான 181 குறுக்கு பாதைகளும் மின் ஓசை மற்றும் வரண சமிக்ஞை கட்டமைப்புடனாக 327 கட்டமைப்புகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அற்ற ரயில் குறுக்கு பாதைகளுக்காக பாதுகாப்பு உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸாரின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/61305

வடக்கு ரயில் பாதையில் இடம்பெறும் விபத்துக்கு பொதுமக்கள், சாரதிகளே காரணம் - அர்ஜுன

வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகும் என போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று யாழ் மாவட்ட எம்.பி.டக்ளஸ் தேவானந்தாவினால் நிலையியற் கட்டளை 27 இன்  கீழ் 2 இலான வடக்கு ரயில்பாதை விபத்துக்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   

வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்காக ரயில் கடவைகளில் பொலிஸாரினால் நபர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகவுள்ளது.ரயில்கள் முன்னர்போல் 30,40, கிலோமீற்றர் வேகத்தில் வருவதில்லை. தற்போது 100,110 கிலோமீற்றர் வேகத்தில் வருகின்றன.நாம் இது தொடர்பில் அறிவித்தல் பலகைகளை வைத்துள்ளோம். இதனை வாகன சாரதிகளும் பொதுமக்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/61302

 

வட மாகாணத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் குறித்து கவனம் தேவை : டக்ளஸ் 

வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.

 

பாராளுமன்றத்தில இன்று நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், இவற்றில் அதிகளவிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதையிலேயே அமையப் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

 இந்நிலையில், வடக்கு மாகாணம் நோக்கியதான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று வரையில் தொடர்ந்தும் மிக அதிகளவிலான விபத்துகள் ஏற்பட்டு, பல மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.

மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காப்பாளர்களாக வடக்கு மாகாணத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் ஊதியப் பிரச்சினை, தொழில்சார் பிரச்சினை மற்றும் அடிப்படை வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலரும் இன்று அக்கடமைகளைவிட்டு விலக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/61298

Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.