Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலி - ஆனால் நான் அமெரிக்க பிரஜையில்லை- கோத்தபாய

Featured Replies

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில்  சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியானது போலியான ஆவணம் உண்மையான ஆவணம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உண்மையான ஆவணத்தை ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை அதற்கான தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையகம் கேட்கும்போது அவர்களிடம் அதனை கையளிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தற்போது இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை  இதன் காரணமாக முன்னைய கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டு தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றிருக்கின்றேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் ஒரேயொரு கடவுச்சீட்டிற்கு உரியவனல்ல என்பது குடிவரவு ஆணையாளருக்கு தெரியும் இதன் காரணமாக நான் புதிய  இலங்கை கடவுச்சீட்டை பெற்றுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில்  சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என ஆங்கில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரஜாவுரிமையை கைவிட்;டவர்களிற்கு வழங்கப்படும் ஆவணம் போன்றதொரு ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறான ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

2013 மார்ச் 13   இல் அமெரிக்க  பிரஜையான கோத்தபாய ராஜபக்ச 2019 யூலை ஐந்தாம் திகதி அமெரிக்க பிரஜாவுரிமையை இலங்கைக்கான அமெரி;க்க தூதரகத்தில் துறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரின் கையொப்பமும் தூதரக இலச்சினையும் காணப்படுகின்றது

எனினும் குறிப்பிட்ட திகதியில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அவர் யூலை ஐந்தாம் திகதி இருதய சத்திரகிசிச்சையின்  சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

மேலும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் கோத்தபாய ராஜபக்ச 2003 ஜனவரி மாதத்திலேயே அமெரிக்க பிரஜையானார் என்பதை புலப்படுத்தியுள்ளதாக ஆங்கில செய்தி இணையமொன்று தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆவணத்தில் கோத்தபாய ராஜபக்சவின் கடவுச்சீட்டு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களும் பிழையானவை என அந்த இணையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/61564

அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டாரா கோத்தபாய - சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் குறித்து சந்தேகம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில்  சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என ஆங்கில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரஜாவுரிமையை கைவிட்டவர்களிற்கு வழங்கப்படும் ஆவணம் போன்றதொரு ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறான ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

2013 மார்ச் 13   இல் அமெரிக்க  பிரஜையான கோத்தபாய ராஜபக்ச 2019 யூலை ஐந்தாம் திகதி அமெரிக்க பிரஜாவுரிமையை இலங்கைக்கான அமெரி;க்க தூதரகத்தில் துறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரின் கையொப்பமும் தூதரக இலச்சினையும் காணப்படுகின்றது

எனினும் குறிப்பிட்ட திகதியில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அவர் யூலை ஐந்தாம் திகதி இருதய சத்திரகிசிச்சையின்  சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

மேலும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் கோத்தபாய ராஜபக்ச 2003 ஜனவரி மாதத்திலேயே அமெரிக்க பிரஜையானார் என்பதை புலப்படுத்தியுள்ளதாக ஆங்கில செய்தி இணையமொன்று தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆவணத்தில் கோத்தபாய ராஜபக்சவின் கடவுச்சீட்டு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களும் பிழையானவை என அந்த இணையம் தெரிவித்துள்ளது.

image_fbe6635c001.jpg

https://www.virakesari.lk/article/61536

  • தொடங்கியவர்

கோத்தபாய  வேண்டாம் - சமல் நின்றால்  வெற்றி உறுதி  - மஹிந்தவிடம் எடுத்துரைத்த வாசு

நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்  போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும். எனவே, ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சாட்டப்படாத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்."

என இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் தான் நேரில் எடுத்துரைத்துள்ளதாகப் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பாலும் சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை வேட்பாளராகக் களமிறக்கும் என நான் நம்புகின்றேன். 

இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய ஒருவரைத்தான் எமது அணியில் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி) வேட்பாளராகக் களமிறக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவை சிறுபான்மை இன மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே, நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபயவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்  போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும். 

ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சாட்டப்படாத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்.

இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நான் நேரில் தெரிவித்துள்ளேன். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன். 

ஜனாதிபதித் தேர்தலில் சமல் ராஜபக்ச வெற்றியீட்டி அவர் தலைமையில் புதிய ஆட்சி அமைகின்றபோது பிரதமர் கதிரையில் மஹிந்த ராஜபக்ச இருக்கவேண்டும். இதையும் மஹிந்தவிடமும் சமலிடமும் நான் நேரில் எடுத்துரைத்துள்ளேன்" - என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை மஹிந்த தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த நிலையிலலேயே, மஹிந்தவின் அரசியல் ஆலோசகரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை மஹிந்த பகிரங்கமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

https://www.virakesari.lk/article/61578

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை ரத்து

கோத்தாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE Image captionகோத்தாபய ராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோத்தாபயவிடம் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.

இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி பிறந்து, இலங்கை குடியுரிமையை கொண்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு, 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப்பெற்றது.

அன்று முதல் சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த கோத்தாபய ராஜபக்ஷ, அதனை ரத்து செய்யுமாறு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

GOTABAYA RAJAPAKSA'S MEDIA UNITபடத்தின் காப்புரிமைGOTABAYA RAJAPAKSA'S MEDIA UNIT

கோத்தாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

அவருக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, கோத்தாபய பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன், கோத்தாபயவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

கோத்தாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்கா - கலிபோனியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கோத்தாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE

எவ்வாறாயினும், அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யக்கோரி கோத்தாபய அளித்த விண்ணப்பத்துக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் தேதி அனுமதி வழங்கியதாக அமெரிக்காவுக்கான வெளிநாட்டு குடியுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டிருக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE

சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே கோத்தாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49198266

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.