Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் திகாம்பரம்

Featured Replies

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இன்று காலை 7.30 அளவில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது.

இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்பித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, இதற்கான நிதியை தனது அமைச்சிலிருந்து வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சுக்குட்பட்ட நிதியிலிருந்து அதனை வழங்குமாறு கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனி திகாம்பரம், அப்படியான ஒரு ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் என்றும் நவீன் திசாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர், அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

எவ்வாறாயினும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு விடயத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாத பட்சத்தில் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவை கைவிட நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாக அறிவிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னர் இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

இல்லாத பட்சத்தில் புதிய கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/221355/அமைச்சரவை-கூட்டத்தில்-இருந்து-வெளியேறிய-அமைச்சர்-திகாம்பரம்

  • தொடங்கியவர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிக்க முடியாதளவு பொருளாதாரம் வீழ்ச்சி -தினேஷ் 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிப்பதற்கு முடியாதளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, எனினும் அரசாங்கத்தின் நிகழ்வுகளுக்கு கோடிக்கணக்கான பணம் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவசரகால சட்டம் என்பது மேலதிக சட்டமாகும். அதனை பயன்படுத்திக்கொண்டு தேவையான  சட்ட திட்டங்களை மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. தாக்குதல் இடம்பெற்று 3மாதம் கடந்தும் நாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை இந்த அமைச்சரவைக்கு முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்ல நேரம் நெருங்கிவருவதால் இதுதொடர்பாக சிந்திப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கின்றது. 

அதேபோன்று கைதுசெய்யப்பட்டவர்களை சட்டத்தின் பிரகாரம்  செயற்படுத்தி இருந்தால் இந்த அவசரகால சட்டத்தை மேலும் நீடித்துக்கொள்ள தேவை ஏற்பட்டிருக்காது. அத்துடன்  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை இன்னும் அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவர முடியாமல் போயுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/61637

  • தொடங்கியவர்

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா? ; சபையில் திலகராஜ் கேள்வி

தோட்டத்தொழிலாளர்களுக்கான. 50ரூபா  கொடுப்பனவு தொடர்பில் சபை முதல்வர் வழங்கியிருக்கும் பதிலும் பிரதமர் அமைச்சரவைக்கு வழங்கியிருக்கும் முன்மொழிவும் வேறானவையாக இருக்கின்றது. 

அத்துடன் பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா எனவும் சந்தேகம் எழுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட எம்.பி எம். திலகராஜ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன விசித்திரமான வினா ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியாவது தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டும் என. அதற்கு பதிலளித்த சபை முதல்வர் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50ரூபா  கொடுப்பனவுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியருப்பதாக கூறியுளலளார். 

ஆனால் அதற்காக பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்ய 600 மில்லியனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. 

உண்மையில் 50 ரூபா  என்ற தொகைக்கு வெளியில் இலங்கையின் முன்னணி ஏற்றுமதி கைத்தொழிலான பெருந்தோட்ட துறையில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள விவகாரம் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதனை வலியுறுத்தவே நாம் அரசாங்கத்தை தலையிட செய்தோம். 

எனவே தற்போதைய முறைமையில் இருந்து பெருந்தோட்டத்துறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான அமைச்சர் நவீன திசாநாயக்க மக்களின் பிரதிநிதியாக அல்லாது கம்பனிகளின் பிரதிந்தியாகவே செயற்பட்டு வருகிறார். எனவே இந்த துறை சிறுதோட்ட தொழிலாக மாற்றப்படல் வேண்டும். எதிர்வரும் தேர்தல்கள் எதுவாயினும் எமது பிரதான நிலைப்பாடு இதுவாகவே இருக்கும். 

எனவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் உறுதி அளித்தவாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/61657

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.