Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலநிலை மாற்றங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன- அவுஸ்திரேலிய பல்கலைகழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன- அவுஸ்திரேலிய பல்கலைகழகம்

காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன என எச்சரித்துள்ள மெல்பேர்னின் மொனாஸ் பல்கலைகழகம் அடுத்த தசாப்தத்தில் காலநிலை மாற்றங்கள் காரணமாக சிறுவர்களின் வளர்ச்சி குறைவடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

போசாக்கின்மை மற்றும் நுண்ணறிவு திறன் குறைதல் போன்ற பாதிப்புகளை சிறுவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் எனவும் பல்கலைகழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2030 முதல் 2050 வரையான காலப்பகுதியில் புவி வெப்பமடைதல் காரணமாக வருடமொன்றிற்கு 250,000 பேர் மரணமடையும் நிலையேற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதை மொனாஸ் பல்கலைகழகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை காலநிலை மாற்றத்தினால் ஏற்கனவே மரணங்கள் நிகழத்தொடங்கியுள்ளன என மொனாஸ் பல்கலைகழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தினால் மக்கள் உயிரிழப்பது இடம்பெறுகின்றது என்பது உறுதியான விடயம் என தெரிவித்துள்ள மிசா கொலெமன்  வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மரணங்கள் ஏற்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் 2009 இல் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக பலர் கொல்லப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அந்த வெப்பமான நாட்களில் வெப்பத்தின் தாக்கத்தினால் மேலும் பலர் மரணித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

flood.jpg

மோசமான காலநிலையால் கடும் வெள்ளம் ஏற்படுகின்றது குறிப்பாக பசுபிக்கில் இந்த நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள மொனாஸ் பல்கலைகழகம் இதன் காரணமாக வாந்திபேதி போன்ற சிறுவர்களிற்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் உருவாகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பது நுளம்புகளின் பெருக்கத்திற்கு காரணமாக டெங்கு உட்பட பல நோய்களின் ஆபத்தை அதிகரிக்கலாம் எனவும் பல்கலைகழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக ஆபத்தான நோய்கள் அவுஸ்திரேலியாவில் பரவும் ஆபத்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/61602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.