Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனைப் பிரச்சினை தீர்வா அல்லது கிழக்குக்கு சிங்கள முதல் அமைச்சரா?  - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

AMICABLE SOLUTION IN KAMUNAI OR SINHALESE CM FOR EAST. 
கல்முனைப் பிரச்சினை தீர்வா அல்லது கிழக்குக்கு சிங்கள முதல் அமைச்சரா? 
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கல்முனை அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. கல்முனை வடக்கு கல்முனை தெற்க்கு (கல்முனைக்குடி) சாய்ந்தமருது பிரதேச மக்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒற்றுமையாகத் தீர்மானமெடுக்கவேண்டும். 
ஒற்றுமைப்படாவிட்டால் ஏதாவது 2 பிரதேசங்கள் இணங்கிப்போகவும் அடுத்தது மிக மோசமாக தனிமைப்படவும் நேரும். 
.
மதிப்புக்குரிய தலைவர்கள் சம்பந்தரும் ஹக்கீமும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அவசரமாகப் பேசினால் மட்டுமே பொது முடிவை எட்ட முடியும். அல்லது அரசு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. 
.
தோழர் ஹக்கீமை பொறுத்து கல்முனை மட்டுமல்ல அவர் சுமக்கும் பிரச்சினை. கிழக்கு முஸ்லிம்களை சிங்களவர் தமிழரிடமிருந்துமட்டுமல்ல தெற்க்கு முஸ்லிம்களிடமிருந்தும் தனிமைபடாமல் காப்பாற்றும் கயிற்றில் நடக்கும் பணியை இன்றய சூழலில் அவரைத் தவிர இன்னொருவரால் நிறைவேற்ற முடியாது. அதேபோல அதிக அங்கத்துவம் இருந்தும் முதலமைச்சர் பதவியை விட்டுத்தரும் மனம் சம்பந்தரை தவிர வேறு யாருக்குமில்லை. சமந்தர் ஐயாவும் தோழர் ஹக்கீமும் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி எல்லை நிர்ணயத்தை பேசி முடித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். 
.
ஒற்றுமையாக இணங்கிப் போகாமல் அரசு தீர்வைக் கொண்டுவந்தால் அம்பாறையிலும் திருகோணமலையிலும் சிங்கள அரசாங்க அதிபர் இருப்பதுபோல கிழக்கு மாகாணத்தில் பிழவுபட்ட தமிழர் முஸ்லிம்கள் ஆதரவுடன் சிங்கள முதல் அமைச்சர் பதவி ஏற்க்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்பதை அடித்து சொல்ல முடியும்.a

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஆளுநரை மாற்ற சொல்லி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்த்து காரணம் பக்க சார்பாக நடந்து கொண்டது கிழக்கு முஸ்லீம் அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட போது  எல்லாம் இனம் சார்பாக நடந்தது இது கூத்தமைப்பு செம்புகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள் 

முஸ்லீம்களை விட சிங்கள முதலமைச்சர் வந்தாலும் பரவாயில்லை தமிழரரை விட ஏதாவது அரசிடம் பேசி செய்வார் ஆனால் தமிழர் வந்தால் பேசுவார் செய்யமாட்டார் இது அன்றிலிருந்து இன்றுவரைக்கும் அரசியல் வாதிகளும் அப்படியே 

கல்முனையை  இர் இனமும் விட்டுக்கொடுக்காது பேச்சு வார்த்தையில் 3 பிரதேச செயலகங்கள் பிரிந்தால்  அங்கே நிலங்கள் ஊர்கள் அந்தந்த பிரதேச செயலங்களுக்குள் செல்லும் போது அவர்களுக்கு சாதகமே இன்று கல்முனைக்கு தமிழர்கள் கேட்க அவர்களோ மட்டக்களப்பிலும் , தோப்பூரிலும் தங்களுக்கு பிரதேச செயலகம் கேட்கிறார்கள் இதுதான் அவர்கள் நீங்கள் இன்னும் தோழர் தோழர் என்று தோள்கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் மிதிபட்டுக்கொண்டே இருக்கிறோம் எல்லோராலும் 

பாதைக்கு மேல் பாதையை போடுவதால் முன்னர் உள்ள  பாதையை அழித்து விடலாம் என அவர்கள் நினைத்து தமிழர்கள் விடுக்கும்கோரிக்கைக்கு அவர்களும் கோரிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்  ஐயா இதை நீங்கள் புரிந்து கொள்ள இன்னும் நாள் எடுக்கும் என நான் நினைக்கிறன்  

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை சஹ்ரான் குழுவினர் மேற்கொண்டபோது புரிந்துகொண்டது என்னவென்றால், தமிழர்கள் இனப்படுகொலை செய்த சிங்களவர்கள் மேல் நம்பிக்கை வைத்தாலும் வைப்பார்களே ஒழிய, தமிழர்களது நிலத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்யும் முஸ்லிம்களுடன் அரசியல் ரீதியாக ஒன்றிணையமாட்டார்கள்.

கவிஞர் பிளவுண்ட சிறுபான்மையினராக இருப்பது ஆபத்து என்று என்னதான் கூவினாலும், அது தெரிந்தே தமிழர்களும் முஸ்லிம்களுடன் சேராமல் இருக்கின்றார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காத இரு தரப்பு அரசியல் தலைமைகளும் தமது செல்வாக்கை இழப்பது நிச்சயம். இது ஒரு பலவீனமான நிலைக்குத் தமிழரைத் தள்ளினாலும் சரியான தலைமையை அடையாளம் காட்ட உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை சஹ்ரான் குழுவினர் மேற்கொண்டபோது புரிந்துகொண்டது என்னவென்றால், தமிழர்கள் இனப்படுகொலை செய்த சிங்களவர்கள் மேல் நம்பிக்கை வைத்தாலும் வைப்பார்களே ஒழிய, தமிழர்களது நிலத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்யும் முஸ்லிம்களுடன் அரசியல் ரீதியாக ஒன்றிணையமாட்டார்கள்.

கவிஞர் பிளவுண்ட சிறுபான்மையினராக இருப்பது ஆபத்து என்று என்னதான் கூவினாலும், அது தெரிந்தே தமிழர்களும் முஸ்லிம்களுடன் சேராமல் இருக்கின்றார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காத இரு தரப்பு அரசியல் தலைமைகளும் தமது செல்வாக்கை இழப்பது நிச்சயம். இது ஒரு பலவீனமான நிலைக்குத் தமிழரைத் தள்ளினாலும் சரியான தலைமையை அடையாளம் காட்ட உதவும்.

அரசியலால் வாயால் மட்டுமே இன நல்லிணக்கம் பேசுகிறார்கள் ஆனல் மறைமுகமாக ஆயிரம் இது பொது வெளி சொன்னாலும் குற்றம்  அது  அவருக்கும் தெரியும் நல்ல நண்பர் நினைத்த ஒருவர் ஐயாக்க்கும் முரணாக கருத்துக்கள் எழுதி இருந்தார் முகநூலில் அவர்கள் தருணத்திற்கு குத்துக்கரனம் அடிப்பார்கள் ஆனால் பிழையென்பதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள் மறுதலிப்பார்கள்  அதாவது ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அற்றவர்கள் கிருபன் 

உயிர்த்த ஞாயிறு படுகொலையில் சம்பந்தமானவர்கள் முஸ்லீம் இல்லையென சுலமாக சொல்லி கடந்து போகிறார்கள் அண்மையில் மட்டக்களப்பில் பாடசாலையின் மிக திறமையான ஓர் மாணவி பேச்சு விவாதம் என கலந்து கொண்டு  யாழ் வேம்படி மாணவிகளுடனும் விவாத போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவி  உமா சங்கரி இறந்து போனாள் இன்னுமொரு மாணவன் முகத்துக்கு  உறை போட்டு பாடசாலைக்கு செல்கிறான்  இவைகளை கடந்தாலும் காத்தான்குடி பள்ளிகளில் அன்று நடந்த கொலைகளை இப்பவும் பொலித்தீன் பைகளை இட்டு கவனமாக வைத்திருக்கிறார்கள்  இனவாதம் குரோதம் ஒன்றை இளம் சமுதாயத்திற்கு வளர்த்து தான் வருகிறார்கள் .

Edited by தனிக்காட்டு ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.