Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம்

[01 - May - 2007] [Font Size - A - A - A]

* மே தினக்கூட்டத்தில் ஜே.வி.பி.அழைப்பு

ப.பன்னீர்செல்வம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையென்பது நிரூபணமாகியுள்ளதென ஜே.வி.பி.யின் தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ரி.லால்காந்த தெரிவித்துள்ளதுடன் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆட்சியைக் கைப்பற்றி, எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்துக்காக நாம் அணி திரளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.

ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற மைதானத்தில் இடம் பெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

"தொழிலாளர் உரிமைகளை நிலை நிறுத்தும் அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காலம் வந்து விட்டது. எனவே, தொழிலாளர் அமைப்புகள், கல்வித்துறை சார்ந்தவர்கள் மற்றும் தேசப்பற்றுள்ள அனைத்து மக்களும் ஓர் அணியில் திரளவேண்டும்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 5000 மாக அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களது அடிப்படைச்சம்பளம் ரூபா 12,500 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ளாவிட்டால் இம் மாத நடுப்பகுதியிலிருந்து `கடுமை'யான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிப்போம்.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அணைக்குழு அமைக்கப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி இன்று ஆறுமுகம் தொண்டமான் மற்றும் சந்திரசேகரனை இணைத்துக் கொண்டு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இன்று அவர்கள் அரசின் அழுக்குத் துணிகளை துவைக்கின்றனர்.

யுத்தத்தைக் காட்டிக்கொண்டு தொழிலாளர் போராட்டங்களை நசுக்க இடமளிக்க முடியாது. இன்று யுத்தம் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. 100 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், ஊழல்மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. அமைச்சர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் நிலைமை தோன்றியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்போக்கு வாதியோ அல்லது தொழிற்சங்க வாதியோ அல்ல. அவர் மூலம் எமக்கு தொழிற்சங்க உரிமைகள் கிடைக்குமென நினைத்து ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொடுக்க வில்லை. இந்நாட்டின் முதலாளித்துவ வாதிகளின் ஒரு பிரதிநிதியே இன்றைய ஜனாதிபதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெசாக் நோன்மதி தினம் வருவதால் ஏப்ரல் 30 ஆம் திகதியை மேதினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் ஜனவரி மாதமே எழுத்து மூலம் கோரியிருந்தோம். ஆனால் 28,29,30 எந்த திகதியிலாவது அவரவர்களுக்கு வசதியான தினத்தில் கொண்டாடுமாறு எமக்கு அறிவித்தார்.

இது போன்ற சிறு விடயம் தொடர்பாக சரியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாத அரசாங்கத்தால் நாட்டின் எந்தப்பிரச்சினையையும் தீர்க்க முடியாது இதுதான் உண்மை.

ஐ.தே.க.அரசாங்கம் முன்னெடுத்த மின்சார சபையை தனியார் மயப்படுத்துவது, அரச வங்கிகளில் கடன் பெற்றவர்களது கடன்களை மீளப் பெற்றுக்கொள்ள நிறுவனமொன்றை அமைக்க இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நிறுத்தினோம்.

இன்று துறைமுகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் போன்றவற்றை தனியார் மயப்படுத்துவதை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவற்றைத் தடுத்து நிறுத்த புதிய ஆட்சியை உருவாக்குவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் புதிய நாணயத்தாள்கள் அட்சிடப்பட்டு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது பொய்ப் பிரசார மெனவும் லால்காந்த மேலும் தெரிவித்தார்.

இந்த மே தினக் கூட்டத்தின் போது பொருமளவான திரைகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன் இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

தினக்குரல்

மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டங்கள்: ஜே.வி.பி. அறிவிப்பு.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

அனைத்துலக மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத் தலைவர் லால் கந்த பெசியதாவது:

முதலாளித்துவ மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடமிருந்து தொழிலாளர்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

தன்னை தொழிற்சங்கத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதிவழியில் மேற்கொள்ளும் பரப்புரை நிகழ்வுகளை கொடூரமாக ஒடுக்கி வருகிறார். மகிந்த ராஜபக்சவிடம் தொழிலாளர்களின் நண்பர் என்கிற முறையில் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.

இதனிடையே ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மகிந்த ராஜபக்சவை கடுமையாகச் சாடியுள்ளார்.

"நாட்டை கட்டியெழுப்பும் பணியில் உள்ள மகிந்த ராஜபக்ச, தனது குடும்பத்தினரை வைத்து வெட்கக்கேடான அரசியலை நடத்துகிறார். அண்மையில் மகிந்த ராஜபக்ச சகோதரர்களைப் பாதுகாப்போம் என்ற சுவரொட்டி வெளியிடப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச சகோதரர்களைப் பாதுகாப்பு எமது வேலையா? நாட்டைப் பாதுகாப்பது எமது வேலையா? என்றார் அவர்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.