Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தாண்டித் தாக்குதல் இனப் படுகொலை தான் - ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 01-05-2007 23:00 மணி தமிழீழம் [கோபி]

சித்தாண்டித் தாக்குதல் இனப் படுகொலை தான் - ஜெயானந்தமூர்த்தி

மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள சித்தாண்டி பகுதியில் மூன்று பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இப்படுகொலையைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது” மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. சிறிலங்கா படையினராலும் மற்றும் ஆயுத குழுக்களாலும் பொதுமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் கண்மூடித்தனமான சூட்டுச் சம்பவங்களாலும் கொலை செய்யப்பட்டும் வருகினறனர்.

கடந்த 29 ஆம் திகதி சித்தாண்டியிலிருந்து வயற்பிரதேசமான பெருமாவெளிக்குச் சென்று தமது கால்நடை மற்றும் வயற்காணிகளைப் பார்த்துவிட்டு மாலை வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த குடும்பப் பெண் உட்பட இரு குடும்பஸ்தர்களுமாக மூவர் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் .அண்மையில் படையினரால் சித்தாண்டிக்கு மேற்குப் புறமாக உள்ள வயல் பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து சித்தாண்டியில் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்களாவர். நீண்டநாட்களாக வயற் பிரதேசத்திற்கு பொதுமக்களைச் செல்லவிடாது படையினர் தடை விதித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அவர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். இதையடுத்தே இம்மூவரும் தமது வயற்காணிகளையும் உடமைகளையும் பார்த்துவரச் சென்றிருந்தனர். ஆனால் இவர்கள் இன்று காலையில் பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சடலமாக உறவினர்கள் மீட்டுள்ளனர்.

பலியான பூபாலப்பிள்ளை பூமணி (வயது 30) இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஏனையவர்களான நாகலிங்கம் திருச்செல்வம் (42 வயது) இவருக்கு எட்டுப் பிள்ளைகளும் மற்றவரான பொன்னுச்சாமி செல்லத்துரை என்பவருக்கு இரு குழந்தைகளும் உள்ளன.

தமக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது இவர்கள் பலியாகியுள்ளதாக படையினர் உறவினர்களிடம் கூறியுள்ள போதிலும் அன்றைய தினம் அப்பகுதியில் எவ்வித மோதலும் இடம் பெறவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர். அத்துடன் இப்பகுதி படையினரின் கட்டுப்பாட்டிலுள்ளதுடன் இரவு பகலாக படையினர் அப்பகுதியில் காவல் கடமையில் உள்ளனர்.

எனவே படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கடந்த 30.03.2007 ஆம் திகதி மேற்படி சித்தாண்டி கிராமத்தை நோக்கி படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் 9 அப்பாவிப் பொதுமக்கள் பலியானதுடன் 25 அதிகமானோர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.