Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தளம் மாவட்டத்தில் அருகிச் செல்லும் தமிழர் அடையாளங்கள்

Featured Replies

Untitled-1.jpg?itok=cpV-Xi0n

 

புத்தளம் மாவட்டம் விரிந்த பரப்பளவைக் கொண்ட மாவட்டமாகும்.இம்மாவட்டம் வடக்கே பூக்குளம் தொடக்கம் தெற்கே கொச்சிக்கடை நஞ்சுண்டாக்க வரையும் மேற்கே இந்து சமுத்திரத்தையும், கிழக்கே வளம் கொண்ட நிலத்தொடர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 3072 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும்.

இதன் கடற்கரை நீளம் 150கி.மீ. இங்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.

இம்மாவட்டத்தில் 16 பிரதேசங்கள் அமைந்துள்ளது. புத்தளம், முந்தல், மகாகும்புக்கடவெல, கல்பிட்டி, கருவெலகஸ்வௌ, நாத்தாண்டி, மகாவௌ, சிலாபம், பல்லம, ஆனமடு, வென்னப்புவ, நவகத்தேகம, தங்கொட்டுவ, ஆராய்ச்சிக்கட்டு, வண்ணாத்தவில்லு,மாதம்பை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளுடன் புத்தளம், சிலாபம், ஆனமடுவ, நாத்தாண்டி, வென்னப்புவ என்ற ஐந்து தொகுதிகளையும் இம்மாவட்டம்.உள்ளடக்கியுள்ளது. 548 கிராம சேவையாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டம் புத்தளம், சிலாபம் என்ற நகர சபைகளையும், 10 பிரதேச சபைகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டம் எட்டு பலநோக்கு கூட்டுறவு சம்மேளனங்களை கொண்ட ஓர் முன்மாதிரியான மாவட்டமாகத் திகழ்கிறது. இம்மாவட்டம் 587683 வாக்காளர்களைக் கொண்டதாகும்.

22க்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இங்கு இருக்கின்றன. புத்தளம் இந்துக் கல்லூரி, உடப்பு தமிழ் ம.வி, ஆண்டிமுனை தமிழ் ம.வி,முன்னேஸ்வரம் வடிவாம்பிகா கல்லூரி, கட்டைக்காடு றோமன் க.த.ம.வி, சிலாபம் றோ.க.ம.வி, போன்ற 6 மகா வித்தியாலயங்களையும் புத்தளம் சென்மேரிஸ் த.வி, மணல்தீவு றோ.க.த.வி, மாம்புரி றோமன்.க.த.வி, கற்பிட்டி றோமன்.க.த.வி,

டச்வே றோமன் க.த.வி,ஏத்தாலே றோமன் க.த.வி,பனையடி தமிழ் வித்தியாலயம்,நரக்கள்ளி றோமன்.க.த.வி,நாவக்காடு றோமன்.த.வி,-------ப்பளை றோ.த.வி,நாயக்கர் சேனை த.வி,முந்தல் தமிழ் வித்தியாலயம், கருங்காலிச்சோலை தமிழ் வித்தியாலயம்,ஆண்டிமுனை ஸ்ரீகிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை, குசலை தமிழ்.வி,கருக்குப்பனை றோமன். க.த.வி போன்ற தமிழ்ப் பாடசாலைகள் அமைந்துள்ளன. இவ்வித்தியாலயங்களில் தமிழ் ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை. தமிழ்ப் பாடசாலைகளின் கல்வி நிலை, பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சி கண்டுவருகின்றன.

இம்மாவட்டத்தில் தமிழர்கள் சீரும் சிறப்போடும் வாழ்ந்துள்ளார்கள். தமது இருப்பை அடையாளப்படுத்தியுள்ளனர்.  தமிழ்க் கிராமங்களின் பெயர்களைப் பார்த்தால் இது தெரியவரும். எதிர்காலத்தில் இக்கிராமங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

இங்கு தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பல கிராமங்கள் இருக்கின்றன. இந்த தமிழ்க் கிராமங்களின் பெயர் இன்று பெரும்பான்மை சமூகத்தின் வசதிகளுக்காக மாற்றம் பெற்று மருவி வருவதை காண்கின்றோம். இம்மாவட்டத்தில் அழகான தமிழ்ப் பெயர்கள் மாற்றமடைகின்றன.குறிப்பாக பெரியகுளம் என்ற பெயர் மகாவௌயாகவும் தீர்த்தக்கரை தீர்த்தக்கடய ஆகவும் மாயவன் ஆறு தெதுறுஓயாவாகவும் கருங்காலிச்சோலை என்ற பெயர் கருவெல வெத்த என்றும் பெயர்மாறி நிற்பதை அறிய முடிகிறது.

இம்மாவட்டத்தில் இந்து தமிழர்களின் இருப்பு, அதனசிறப்பு அதனோடு ஒட்டிய பெருமைகளுக்கு கட்டியம் கூறி நிற்பது முன்னேஸ்வரம் திருத்தலமாகும். இங்கு தமிழர்களின் வரலாற்று தடயங்கள், எச்சங்கள் உள்ளன.தொல்லியல் சிறப்புக்களும் சோழர் காலத்து பெருமையை எடுத்துச் சொல்லும் கல்வெட்டுக்களும் உள்ளன.

அத்துடன் இம்மாவட்டத்தில் 108அடி உயரத்துடன் கம்பீரமாக காட்ச்சியளிக்கும் உடப்பு திரௌபதை அம்மன் ஆலயம்,முந்தல் திரௌபதை அம்மன் ஆலயம்,புத்தளம் மாரியம்மன் கோவில்,கற்பிட்டி முத்துமாரியம்மன் கோவில், கருங்காலிச்சோலை ஸ்ரீமுருகன் திருக்கோவில்,குசலை மாரியம்மன் ஆலயம்,மாதம்பை ஸ்ரீ முருகன் ஆலயம் போன்ற பல கோவில்கள் இங்கு அமைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகள் சாதனை புரிந்துள்ளன. ஆனால் இன்று தமிழ்ப் பாடசாலைகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. தமிழ்ப் பாடசாலைகளில் ஆளணி பற்றாக்குறை தொடர்கதையாகவே இருக்கின்றது.பிறமத அரசியல் தலைவர்கள் தத்தம் மதம் சார்ந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். ஆனால் தமிழ்ப் பாடசாலைகள் வளர்ச்சி அடையவில்லை. இம்மாவட்டத்தில் பல பாடசாலைகள் மூடுவிழா கண்ட அவலத்தை காண்கின்றோம்.

சுட்டிக்காட்ட வேண்டியும் உள்ளது 1955ம் ஆண்டுக்கு மேற்பட்ட காலத்திலிருந்து இயங்கி வந்த சிலாபம் கடற்கரைதெரு 'எகடவன' தமிழ் றோமன் வித்தியாலயம் அNதுபோல கோட்டப்பிட்டி றோமன்.க.த.வி, இந்துபோட்

இராஜரத்தினம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மருதங்குளம் தமிழ் வித்தியாலயம் அண்மைக் காலத்தில் மூடுவிழா கண்டது.

கருக்குளி பாடசாலையில் இயங்கிய தமிழ்ப் பிரிவு,விஜயகட்டுப்பொத்த மகா வித்தியாலயத்தில் இயங்கிய தமிழ்ப் பிரிவு, முத்துப்பந்திய பாடசாலையில் இயங்கி வந்த தமிழ்ப் பிரிவுகள் மூடுவிழா கண்டுள்ளதை துயரத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

இங்கு வாழும் தமிழர்கள் அரசியலில் அநாதைகளாக இருப்பதனால் தொழில் வாய்ப்புக்களை பெறவோ, ஒரு காணித் துண்டைப் பெற்றுக் கொள்ளவோ, சமுர்த்தி மற்றும் தருமப் பணத்தை பெறவோ அலைகின்றனர். தமது சமூகம் சார்ந்த தலைமைகளை உருவாக்க வேண்டுமென்ற தூரநோக்கு இல்லாத மக்களாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் 35ஆயிரம் தமிழ் வாக்கு வங்கி இருந்தும் கூட ஒரு தமிழ் பிரதிநிதியை உருவாக்க முடியாதவர்களாக வாழ்ந்து வரும் அவல நிலையை காண்கின்றோம்.

உடப்பூர் வீரசொக்கன்

https://www.thinakaran.lk/2019/08/10/கட்டுரைகள்/38506/புத்தளம்-மாவட்டத்தில்-அருகிச்-செல்லும்-தமிழர்-அடையாளங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.