Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர்

Featured Replies

வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் துரத்தி துரத்தி தூர நோக்கி புகைப்படம் பிடித்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் அவரது அடையாளத்தையும் உறுதிப்படுத்துமாறும் போராட்டத்தைப் புகைப்படம் பிடிப்பவர்கள் யார் என்று உறுதிப்படுத்துமாறும் கோரியபோது அவர்களிடமிருந்து எவ்விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. அத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் அவர்களின் கைகளில் தாங்கியிருந்த பதாதைகளையும் சுற்றி சுற்றி புகைப்படம் பிடித்துள்ளார். இந்நடவடிக்கை காணாமல் போன உறவுகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

 

IMG_20190814_173543.jpg

IMG_20190814_173643.jpg

https://www.virakesari.lk/article/62656

 

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியாவிற்கு இன்று பிற்பகல் செள்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்றுடன் 907 ஆவது நாளாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களினால் இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமது போராட்ட களத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை சென்றடைந்ததும் விஷேட அதிரடிப்படையினர், பொலிசார், கலகம் தடுப்பு பொலிசார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் பேருந்தை குறுக்கேவிட்டு வீதியையும் தடை செய்துள்ளனர். 

வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என். பி வெலிகள போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். 

சற்று நேரத்தின் பின்னர் காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக பொலிசார் வாக்குறுதி வழங்கியதையடுத்து காணாமல்போன உறவுகள் தமது போராட்ட களத்திற்குத்திரும்பியுள்ளனர்.

கூட்டமைப்பினரே வெளியேறு, எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே என்ற கோசத்துடன் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று மாலை 3.00மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொப்பர் விமானத்தில் அமைச்சர்களின் சகிதம் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக போராட்ட களத்திற்குச் செல்லும் பிரதான கண்டி வீதி வழியாகச் தனது பயணத்தை மேற்கொள்ளாமல் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலையினை சென்றடைந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாகவே பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் பல வீதிகளை சுற்றி நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0769_2.JPG

https://www.virakesari.lk/article/62652

 

பிரதமர் ரணில் வவுனியா விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை இன்றையதினம் திறந்து வைத்தார்.

வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கபடவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்தின,நெதர்லாந்து நாட்டின் துணைதூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம்,  மற்றும் மருத்துவர்கள், அரச அதிகாரிகள் பலர்கலந்துகொண்டனர்.

IMG-27fe71a977db8d1c053d8fc02a855213-V.j

https://www.virakesari.lk/article/62658

மயிலிட்டி துறைமுகத்தை, பிரதமர் நாளை திறந்துவைப்பார்

யாழ்ப்பாணம் - மயிலிட்டி இறங்குதுறையை அண்டிய பகுதியில், பெரும் நிதிச் செலவில் புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை (15) திறந்துவைக்கவுள்ளார் என்றுத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இன்றைய திறப்பு விழாவின்போது, வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ரணிலிடம் இடித்துரைக்கவுள்ளதாகவும் கூறினார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம், துறைமுகத்துக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் உரையாற்றிய தான், மயிலிட்டித் துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் அதேவேளை, இங்கிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள், மீண்டும் இங்கு குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் அதற்கு, அரசாங்கம் வழிவகுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக, கடந்த ஒரு வருடகாலமாக அரசாங்கம் கரிசனை கொண்டிருக்கவில்லையெனத் தெரிவித்த மாவை எம்.பி, அம்மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் குற்றஞ்சாட்டினார்.

அண்மையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, அந்தப் பகுதி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் பேசியபோது, மீள்குடியேற்றம் தொடர்பில் படைத் தரப்புடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் உறுதியளித்தாதாகவும், மாவை எம்.பி கூறினார்.

தற்போது, மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (15) துறைமுகம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆனால் மக்களுடைய மீள்குடியமர்வு தொடர்பில் தொடர்ந்தும் ரணில் அரசாங்கம் மௌனமாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மயிலிட்டி-துறைமுகத்தை-பிரதமர்-நாளை-திறந்துவைப்பார்/71-236736

Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.