Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள்

மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். 

b9ac85d0bede9d4669239b7fe6e40a2dd283b86e

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது. 

எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்றும் , மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு  இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்த்துள்ளனர்.

 

 

https://www.virakesari.lk/article/62685

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு முடிவு

August 18, 2019
Jaffna-university1.jpg?resize=600%2C450

வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தமது புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான நேற்று (சனிக்கிழமை) மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஒரு இனத்தினுடைய வளர்ச்சியின் முதுகெலும்பாக விளங்குவது கல்வி ஒன்றேயாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்பும் எழுந்து நிற்க நாம் இன்று கல்வியைத் தவிர வேறு எதனையும் நம்பியிருக்க முடியாது.

எமது பல்கலைக்கு மாணவர்களை உரிய காலத்தில் உள்ளீர்த்தல், வெளியேற்றல், அவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்துதல், சிறந்த பௌதீக சூழலில் கல்வி கற்றல் போன்ற வழமையான செயற்பாட்டை செய்வதென்பதே இன்று கடினமாகிவிட்ட நிலையில் நாம் வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதென்பது சற்றுக் கேலியாகவே உள்ளது.

இராமநாதன் நுண்கலைத்துறையும் சித்த மருத்துவ அலகும் இன்றுவரை வளர்ச்சியடையாது அடுத்த கட்டத்திற்கு தரமுயர்த்தப்படாமலேயே உள்ளது.

எமது பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை எமது அரசியல் தலைவர்களோ கல்வியாளர்களோ அறிந்திருப்பார்களெனில் அவை இன்று அவ்வாறு தரமுயர்த்தப்படாமல் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்காது.

எமது பல்கலைக்கழகத்தில் பல கட்டடங்கள் உரிய காலத்தில் கட்டி முடிக்கப்படாமல் தற்காலிக கட்டடங்களில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

இவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் மாணவர்கள் மட்டும் அல்லர். இவற்றை சிந்திப்பதற்காகவே பல்கலையில் பேரவை, மூதவை என்பன இருக்கின்றது. அத்துடன் இவற்றை சுட்டிக்காட்டவேண்டியது எமது அரசியல் தலைவர்களதும் ஊடகங்களினதும் கடமையாகும்.

நாம் முக்கியமான சில பிரச்சனைகளுக்காக மட்டுமே வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தோம். எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இம்முறையை கையாண்டால் எமது கல்வியே பாதிக்கும்.

அந்தவகையில் எமது முக்கிய பிரச்சினையாகக் கருதிய சில பிரச்சினைகளை தீர்க்கக்கோரி கடந்த 15 ஆம் திகதி முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் எமது பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியால் நாமறிய இவை குறித்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மீது பூரண திருப்தியற்ற போதிலும் தகுதி வாய்ந்த அதிகாரியின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் நாளை முதல் வழமைபோல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

இனிமேலாவது தமிழினத்திற்கு எமது பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தையும் அது உருவாக்கப்பட்ட உன்னத நோக்கத்தையும் அறிந்தவர்களாக பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தமிழ் அரசியல் தலமைகள் விளங்குமாறு உரிமையுடன் பொறுப்புள்ள மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  #யாழ் #பல்கலை  #மாணவர்களின் #வகுப்பு #புறக்கணிப்பு #முடிவு

 

http://globaltamilnews.net/2019/129108/

3 hours ago, கிருபன் said:

இவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் மாணவர்கள் மட்டும் அல்லர். இவற்றை சிந்திப்பதற்காகவே பல்கலையில் பேரவை, மூதவை என்பன இருக்கின்றது. அத்துடன் இவற்றை சுட்டிக்காட்டவேண்டியது எமது அரசியல் தலைவர்களதும் ஊடகங்களினதும் கடமையாகும்.

இவர்களுடைய கடமை கொலைகாரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதும், எவனோ காசுகுடுத்து கட்டின கட்டிடங்களை கொலைகாரர் திறக்கேக்க பக்கத்துல நிக்கிறதும், பின்கதவால நிறைய வாங்கி அதுல கொஞ்சத்துல றோட்டு போடுறதும், கொலைகாரர்களுக்கு பிரச்சினை என்டா முண்டியடித்து கேஸ் போடுறதும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.