Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிப்புறும் விமான சேவைகள்

Featured Replies

பாதிப்புறும் விமான சேவைகள்

கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது 2001 ஜூலையில் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதலினால் ஏற்பட்ட நேரடி சேதங்களைப் போன்று பாரிய நேரடி அழிவை, இப்போது விடுதலைப்புலிகளின் வான் புலிகள் நடத்தியிருக்கும் மூன்று விமானத்தாக்குதல்களும் ஏற்படுத்தாமல் போயிருக்கலாம்.

ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு மிக்க தலைநகரின் வான் பிரதேசத்துக்குள், அரசுப் படைகளின் தீவிர கண்காணிப்புக் ஏற்பாடுகளையும் மீறி, வெற்றிகரமாகப் புலிகளின் விமானங்கள் பறந்து சென்று, குண்டுகளை வீசிவிட்டு, பாதுகாப்பாகத் தமது தளங்களுக்குத் திரும்புகின்றமை மறைமுக வழியில் பெரும் பாதிப்புகளையும், பின்னடைவுகளையும், இழப்புகளையும் அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவது கண்கூடு.

ஏற்கனவே எமிரேட்ஸ் மற்றும் கத்தே பசுபிக் விமான சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான தமது விமான சேவைகளைத் தாம் இடைநிறுத்துகின்றன என அறிவித்துள்ளன. சிங்கப்பூர் விமானசேவையோ கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இரவில் நெருங்குவதையே தவிர்ப்பது என முடிவுசெய்துவிட்டது. இனிமேல் பகலில்தான் அந்த விமான சேவை விமானங்கள் கொழும்பு வந்து போகும் என்ற நிலைமை. அதற்கேற்ப தனது விமான சேவை அட்டவணையை அந்நிறுவனம் மாற்றி அமைத்திருக்கின்றது.

ஏனைய பல விமான சேவை நிறுவனங்களும் இவற்றைப் பின்பற்றி கொழும்புக்கான தமது விமான சேவைகள் குறித்து மறுபரிசீலனை செய்து வருகின்றன.

இவ்வாறு அச்சப்பட்டு அவசரப்பட்டு அவை முடிவுகளை எடுப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

கடந்த ஞாயிறு அதிகாலை தலைநகர் கொழும்பு வரை புலிகளின் விமானங்கள் மீண்டும் வந்திருக்கின்றன என்ற தகவல் வெளியானபோது பாதுகாப்புத்தரப்பில் ஏற்பட்ட பீதி அனைவருக்கும் தெரிந்ததுதான். அச்சமயம் விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாண்ட படைத்தரப்பினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

உரிய விமான சமிக்ஞை விளக்குகளை எரிய விட்டபடி அச்சமயம் கொழும்புக்கு மேலாக பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் ஜெட் விமானம் ஒன்றை இலக்கு வைத்து, தரையிலிருந்து படையினர் குண்டுகளைத் தொடர்ந்து ஏவியமையையும், அந்த ஜெட் விமானம் சென்றுகொண்டிருந்த திசையை நோக்கி, சிவப்பு நிறத்தில் அக்னிப் பிழம்பாக வேட்டுகள் தொடர்ந்து சீறிக்கொண்டு சென்றமையையும் தலைநகரில் சாதாரண பொதுமக்களே பீதியுடன் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

தெய்வாதீனமாக, கீழிருந்து ஏவப்பட்ட அக்குண்டுகள் சம்பந்தப்பட்ட ஜெட் விமானம் பறந்த பல்லாயிரம் அடி உயரத்தில் அரைவாசியைக் கூட எட்டமுடியாமல் செயலிழந்ததால் சேதங்கள் ஏற்படவில்லை.

இதனை நோக்கும், சாதாரண பாமர மக்கள் மனதிலேயே இரண்டு முக்கிய அனுமானங்கள் எழுந்தன.

ஒன்று சாதாரண சிவில் பயணிகள் விமானம் எது, எதிரிகளின் விமானம் எது என்பதைக் கூட அடையாளம் காணும் தகைமையும் திறமையும் அற்றவர்களின் கைகளில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புத் தொடர்பான விமான எதிர்ப்பு ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

மற்றது அவ்வளவு உச்சத்தில், உயரத்தில், பறக்கும் ஒரு ஜெட் விமானத்தை தமது கைகளில் இருக்கும் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் சன்னங்கள் எட்டமாட்டா என்பதைக்கூட உணரமுடியாத நிலையில் தான் அந்த ஆயுதங்களைக் கையாள்வோர் இருந்திருக்கின்றனர். ஒன்று, இரண்டல்ல, பல நூறு வேட்டுக்களை அந்த விமானத்தை நோக்கி சரமாரியாக தொடர்ந்து அவர்கள் தீர்த்ததை நோக்கும்போது இப்படித்தான் அனுமானிக்க முடிகின்றது.

தலைநகரின் பாதுகாப்புக்கான விமான எதிர்ப்பு ஆயுதங்களை இத்தகைய தகைமையுடையவர்களின் கைகளில் ஒப்படைத்துள்ள நிலையில் கொழும்புக்கு சர்வதேச விமான நிறுவனங்கள் தமது விமானங்களை வழமைபோல சேவையில் ஈடுபடுத்தவேண்டும் என எதிர்பார்ப்பது எங்ஙனம் நியாயமாகும்?

சர்வதேசப் பயணிகள் விமானத்தை இலக்கு வைத்து விமான எதிர்ப்பு ஆயுதங்களைத் தொடர்ந்து பல நிமிடங்கள் இயக்கியமை தொடர்பாகப் பாதுகாப்புத் தரப்பில் யாராவது பொறுப்புக் கூறுவார்களா? யார் அந்தப் பெரும் தவறுக்கு பொறுப்பேற்கப் போகின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போவதில்லை என்பது ஊகிக்கக்கூடிய விடயம்.

இந்தப் பின்னணியில் இலங்கைக்கான சர்வதேச விமான சேவைகளில் ஆபத்து ஏதுநிலை அதிகரித்துள்ள சூழலில் கொழும்புக்கான சேவைகளுக்கு தனது காப்புறுதிக் கட்டணங்களை சர்வதேசக் காப்புறுதி நிறுவனங்களும் பல மடங்கு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உண்டு. அத்தகைய நிலையில் இந்த விமான சேவை நிறுவனங்கள் மேலும் பல இக்கட்டுகளை எதிர்நோக்க வேண்டி நேரும்.

கொழும்புக்கான பயணக்கட்டணங்கள் உயரும். ஆபத்துகள் நிறைந்த மரணங்கள் மலிந்த இலங்கைத் தீவுக்கு பயணிக்கின்ற சுற்றுலாப் பயணிகள் உட்பட சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை பெரு வீழ்ச்சி அடையும். இவற்றால் விமான சேவை நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்படும்.

விமான சேவைகள், சுற்றுலாத்துறை உட்பட இலங்கையின் பொருளாதாரத்தின் அடி நாதமாக விளங்கும் ஒவ்வொரு துறைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும் தாக்கங்களையும், பாதிப்புகளையும், மோசமான விளைவுகளையும் புலிகளின் வான் தாக்குதல்கள் ஏற்படுத்தப் போகின்றன என்பது வெளிச்சமாகத் தெரிகின்றது.

போர் வெறி முனைப்போடு இராணுவத் தீர்வில் தீவிரம் காட்டி நிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, தனது அத்தகைய போரியல் போக்கினால் இந்தப் பாதகமான விளைவுகளை, தானே விதைத்து இப்போது வினையாக அறுவடை செய்துகொண்டிருக்கின்றது.

கேட்டைக் கேட்டு வாங்குபவர்களை யார் தான் என்ன செய்ய முடியும்?

உதயன் ஆசிரியர் தலையங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையளுக்கு நல்லா வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.