Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா நினைவுப் பொருளாக கடற்கரை மணலை சேகரித்த இருவருக்கு 6 வருட சிறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c70h9ivo_beach-generic_625x300_21_August_19.jpg

சுற்றுலா நினைவுப் பொருளாக கடற்கரை மணலை சேகரித்த இருவருக்கு 6 வருட சிறை!

இத்தாலிக்கு சுற்றுலா சென்றதற்கான நினைவுப் பொருளாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதாக குற்றம்சுமத்தப்பட்ட பிரான்ஸை சேர்ந்த இருவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) 6 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா தீவுப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிஸ்லாந்து, ஒஸ்ட்ரியா, சிலோவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன.

எனவே, அங்கு உல்லாசச் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பஞ்சமில்லை. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பொது மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் அந்த தீவுப்பகுதிகளுக்கும் செல்கின்றனர்.

அங்குள்ள கடற்கரைகளில் இயற்கையின் அழகை ரசித்த வண்ணம் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை கழிப்பது வழக்கம்.

அந்த வகையில், இரண்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஷியா (Chia beach) கடற்கரையில் பொழுதை கழித்துவிட்டு, அங்கிருந்து புறப்படும் போது, நினைவுப் பொருளாக எடுத்துச் செல்வதற்கு 14 பிளாஸ்டிக் போத்தல்களில் தலா 90 பவுண்டுகள் அளவிற்கு எடை கொண்ட கடல் மணலை நிரப்பியுள்ளனர்.

இதனை அவதானித்த கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கண்டித்ததுடன், நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.

இந்த செயற்பாடு தமது நாட்டின் இயற்கை வளத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தீர்ப்பளித்த இத்தாலிய நீதிமன்றம் அவர்களுக்கு 6 வருட சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டம் சார்தீனியா கடற்கரைகளில் இருந்து மணல், கூழாங்கற்கள் அல்லது கடற்சிப்பிகளை வேறிடத்திற்கு எடுத்துச்செல்வது சட்டவிரோதமானது என கூறுகிறது.

http://athavannews.com/சுற்றுலா-நினைவுப்-பொருளா/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.