Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

UPDATE - ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு!

 

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.

குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன.

எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.

UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2019-08-21-at-1.39.57-PM-WhatsApp-Image-2019-08-21-at-1.39.57-PM-720x405.jpeg

kili-720x405.jpgkili-720x405.jpg

kili3-640x480.jpgkili3-640x480.jpg

UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல்!

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு!

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்.

Sritharan-Mp-Home-8-720x418.jpg

Sritharan-Mp-Home-6-720x418.jpg

Sritharan-Mp-Home-4-3-720x418.jpg

Sritharan-Mp-Home-3-720x418.jpg

Sritharan-Mp-Home-4-1-720x418.jpg

http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்துள/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.