Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நஷ்டத்தில் தவிக்கும் 10 வங்கிகள் நான்காக குறைப்பு அரசு வங்கிகள் அதிரடி இணைப்பு: 27 ஆக இருந்த வங்கி எண்ணிக்கை 12 ஆகிறது

Featured Replies

நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார்.

அதன்படி, நேற்று அவர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, வங்கிகள் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அவரது அறிவிப்பின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், ரூ.17.95 லட்சம் கோடி வர்த்தகம் கொண்ட இவ்வங்கி, நாட்டின் 2வது பெரிய வங்கியாக மாறும். இதேபோல், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு பாங்க் ஆப் பரோடாவுடன் தேனா வங்கி, விஜயா வங்கியை மத்திய அரசு இணைத்தது. மற்ற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப்-சிந்து வங்கி ஆகிய பிராந்திய பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைப்பு மூலம், கடந்த 2017ல் 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கிய 10 பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைத்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: பொருளாதாரத்தை சீர்படுத்த பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு பெரிதும் உதவும். வங்கிகள் முன்பு இருந்ததை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். கடன் வழங்குதலும் அதிகரிக்கும். இதனால், பணப் புழக்கத்தை அதிகரிக்க முடியும். வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. வங்கி நிர்வாகத்திலும் பல்வேறு புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்படும். வெற்றிகரமான திட்டங்களை மேற்கொள்ள வங்கி நிர்வாகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படாது. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளியும் இருக்காது.

வங்கி இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். சர்வதேச அளவில் தரமிக்க வங்கிகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இதற்கு முன்னதாகவே, பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும்  நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதன்படி, தற்போது பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவற்றின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடன் வசூலிப்பில் சாதனை
அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘கடன் வசூலில் மத்திய அரசு சாதனை படைத்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால், கடந்த ஓராண்டில் 1.21 லட்சம் கோடி வராக்கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளின் வராக்கடன் 8.65 லட்சம் கோடியில் இருந்து 7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

வெள்ளை அறிக்கை காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ஜெய்வீர் ஷெர்கில், கவுரவ் வல்லபா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் பொருளாதாரத்தையும், வங்கி அமைப்பையும் பாஜ அரசு சீரழித்து விட்டது. எனவே, பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டும். சரிந்து வரும் பொருளாதாரம், நிதி மோசடிகள் அதிகரிப்பு குறித்து பாஜ அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இணைக்கப்பட்ட 10 பொதுத்துறை வங்கிகள்

தலைமை வங்கி                         இணைக்கப்பட்ட வங்கிகள்                                                         வர்த்தக அளவு              நிலை
பஞ்சாப் நேஷனல் வங்கி        ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி                17.95 லட்சம் கோடி    2வது பெரிய வங்கி
கனரா வங்கி                                 சிண்டிகேட் வங்கி                                                                             15.20 லட்சம் கோடி    4வது பெரிய வங்கி
யூனியன் வங்கி                           ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி                                    14.59 லட்சம் கோடி    5வது பெரிய வங்கி
இந்தியன் வங்கி                            அலகாபாத் வங்கி                                                                              8.08 லட்சம் கோடி    7வது பெரிய வங்கி

இதுதவிர, நாட்டின் பெரிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (’52.05 லட்சம் கோடி வர்த்தகம்), பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப்-சிந்து வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=522412

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.