Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சு.கவின் தீர்வு யோசனை குறித்து புதுடில்லியின் பிரதிபலிப்பு விரைவில்!

Featured Replies

சு.கவின் தீர்வு யோசனை குறித்து

புதுடில்லியின் பிரதிபலிப்பு விரைவில்!

அதிருப்தி தெரிவிக்கும் கருத்து

பெரும்பாலும் நாளை வரும்

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஆளும் அரசுக் கூட்டமைப்பின் பிரதான கட்சி யான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருக்கும் யோசனை குறித்து புதுடில்லிபெரும் அதி ருப்தி கொண்டிருப்பதாக அறியவருகிறது. அது தொடர்பான தனது நிலைப்பாட்டைப் பிரதி பலிக்கும் கருத்தை இந்திய அரசு பெரும்பாலும் நாளை பகிரங்கப்படுத்தும் என விடய மறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.

இலங்கையில் ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சி ஸ்ரீல.சு.கவே. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் இயங்கும் கட்சி அது.

எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அக்கட்சி முன்வைக்கும் யோசனை ஆளும் தரப்பின் உயர் மட்டத்தின் கருத்து நிலைப் பாட்டை வெளிப்படுத்துவதாகவே இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கருதுகின்றது.

அத்தகைய நிலையில், ஆளும் தரப்பின் யோசனைத்திட்டம், சிறிதேனும் விட்டுக் கொடுப்புடன் கூடியதாக இல்லாமல், இறுக்கமானதாகவும், ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு நெருங்கிக்கூட வராததாகவும் அமைந்திருப்பது சர்வதேச சமூகத்தைப் பெரும் ஏமாற்றத்துக்குள்ளும், எரிச்சலுக் குள்ளும், அதிர்ச்சிக்குள்ளும் ஆழ்த்தியி ருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஈழத்தமிழர்களுக்கு நியாயமானதைப் பகிர்ந்தளிக்க கொழும்பு முன்வந்தால் மட்டுமே புலிகளின் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதப் பிடிவாதப்போக்கையும் ஓரங்காட்டி ஒதுக்கலாம் என்று கருதும் புது டில்லி, இது விடயத்தில் விட்டுக் கொடாத இறுக்கமான போக்கை மஹிந்தரின் கட்சியும் அரசுத் தரப்பினரும் வெளிப்படுத்தி வரு கின்றமை மறுபுறத்தில் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கைப் போராட்டத்தை நியாயப்படுத்தி நிற்பதாகக் கருதுகின்றது.

தோல்வி கண்டமாவட்ட

அபிவிருத்திச்சபை

அத்தோடு , 25ஆண்டுகளுக்கு முன்னர், 1981 1982 காலப்பகுதியில், ஈழத்தமி ழர்களின் விருப்புக்குமாறாக நடைமுறைப் படுத்தப்பட்டு, முழு அளவில் தோல்விகண்ட மாவட்ட அபிவிருத்தி சபைத் திட்டத்தையே, மாவட்ட மட்ட அதிகாரப்பகிர்வு மற்றும் கிராம ராஜ்யம் என்ற பெயர்களோடு தீர் வாக மீண்டும் முன்வைப்பதற்கு ராஜபக்ஷ அரசு இணங்குகின்றது என இந்த யோச னைத் திட்டத்தின் அடிப்படையில் இந் தியா எடைபோடுகின்றது.

அதையும் தாண்டி மாகாணசபை அடிப் படையிலான தீர்வு யோசனை இந்தியத் தலையீட்டுடன், இலங்கை இந்திய ஒப்

பந்தம் மூலம் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு, அதுவும் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யாமல் தோல்வி கண்டுள்ளது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட தமிழர் தாயகத்தை இப் போது இரண்டாகப் பிரித்த கொழும்பு அரசு, அந்த மாகாணசபைத் திட்டத்தையே நிரா கரித்து அதற்கும் கீழிறங்கி மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வை பிரஸ்தாபித் திருப்பது புதுடில்லிக்குக் கடும் அதிருப் தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படு கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மூன்று தடவைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கின்றார். ஒவ்வொரு முறை யும் புதுடில்லி அரசின் உயர்மட்டத்துடன் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து அவர் பல தடவைகள் விரிவாகப் பேசியிருக்கின்றார்.

சமாளிக்கும் ஏமாற்று முயற்சியா?

இதேபோன்று இக்காலப் பகுதியில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஒருதடவையும், வெளிவிவகாரச் செயலர் இரண்டு தடவைகளும் கொழும்பு வந்தி ருந்தபோது இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரில் சந்தித்து விரிவாகப் பேச்சு நடத்தியிருந் தனர்.

இந்த ஆறு சந்திப்புகளின் போதும், இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுயோச னைத்திட்டம் ஒன்றை அதிக அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய தீர்வு ஏற்பாடு ஒன்றை அரசுத்தரப்பு வெளியிடுவதன் மூலமே மோசமடைந்து வரும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கட்டுக் குள் கொண்டுவரலாம் என இந்தியத் தரப்பு ஜனாதிபதி மஹிந்தரிடம் வற்புறுத்தித் தெரிவித்திருந்தது.

அந்த வற்புறுத்தலுக்கு அமைய, அர சுக்கட்சியின் தீர்வு யோசனைத் திட்டத்தை இதோ அறிவிக்கிறேன், அதோ வெளியிடு கிறேன் என இந்தியத் தரப்புக்கு ஒவ்வொரு முறையும் சமாதானம் கூறி காலத்தை இழுத்து வந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அழுத்தம் அதிகரித்த நிலையில் சமாளிப்பு ஏற்பாடாக உருப்படியற்ற தமிழர்களின் அபிலாஷைகளை எட்டிக்கூடப்பார்க்காத ஒரு திட்டத்தை அவர் முன்வைத்திருக் கின்றார் எனப் புதுடில்லி கருதுகின்றது எனத் தெரிகின்றது.

தமிழர்களுக்கு நியாயமானதை விட்டுக்கொடுக்க இயலாத கொழும்பின் போக்கு விபரீதமான விளைவுகளுக்கு வழி சமைக்கக்கூடியது என்பதனைக் கோடி காட்டும் விதத்தில் அமையும் வகையில் தனது கருத்தை புதுடில்லி பெரும்பாலும் நாளை வெளியி டும் எனத் தெரிகின்றது. (உ)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.