Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் 3ஆவது என்டர்பிரைஸ் கண்காட்சி

Featured Replies

NW01.jpg?itok=fpEhdfbh

இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும்“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி,எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கோட்டை முற்றவெளியில் நடைபெறும்.

விசேடமாக,வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வியாபார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்தபட்ச வட்டி நிவாரணக் கடன்களை வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வருவதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

வடக்கில் தொழில்முயற்சிக்கான எதிர்பார்ப்புக்களை கொண்ட இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு அவசியமான சேவைகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், இந்தக் கண்காட்சித் தளமானது ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

தொழில்முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய 07 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இதனால்,கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு, தமது தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடிகின்றது.

தொழில்முயற்சியாளர்கள் பிரிவின் மூலம், அவர்களின் தொழில்முயற்சி அபிலாஷைகளை ஒரு வியாபாரமாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்வது முதல், அதனை ஆரம்பிப்பதற்கான வட்டி நிவாரணக்கடன்களை பெறுவதற்கான தகுதியை பெறுவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும்.

இதற்காக, நிதி அமைச்சின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” செயலாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் அனைத்து அரச வங்கிகளின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கடன் திட்டம் தொடர்பான அதிகாரிகளின் உதவியைப் பெற்றுகொள்ள முடியும். அத்துடன் குறிப்பிட்ட வங்கிகளின் ஊடாக துரிதகதியில் கடன் தொகையைப் பெறுவதற்கான பதிவுகளை அத்தருணத்திலேயே மேற்கொள்ள முடியும்.

அரச மற்றும் தனியார் துறை பிரிவின் ஊடாக, விஷேடமாக, நாட்டின் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பிலும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்கள், அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றினால், பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்த தகவல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

கண்காட்சி நிலையத்துக்கு வருகை தரும், இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கென, கல்விப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அனுசரணையில், பாடசாலை பாடத்திட்டங்களுடன் தொடர்புடைய புத்தகங்கள், விஷேட தள்ளுபடி விலையில்இங்கு விற்கப்படுகின்றன. அத்துடன், மாணவர்களுக்கு அவசியமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கென, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் இந்தக் கண்காட்சிப் பிரிவில் இடம்பெறும். அதேவேளை,உயர்கல்வி வாய்ப்புக்கள் குறித்த வழிகாட்டுதல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள், மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். குறிப்பாக, இலங்கை முதலீட்டு சபையின் கீழ்உள்ள தொழிற்சாலைகளின் ஆடைகளை,வரி விலக்கு அளிக்கப்பட்ட விலைகளில், இங்கே கொள்வனவு செய்ய முடியும்.

இதற்கு மேலாக, புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கென ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், விருது வென்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.

இலத்திரனியல் ஊடக வலயத்தின் மூலம், பொதுமக்களுக்கு பிடித்தமான இலத்திரனியல் மற்றும் ஊடக பிரதிநிதிகளை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அத்துடன், பாடசாலை மாணவர்களுக்குரிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதம், நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறு படமாக்கப்படுகின்றன? மற்றும் செய்தி உட்பட பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் எவ்வாறு ஒளிபரப்பப்படுகின்றன என்பதைப் பார்வையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் இங்கு கிடைக்கின்றது.

காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தினமும் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.thinakaran.lk/2019/09/02/உள்நாடு/39608/யாழ்ப்பாணத்தில்-3ஆவது-என்டர்பிரைஸ்-கண்காட்சி

  • தொடங்கியவர்

என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா இது வரை சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா இது வரை சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு-Enterprise Sri Lanka 2nd Day-More than 10k Particiapation

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் தற்போது யாழ் கோட்டை முற்றவெளியில் இடம்பெற்று வருகின்றது.

நிதியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் மூலம் 10 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் இக்கண்காட்சியின் இன்றைய (08) இரண்டாம் நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) வரை இடம்பெறவுள்ளது.

வடக்கின் தனித்துவமான பல்வேறு துறை தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை வலுப்படுத்தவும் புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதும் இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

யாழ். மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா துறைகளுக்கு முன்னுரிமையளித்து, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதும் இந்த செயற் திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் தொழில் முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தினமும் நாட்டின் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2019/09/09/உள்நாடு/39989/என்டர்பிரைஸ்-ஶ்ரீ-லங்கா-இது-வரை-சுமார்-50-ஆயிரம்-பேர்-பங்கேற்பு

  • தொடங்கியவர்

என்டபிரைஸ்: கடன் வழங்குவதை இலகுபடுத்துமாறு அறிவுறுத்தல்

விதவைகள், முன்னாள் போராளிகளுக்கு பிணையாளர்கள் அவசியமில்லை

என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டத்தின் மூலம் அரச வங்கிகளில் 15 இலட்சம் ரூபாய் வரை கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை அவசியமில்லை என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (08) யாழ்ப்பாணத்தில் அறிவித்தார்.

வட மாகாணத்தின் இளைஞர் யுவதிகளுக்கு உதவும் முகமாக நடத்தப்படும் என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டத்தைப் பார்வையிடுவதற்காக விஜயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் போது, இந்தத்திட்டத்தின் ஊடாகக் கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை கோரப்படுவதாகவும், பிணையாளர்களைத் தேடுவதற்குத் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதற்கிணங்க அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, 15 இலட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்குப் பிணை கோர வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் விதவைகளுக்குக் கடன் வழங்குவதில் அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று பிணையாளர்கள் இருவரைக் கோருவதிலிருந்து விலக்களிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கும் பிணையாளர்கள் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ் கச்சேரியில் விதவைகள் மற்றும் சிறிய தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், திறைசேரியின் உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் முதலானோருடன் தனியான சந்திப்பையும் மேற்கொண்டார்.

யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://www.thinakaran.lk/2019/09/09/உள்நாடு/39987/என்டபிரைஸ்-கடன்-வழங்குவதை-இலகுபடுத்துமாறு-அறிவுறுத்தல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.