Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples-2.jpg

ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்!

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலிய மக்கள் அணிதிரண்டு பேரணி நடத்தியுள்ளனர்.

ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, அவர்களின் பிள்ளைகளான 4 வயது கோபிகா, 2 வயது தருணிகா ஆகியோரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது.

ஆனாலும், அவுஸ்ரேலியாவுக்குள் தங்கவிடாமல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு தமிழ் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் தான் குடியிருக்க வேண்டும். அவர்களை இலங்கைக்கோ அல்லது கிறிஸ்மஸ் தீவுக்கோ அனுப்பக் கூடாது எனக் கோரி  ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்.

மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, அடிலெய்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பதாகைகளை ஏந்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேரணியை நடத்தியுள்ளனர்.

ஈழத் தமிழர்களான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா இருவரும் கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டில் தனித்தனியாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக சென்றனர். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். இதில் நடேசலிங்கத்துக்கும் பிரியாவுக்கும், அவுஸ்ரேலியாவில் இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், இந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசா காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது

இதையடுத்து மெல்போர்ன் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து நடேசன் குடும்பத்தை விமானம் மூலம் இலங்கைக்கு அவுஸ்ரேலிய அரசு அனுப்பி வைத்தது. இலங்கையில் பிறந்த நடேசலிங்கத்துக்கும், அவரின் மனைவி பிரியாவுக்கும் மட்டுமே குடியுரிமை இருக்கிறது.

ஆனால், அவுஸ்ரேலியாவில் பிறந்த அவர்களின் இரு குழந்தைகளான கோபிகா, தருணிகா இருவருக்கும் இலங்கை அரசு குடியுரிமை வழங்காது. அவுஸ்ரேலிய அரசும் குடியுரிமை வழங்காது.

இந்த சூழலில் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹீதர் ரிலே ஈழத் தமிழர் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பத் தடை விதித்தார்.

ஆனால், அவர் இந்த உத்தரவு பிறப்பிக்கும் போது, விமானம் அவுஸ்ரேலியாவின் டார்வின் நகரை விட்டு இலங்கை நோக்கிப் புறப்பட்டது. இதுகுறித்து நீதிபதி ஹீதரிடம் அதிகாரிகள் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஆனால், நீதிபதி ஹீதர் அதற்குச் சம்மதிக்காமல் விமான நிலையத்துக்கு தொலைபேசியில் உரையாடி விமானத்தை உடனடியாக தரையிறங்க உத்தரவிட்டார். அதன்பின் தரையிறங்கிய விமானத்தில் இருந்து நடேசன் குடும்பத்தினர் கீழே இறக்கி விடப்பட்டு, மெல்போர்ன் நகரில் தங்கவைக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடேசலிங்கம் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தத் தடை விதித்தது.

ஆனால், வெளியுறவு மற்றும் குடியேற்றக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் அவுஸ்ரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு, நடேசலிங்கத்தின் குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பத் தீவிரமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் குடும்பத்தை மெல்போர்ன் நகரில் தங்க வைக்காமல் அவர்களை அகதிகளை அடைத்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கு அவுஸ்ரேலிய அரசு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples-1.jpg

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples-3.jpg

Australia-Peoples-Protest-for-Srilanka-Tamil-Peoples.jpg

http://athavannews.com/ஈழத்-தமிழ்-குடும்பத்துக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.