Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையும் விமர்சனமும்.- Na Ve Arul (நா.வே.அருள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கவிதை ஜெயபாலன்
 
விமர்சனமும்.- Na Ve Arul
.
 
.
மா கவிதை
*****************
ஒரு கவிதை நமக்குள் என்ன செய்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது வாசகர்களாக இருக்கிற மிக முக்கியமான வரையறை, எது கலை என்கிற கேள்விக்கு கலை என்கிற தனது புத்தகத்தில் சொல்வார்…
“ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது.”
 
இது கவிதைக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆனந்த விகடன் (18.9.2019) இதழில் வ ஐ ச ஜெயபாலன் எழுதிய கவிதை எனக்குள் ஏற்படுத்திய அவரது தருதல் என்பதுதான் முக்கியமாகப் படுகிறது.
//உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்?//
என்று தொடக்கத்திலேயே கவிதையின் மையத்தை நிலை நிறுத்திவிடுகிறார். இது ஒரு தேரின் புறப்பாடு போல என்னைக் கவனிக்க வைத்தது. என் மனம் வடம் பிடித்து இழுக்க ஆரம்பித்துவிட்டது. கவிதை தேரைப் போல மெல்ல மெல்ல அசைந்து மனதுக்குள் நகரத் தொடங்கிவிட்டது.
// வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
உரு முதுகாடாய் உதிர்க்கிறது.
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத…//
இப்போது கவிதைத் தேரின் மேல் போர்த்தியிருக்கும் வண்ண வண்ண ஆடைகள் தோற்றம் தர ஆரம்பித்துவிட்டன. அங்கு கட்டப்பட்டிருக்கும் இளநீர்த் தெங்குகளும், வாழைப்பழக் குலைகளும் ஆடி ஆடி அசைய ஆரம்பித்துவிட்டன.
கவிதைத் தேர்ச் சப்பரத்தில் அமர்ந்தபடியே நாயனம் தன் இசையருவியை என் செவிகளுக்குள் பாய்ச்ச ஆரம்பித்துவிட்டது. மேளம் தன் ஆவர்த்தனத்தை ஆலாபிக்க ஆரம்பித்துவிட்டது.
//நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய்
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின்
இறுதிச் சாபங்கள் அலைகிறதே,
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்//
 
ஈழ இலங்கை முற்றும் சுற்றிய தேர் நிலைகொள்ள வருகிறது.
//அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
“வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்”
 
நிலையில் நிறுத்திய பிறகும் தேரின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்க வருகிற மக்களைப்போல வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும் என்கிற கவிதை தெய்வத்தை வணங்கிப் பெருமிதத்துடன் நகர்கிறேன். வாழ்க வ ஐ ச ஜெயபாலன். — with Indran Rajendran and Jaya Palan.
..

No photo description available.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.