Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் கரம் மேலோங்கினால் இந்தியாவுக்கு கடுமையானதாக அமையும்

Featured Replies

தென்­பு­லத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வட­பு­லத்தில் காணப்­படக்கூடிய இந்­திய - சீன எல்­லையில் கடும் பதற்றம் ஏற்­படும். எனவே தான் இலங்­கையின் அர­சியல் நிலைப்­பாடு இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­கின்­றது. அதற்­காக குறுக்­கீ­டுகள் தொடர்­பான குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மறு­புறம் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­ற­தைப்­போன்று இலங்­கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்­கு­மாக இருந்தால் அதன் தாக்கம் இந்­தி­யா­வுக்கு கடு­மை­யாக இருக்கும் என இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தமி­ழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரி­வித்தார். 

இலங்கை என்­பது இந்­தி­யர்­க­ளுக்கு குறிப்­பாக தமி­ழ­கத்­துக்கு மிகவும் நெருக்­க­மான நாடாகும். அவ்­வ­கை­யான நெருக்­க­மான உணர்­வுடன் தான் இலங்கை மக்­களை இந்­தி­யர்கள் கரு­து­கின்­றனர். எனவே தான் இலங்கை வாழ் மக்­களை சந்­தித்து பேசு­கின்றபோது வெளி­நா­டொன்­றுக்குச் சென்ற உணர்வு எமக்கு ஏற்­ப­டு­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். 

தனிப்­பட்ட விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தமி­ழக துணை தலைவர் எம்.அப்துல் ரஹுமான் வீர­கே­சரி பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

தென்­புல மக்­களின் எதிர்ப்­புகள் 

இந்­திய தேசத்தில் ஒவ்­வொரு பகு­தி­க­ளிலும் வாழும் மக்­க­ளுக்கு பார­திய ஜனதா கட்­சியின் ஆட்சி மீது பல்­வேறு வகை­யான நிலைப்­பா­டுகள் உள்­ளன. இந்­தி­யாவின் வட புலத்தில் பிர­தமர் நரேந்­திர மோடியின் ஆட்சி முறைமை குறித்து ஒரு சிறந்த எதிர்­பார்ப்பு உள்­ளது. ஆனால் அதற்கு எதிர்­மா­றான நிலைப்­பாடே இந்­தி­யாவின் தென் புலத்தில் வாழும் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, வெளி­நாட்டு உற­வுகள், விவ­சா­யத்­து­றையை முன்­னேற்­று­வ­தற்­கான வழி­மு­றைகள் இவற்றில் காட்டக் கூடிய ஆர்­வத்தை தாண்டி மத  ரீதி­யி­லான செயற்­பா­டு­களில் ஆழ­மாக செயற்­ப­டு­கின்­ற­மையே தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் மீதான தென் புலத்தின் எதிர்ப்­புக்­க­ளுக்கு கார­ண­மா­கின்­றது.

அதே போன்று வட புலத்தில் பெரு­வா­ரி­யாக வாழக் கூடிய இந்து மக்­கள் ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு பண்­பாடு, ஒரே வடி­வி­லான வணக்க வழி­பாட்டு முறை என்ற இலக்கை நோக்கி போவ­தாக பார­திய ஜனதா கட்சி குறிப்­பிட்­ட­மை­யி­னா­லேயே வட­புல மக்கள் வர­வேற்­கின்­றனர் . 

இதில் தவ­றேதும் கிடை­யாது. ஆனால் இந்­தி­யா­வி­னு­டைய தனி சிறப்­பாக நாம் கரு­தக்­கூ­டிய பன்­முகத் தன்மை, சகல மதத்­தையும் மதித்து செயற்­படக் கூடிய மத சார்­பற்ற நிலை என்­பன கேள்­விக்­கு­றி­யாக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இந்த தனிச்­சி­றப்பை இந்­தி­யா­வி­னு­டைய தென் புல மக்கள் அதி­க­மாக விரும்­பு­கின்­றனர். எனவே தான் பிர­தமர் நரேந்­திர மோடியின் நட­வ­டிக்­கைகள் விரும்­பத்­த­காத விட­யங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன.

 

காஷ்மீர்

காஷ்மீர் விவ­கா­ரத்தில் காஷ்­மீ­ருக்­கான தனி சிறப்பு அந்­தஸ்தை மத்­திய அரசு நீக்­கி­யி­ருக்­கி­றது. காஷ்­மீ­ருக்­கான சிறப்­பு­ரி­மைகள் தொடர்­பான அர­சியல் சாசனம் நீக்­கப்­பட்­ட­மையே இந்­திய அர­சியல் சாச­னத்­துக்கு முர­ணா­னது என்­பதே எமது நிலைப்­பா­டா­கவும் காணப்­ப­டு­கின்­றது. இந்­திய அர­சியல் சாச­னத்தில் 370 என்ற பிரிவு உரு­வாக்­கப்­பட்டபோது  காஷ்­மீ­ருக்­கு­ரிய தனி அந்­தஸ்தை அந்த மக்கள் விரும்­பு­கிற காலம் வரை நீடிக்கும். அந்த மக்கள் விரும்­பா­விடின் மாற்­று­வ­தற்­கான சந்­தர்ப்பம் தாரா­ள­மாக உள்­ளது. இதுவே இந்­திய அர­சியல் சாச­னத்தில் 370 பிரிவின் உறு­திப்­பா­டா­கவும் அமைந்­துள்­ளது. 

சிறப்பு அந்­தஸ்தை நீக்­கு­வ­தற்கு முன்னர் ஜம்முகாஷ்மீர் மக்­களின் ஆணையை மத்­திய அரசு பெற்­றி­ருக்க வேண்டும். அவ்­வாறு காஷ்மீர் மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறாது சிறப்பு அந்­தஸ்து நீக்­கப்­பட்­டதன் ஊடாக இந்­திய அர­சியல் சாசன சட்டம் மீறப்­பட்­டுள்­ளது. எனவேதான் எமது எதிர்ப்பை வலு­வாக தெரி­வித்து வரு­கின்றோம். 

பன்­முக தன்­மைக்கு சவா­லாகும் ஒற்­றைப்­போக்கு இந்­தி­யாவில் பல்­வேறு மாநி­லங்கள் பல்­வேறு மத கலா­சா­ரங்­களைக் கொண்­டுள்­ளன. இந்த மாநி­லங்கள் தனித்­தனி  மொழி சிறப்பு மிக்­க­வை­யாகும். ஒவ்­வொரு மாநி­லத்­துக்கும் சுயாட்சி முறை காணப்­ப­டு­கி­றது. எனவே தான் மத்­தியில் கூட்­டாட்சி, மாநி­லத்தில் சுயாட்சி என்று கூறு­கின்றோம். மத்­தியில் இருக்கும் போது அனை­வ­ரு­டனும் ஒன்­றி­ணைந்து ஆட்சி செய்ய வேண்டும். மாநி­லங்­களில் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய மொழி, மத, கலா­சாரம் போன்ற விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஆட்­சியே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

சுயாட்­சியைக் கொண்­டி­ருக்கக் கூடிய தனித்­தனி மாநி­லங்­க­ளுக்­கான உரி­மை­களை எல்லாம் அழித்­து­விட்டு மத்­தியில் இருந்து அனைத்து மாநி­லங்­க­ளையும் ஆட்சி செய்­து­விட வேண்டும் என்ற ஒற்றை நோக்கு பார்­வை­யுடன் பிர­தமர் நரேந்­திர மோடி செயற்­பட முயற்­சிக்­கின்­றமை இந்­தி­யா­வி­னு­டைய தனிச்­சி­றப்பு பார்­வைக்கு நேர் எதி­ரா­ன­தாகும். எனவே இதுவரை காலம் காணப்­பட்ட இந்­தி­யா­வி­னு­டைய தனிச்­சி­றப்பு தற்­போ­தைய ஆட்­சியின் கீழ் குழி தோண்டி புதைக்­கப்­பட்டு விடுமோ என்ற அச்சம் எம் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

 

வெளி­நா­டு­க­ளு­ட­னான உற­வுகள் 

வெளி­நா­டு­க­ளினால் கேட்கக் கூடிய தேவை­க­ளுக்கு ஏற்ப அந்­தந்த நாடு­க­ளுக்கு வழி­காட்­டல்­களை வழங்­கி­விட்டு இந்­தி­யாவில் தனக்­கேற்­ற­வாறு பார­திய ஜனதா கட்சி ஆட்­சியே முன்­னெ­டுக்­கின்­றது. எனவேதான் சமஷ்டி ஆட்சி முறைமை விட்டு விலகி ஒற்றை ஆட்­சியை நோக்கி பய­ணிக்­கின்­றதா என்ற ஐயப்­பாடு ஏற்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் வெளி­நாட்டுக் கொள்­கை­களில் பார­திய ஜனதா கட்­சி­யி­னு­டைய அர­சாங்கம் தெளி­வான கொள்­கை­யுடன் உள்­ளதா என்ற சந்­தே­கமும் காணப்­ப­டு­கி­றது. ஏனென்றால் சொந்த நாட்டில் எந்த கொள்­கையைக் கொண்­டி­ருக்­கி­றார்­களோ அதன் பிர­தி­ப­லிப்­பா­கவே வெளி­நாட்டு கொள்­கை­களும் அமையும்.

மாநில சுயாட்­சியை மதித்து நடக்க வேண்­டி­ய­தி­லி­ருந்து விலகி இந்­தி­யா­வி­னு­டைய பன்­முகத் தன்­மையை அழித்து ஏனைய நாடு­க­ளுக்கு சுயாட்சி முறை­களில் போதிப்­பது எந்­த­ளவு ஏற்­பு­டை­யது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான நட்­பு­றவு என்­பது அர­சியல், இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லா­ன­தா­கவும், காலா கால­மாக தொன்­டு­தொட்டு வந்த உற­வா­க­வுமே அமைந்­துள்­ளது. 

இதனை மேலும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமை­யப்­பெற்ற இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான கப்பல் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக இரு நாட்டு மக்­க­ளுமே அந்­நி­யோன்­ய­மாக பழகக் கூடிய வாய்ப்­புக்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் ரஷ்­யாவின் விருப்­பத்­துக்கும் வேண்­டு­கோ­ளுக்கும் அமை­வாக இந்­தி­யா­வி­லி­ருந்து ரஷ்­யா­விற்கு கப்பல் சேவை ஆரம்­பிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

 

இலங்கை அர­சி­யலில் இந்­திய குறுக்­கீடு  

இலங்­கையின் அர­சியல் விவ­கா­ரங்­களில் இந்­தி­யாவின் தாக்கம் என்­ப­தெல்லாம் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­யங்­க­ளா­கவோ அல்­லது நிரூ­பிக்க கூடி­ய­வை­யா­கவோ இல்லை. அண்­டைய நாடு பல­மா­ன­தாக காணும் பட்­சத்தில் இவ்­வாறு பழி­சு­மத்­து­வது சாதா­ரண விட­ய­மாகும். ஒரு நாட்­டி­னது அர­சியல் மற்றும் தேர்தல் சூழ்­நி­லைகள் அதற்கு அப்­பா­லா­ன­தொன்­றாகும். எனவே கடந்த ஆட்­சி­மாற்ற தேர்­தலில் இந்­தி­யாவின் குறுக்­கீடு காணப்­பட்­ட­தாக கூறு­வ­தெல்லாம் ஏற்­றுக்­கொள்ளக்கூடி­ய­தாக இல்லை. 

கடந்த ஆட்சி முறையை நன்கு பரி­சீ­லித்து வாக்­க­ளித்­ததன் பிர­தி­பலிப்­பா­கவே இது காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு பார்­வை­யி­னையே இந்­திய மக்கள் இலங்கை மீது கொண்­டுள்­ளனர். 

மேலும் இலங்­கையின் கடந்த ஆட்சி சீனா­வுடன் மிக நெருங்­கிய உற­வு­களை கொண்­டி­ருந்­தது. நட்பு ரீதி­யி­லான உறவு என்­றாலும் கூட எல்­லைக்­கோட்டின் அடிப்­ப­டையில் இந்­தி­யா­விற்கும்  சீனா­விற்கும் இன்று வரை கசப்­பு­ணர்வு தொடர்­கின்­றது. இந்­தி­யா­வுடன் சீனா போர்­தொ­டுத்­த­போது இலங்­கை­யையும் ஒரு தள­மாக்க சீனா முயற்­சித்த போதிலும் அது வெற்­றி­ய­ளிக்க வில்லை. 

ஆனால் வர்த்­தக ரீதி­யாக தற்­போது சீனா இலங்கை அர­சாங்­கத்­துடன் மிக நெருக்­க­மான உற­வு­களை கொண்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­யா­விற்கு எதி­ரா­ன­தொரு போர் மீண்டும் ஏற்­படும் பட்­சத்தில் இலங்­கை­யையும் ஒரு தள­மாக பயன்­ப­டுத்தும் உள்­நோக்­குடன் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றதோ என்ற சந்­தேகம் எற்­க­னவே உரு­வா­கி­யது என்­பது உண்­மைதான். ஆட்­சியில் இருப்­ப­வர்­களைக்கொண்டு இந்த விடயம் நிதா­னிக்­கப்­ப­டு­கின்­றது. 

இலங்­கையின் தற்­போ­தைய ஆட்­சியை கவ­னத்தில் கொள்ளும் போது கடந்த ஆட்சி மீது இந்­தியா கொண்­டுள்ள சந்­தேகம் தற்­போ­தில்லை. இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவு மேலும் வலு­வ­டைந்து தொடர வேண்­டு­மாயின் இந்த சந்­தே­க­மற்ற நிலை நீடிக்க வேண்டும். 

இலங்கை மற்றும் இந்­தி­யாவில் இடம்­பெறக் கூடிய ஆட்சி முறை மக்­களின் நலன்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக அமைய வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அந்த வகையில் ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய ஆட்சிக் காலத்தில் தமிழ் பேசும் மக்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளி­னார்கள் என்­பதை நினைத்து பார்க்­கின்ற போது, இனி­யொரு முறை அந்த ஆட்சி வந்­து­விடக்கூடாது. அவ்­வாறு வந்தால் இந்த நாடு தாங்­குமா? மக்கள் ஜன­நா­யக உணர்­வு­க­ளோடு வாழ்­வார்­களா? இரு நாட்டு மக்­க­ளுக்கும் இடையில் சுமுக­மான நிலை ஏற்­ப­டுமா? என்­ப­தெல்லாம் கேள்­வி­க­ளா­கவே காணப்­ப­டுன்­கி­றன. 

மறு­புறம் ராஜ­ப­க் ஷவின் ஆட்சியின் ஊடாக சீனாவின் கரம் இலங்கையில் மீண்டும் ஓங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. இந்நிலை ஏற்பட்டால் இந்தியா – சீனா என்ற உறவில் ஒரு பதற்றம் உருவாகும். தென்புலத்தின் கரையை விட வடபுலத்தில் அருணாச்சலம் போன்ற மலைப்பிரதேசத்தில் காணப்பட கூடிய இந்திய - சீன எல்லையில் தாக்கம் செலுத்தும். அதே போன்று தென்புலத்தில் இலங்கையிடமிருந்து சீனா பெற்றுக்கொள்ளும் சலுகைகள் வடபுல எல்லையில் கடுமையாக தாக்கம் செலுத்தும். 

எனவே தான் ராஜபக் ஷவின் ஆட்சியின் மீள் வருகை இலங்கை - இந்திய உறவை கடுமையாக பாதித்துவிடும். அதே போன்று இந்தியா தொடர்பான சீனாவின் நிலைப்பாடு மோசமாக செல்வதற்கும் காரணமாக அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

(லியோ நிரோஷ தர்ஷன்)

https://www.virakesari.lk/article/64712

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.