Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கீழடி' பாண்டியர்களின் தலைநகரமா?'

Featured Replies

'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.

மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையா என்று எண்ண வைக்கிறது. மத்திய அரசு முழு முடிவையும் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு, தமிழர்கள் நாம் எவ்வளவு தொன்மையானவர்கள் என்பதை உணர வைக்கிறது. மேலும், கீழடி ஆய்வில் கிடைத்த மற்றுமொரு முக்கிய அம்சம் 'எழுத்துரு'.

கீழடியில் பானை ஓடுகளில் கிடைத்துள்ள எழுத்துருக்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த எழுத்துருவோடு ஒத்துப்போகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி முதல் வைகை நதி வரை ஒரு நாகரிகத் தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையில் மேலும் பல ஆய்வுகள் தொடர வேண்டும். 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல கீழடியையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கிடைத்த பொருள்களை அங்கே அருங்காட்சியகமாக வைக்க வேண்டும். கீழடி ஆய்வுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு கூடுதல் நிதி கேட்டிருக்கிறது

அந்த நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும், கீழடி ஆய்வுக்கான முழு உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். இன்றைக்கு வரலாற்று அறிஞர்கள் மிக முக்கியமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். கீழடி ஆய்வை முழுமையாகத் தொடர்ந்தால் தெற்காசியாவின் வரலாற்றை மாற்றி அமைக்கும்" என உறுதியாகக் கூறினார் பேராசிரியர் அருணன்.

பேராசரியர் பாரதி புத்திரனைத் தொடர்புகொண்டபோது, தமிழ் நாகரிகத்திலிருந்த மேன்மையான தன்மைகள் குறித்துப் பேசிய அவர், " "சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் இன்னும் 300, 400 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில் அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருத வைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உரைகிணறுகள், சுகாராதப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வைகை நதியைப் பயன்படுத்தி ரோமானியர்களுடன் கடல்வழியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என, அங்கு கிடைத்துள்ள பொருள்கள் மூலம் தெரிய வருகிறது. 

தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன் மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பேர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால் தென் பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின் மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில் எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது" எனப் பெருமை பொங்க பேசினார் பாரதி புத்திரன்.

https://www.vikatan.com/news/tamilnadu/was-keezhadi-capital-of-pandiya-nadu

 

 

 

  • தொடங்கியவர்

அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு

சிந்து சமவெளி அகழாய்வின்போது கிடைத்த திமில் உடைய காளையின் எலும்புகள் கீழடி அகழாய்விலும் கிடைத்திருப்பதால், இரு நாகரிகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கீழடியில் கிடைத்த பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ஆய்வகங்களுக்கும் சோதனைக்காக அனுப்பப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள BETA நிறுவனத்தில் கார்பன் டேட்டிங் எனப்படும் கரிமப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கு கிடைத்த எலும்புத் துண்டுகள், புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

கீழடி அகழாய்வின்போது கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானைகள் கிடைத்தன. அதேபோல், திமில் உள்ள காளைகள், பசு, எருமை, ஆடு போன்றவைகளை வேளாண் பணிகளுக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்த்து வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து மற்றும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தி வீடுகள் கட்டுமானம் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கீழடியில் கிடைத்திருக்கின்றன.

சங்ககால தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்கு சான்றாக பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங்களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு முடிவுகள் வரலாற்றைத் திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ``உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறது. கேரளாவில் பட்டணம் என்ற ஒரு இடம் கண்டறியப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சேர மன்னனின் துறைமுக நகராக விளங்கிய முசிறிப்பட்டணம்தான் அது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உலக அளவில் அந்த ஆய்வு குறித்து பேசப்பட்டது. புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், நாமும் ஒரு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வு விரிவாக வீரியத்துடன் செய்ய வேண்டும்'' என்றார்.

மேலும், இந்த அரிய தருணத்தில் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனையும் அந்தத் துறையின் முதன்மைச் செயலர் உதயசந்திரனையும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்

https://www.vikatan.com/news/tamilnadu/tn-government-released-keezhadi-excavation-results

  • தொடங்கியவர்

காசுமேரு - காஸ்மீர்

பாமேரு - பாமீர்

சைலம் - மலை

தச - பத்து தச

சைலம் - பத்துமலை

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

காசுமேரு - காஸ்மீர்

பாமேரு - பாமீர்

சைலம் - மலை

தச - பத்து தச

சைலம் - பத்துமலை

 

கீழடி, அகழ்வாரய்சி மூலம் கண்டு பிடிக்க பட்ட, தமிழ் பிராமி எழுத்துக்களை உடைய தமிழர் நாகரீகம். இப்படியான உண்மையான ஆராய்சிகளின் மூலம் எமது வரலாற்றை அறிய முற்பட்டு, ஆதாரபூர்வமா நிறுவும் போதுதாம் எமக்கான, எம் வரலாற்றுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மாறாக, ஒரு மம்பெட்டியை கூட பிடிக்காமல், கண்டதையும் வாசித்து விட்டு, கந்தபுரிதான் Canterbury, மதுரைதான் Madrid என்று கிளம்புபவர்களால் எமக்கு உலக அளவில் கேலியும் கிண்டலும்தான் மிச்சம்.

ஜேசு சாகும் தறுவாயில் “ஏலேய், ஏலேய் லாமா” என்று அரைமைக்கில் கூறியது தமிழ் என்று இப்படித்தான் முன்பு ஒரு வீடியோ வந்தது.

யாழ் களத்திலும் இப்படியான, தமிழர் நாகரீகம்தான் சுமேரிய நாகரீகம். பெளத்ததை புத்தர் தமிழரிடம் இருந்தே அறிந்தார் என்பது போல சில பதிவுகளும், சீசனுக்கு சீசன் வருவதுண்டு.

இவர்களின் ஒரே நோக்கம் தமது யூடியூப் விடியோக்களுக்கு பார்க்கும் அளவை கூட்டி அதன் மூலம் காசு பார்பதே.

உண்மையான வரலாற்றாய்வாளர்களை பல்கலைகழகங்களில் தேடுவோம். யூடியூப்பிலும் இணையத்திலும் அல்ல

  • தொடங்கியவர்
6 hours ago, goshan_che said:

யாழ் களத்திலும் இப்படியான, தமிழர் நாகரீகம்தான் சுமேரிய நாகரீகம். பெளத்ததை புத்தர் தமிழரிடம் இருந்தே அறிந்தார் என்பது போல சில பதிவுகளும், சீசனுக்கு சீசன் வருவதுண்டு.

இவர்களின் ஒரே நோக்கம் தமது யூடியூப் விடியோக்களுக்கு பார்க்கும் அளவை கூட்டி அதன் மூலம் காசு பார்பதே.

உண்மையான வரலாற்றாய்வாளர்களை பல்கலைகழகங்களில் தேடுவோம். யூடியூப்பிலும் இணையத்திலும் அல்ல

முதலில் இந்த மாதிரி இணைப்புக்கள் பல சிந்தைக்குரிய கேள்விகளை முன்வைக்கின்றன. அதன் மூலம் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் மேற்கொண்டு சிந்திக்க உதவும். 

அடுத்து, இணைப்பில் நீங்களே தேடலில் ஈடுபடுங்கள் என கூறப்படுகின்றது. எதையும் தீர விசாரித்து ஆய்ந்து அறியவேண்டும் என கூறப்படுகின்றது. பல மூல ஆய்வுகளையும் கூறி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆயிரம் பேர் ஒளிப்பதிவு இணைப்புக்களை இணைக்கும் எமது மக்கள் மத்தியில் எமது மறைக்கப்பட முனையும் சக்திகள் மத்தியில் இவ்வாறு இணைப்புக்கள் இணைப்பது எமது இனத்திற்கு அதன் வரலாற்றிற்கு நன்மையே. அதில் அவர்கள் பணம் சம்பாதித்து அதன் மூலம் சிலரை இணைத்து மேலும் தரம் வாய்ந்த ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்வதை ஆதரிப்பதில் தவறு இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

முதலில் இந்த மாதிரி இணைப்புக்கள் பல சிந்தைக்குரிய கேள்விகளை முன்வைக்கின்றன. அதன் மூலம் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் மேற்கொண்டு சிந்திக்க உதவும். 

அடுத்து, இணைப்பில் நீங்களே தேடலில் ஈடுபடுங்கள் என கூறப்படுகின்றது. எதையும் தீர விசாரித்து ஆய்ந்து அறியவேண்டும் என கூறப்படுகின்றது. பல மூல ஆய்வுகளையும் கூறி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆயிரம் பேர் ஒளிப்பதிவு இணைப்புக்களை இணைக்கும் எமது மக்கள் மத்தியில் எமது மறைக்கப்பட முனையும் சக்திகள் மத்தியில் இவ்வாறு இணைப்புக்கள் இணைப்பது எமது இனத்திற்கு அதன் வரலாற்றிற்கு நன்மையே. அதில் அவர்கள் பணம் சம்பாதித்து அதன் மூலம் சிலரை இணைத்து மேலும் தரம் வாய்ந்த ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்வதை ஆதரிப்பதில் தவறு இல்லை.  

எனெக்கன்னமோ, உந்த லொஜிக் சரோஜாதேவி புத்தகத்தை மாணவர்களிடம் கொடுங்கள், அதை படிப்பதன் மூலம் அவர்களின் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், அதன் பின் அவர்கள் திருகுறளை தேடிப் படிப்பார்கள் என்பது போல படுகிறது.

நல்லவேளையாக இந்த பதிவுகளில் வருவனவற்றை வைத்து எம் வராலாற்றை ஆராயும் நிலையில் இலங்கையிலும், தமிழகத்திலும் ஆராய்சியாளர்கள் இல்லை என்பது நம்பிக்கையூட்டுகிறது.

இப்படியான அபத்தங்களை பரப்புவதன் மூலம், இவர்களுக்கு கிளிக்ஸ் மட்டும் நாம் எடுத்துக் கொடுக்கவில்லை, பேஸ்புக்கில் வருவதுதான் செய்தி, யுடீப்பில் வருவதுதான் வரலாறு, விக்கிபீடியாதான் உலகப் பொது தகவல்தொரட்டி,  மீம்ஸ்சில் போடுவதுதான் எம் அரசியல் என்று முடிக்ககூடிய பலரை பிழையாக வழிநடத்துகிரோமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்ப்பதில் நாம் வல்லவர்கள்.

வரலாற்றை துறைசார் நிபுணர்களிடம் விடுவதே நல்லது.

போலி வைத்தியர்கள் போல, போலி வரலாற்றாளர்களும் ஆபத்தானவர்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.