Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தேர்தல்|கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய் சொன்னாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய தேர்தல்|கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய் சொன்னாரா?

அண்ட்றூ ஷீயர் காப்புறுதி முகவருக்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை – தி குளோப் அண்ட் மெயில்

செப்டம்பர் 30, 2019

Screen-Shot-2019-09-30-at-8.40.30-AM-102
கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் காணப்படும் சுய குறிப்பு

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷீயர் தான் முன்னாளில் சாஸ்கச்செவன் மாகாணத்தில் ஒரு காப்புறுதி முகவராகப் பணி புரிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கான உத்தரவுப் பத்திரத்தை மாகாண அரசிடம் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என கனடாவின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி குளோப் அண்ட் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் அதன் தலைவர் அண்ட்றூ ஷீயர் பற்றிய வாழ்க்கைச் சரிதத்தின் குறும் பகுதியொன்றில் அவர் சஸ்கச்செவன் மாகாணத்தில் காப்புறுதி முகவராகப் பணிபுரிந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தி குளோப் அண்ட் மெயில்’ இது பற்றி ஆராய்ந்தபோது காப்புறுதி முகவராகப் பணியாற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தை அம் மாகாணத்தில் பெற்றதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கண்டுபிடித்துள்ளது.

உரிய பத்திரங்களைப் பெறாது ஒருவர் தான் காப்புறுதி முகவர் என்று விளம்பரப்படுத்த முடியாது என்பது பொதுவாக எல்லா மாகாணங்களிலுமே கடைப்பிடிக்கப்படும் சட்டம். இது பற்றி விசாரணை நடத்த வேண்டுமென லிபரல் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.

இதற்குப் பதிலளித்த அண்ட்றூ ஷீயர், “தான் காப்புறுதி முகவர் அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான படிப்பை முடித்திருந்ததாகவும் மாகாண அரசு தனது அனுமதியை வழங்குவதற்கு முன்னதாகவே பணியை விட்டு விட்டேன்” எனவும் கூறியிருக்கிறார்.

சஸ்கச்செவன் மாகாண காப்புறுதித் துறையின் கண்காணிப்பாளருக்கு (Superintendent of Insurance) லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மார்க்கோ மெண்டிசீனோ எழுதிய கடிதத்தில் தான் சஸ்கச்செவன் மாகாணத்தில் காப்புறுதி முகவராகப் பணி புரிந்ததாக ஷீயர் மீண்டும் மீண்டும் வெளிப்படையாகத் தன்னைபற்றிக் கனடிய மக்களுக்குத் தவறாகச் சொல்லிவருகிறார் என்று முறைப்பாடு செய்திருக்கிறார். அதற்கான பல சான்றுகளையும் அவர் வழங்கியிருக்கிறார்.

“சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரசபை என்ற வகையில் நீங்கள் இது பற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மெண்டசீனோ கேட்டிருக்கிறார்.

இச் செய்தி ‘கனடியன் பிரெஸ்’ நிறுவனத்தினால் செப்டம்பர் 30 அன்று முதலில் பிரசுரிக்கப்பட்டது.

http://marumoli.com/?p=4631&fbclid=IwAR0HM9hN1ldNJGJAuwo_hBjFzHeNUcb7EyjWQTyjL_bnVXlASnJH7FJYpNY

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.