Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`முதல் கட்டம்... 3.1 லட்சம் கணக்கு விவரங்கள்?'- கறுப்புப்பண பதுக்கல்காரர்களை பதறவைத்த சுவிஸ் வங்கி!

Featured Replies

Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கில் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கும். பாஜக, காங்கிரஸ் என இதில் வித்தியாசம் காண முடியாது. கேட்கும் போதெல்லாம் ஆளும் கட்சியும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்பார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது.

`முதல் கட்டம்... 3.1 லட்சம் கணக்கு விவரங்கள்?'- கறுப்புப்பண பதுக்கல்காரர்களை பதறவைத்த சுவிஸ் வங்கி!
 

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் கறுப்புப் பணம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக அவ்வப்போது வெளியாகும் தகவல் இந்திய அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தவறுவதில்லை. 2016-ம் ஆண்டில் 45 சதவிகிதம் குறைந்திருந்த நிலையில், 2017-ல் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்ததாக அந்தத் தகவல் கூறுகிறது. இதற்கிடையே இந்த சுவிஸ் வங்கி பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பண விவகாரத்தில் தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த விவரம் முதல்முறையாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் பெடரல் வரி நிர்வாகத்தில் இடம்பெறும் 75 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. அதன்படியே இந்த விவரங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி இந்த 75 நாடுகளுக்கும் இதுபோன்ற விவரங்கள் பரிமாறப்பட்டுள்ளன என சுவிஸ் பெடரல் வரி நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிடிஐ தளத்துக்கு தகவல்அளித்துள்ளார். தற்போது செயல்பட்டுவரும் கணக்குகள் மட்டுமில்லாமல் 2018-ம் ஆண்டு வரை மூடப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்களும் கிடைத்திருக்கின்றன.

மொத்தம் 3.1 லட்சம் கணக்கு விவரங்களை சுவிஸ் வங்கி பகிர்ந்துள்ளதாகவும், மீண்டும் 2020-ம் ஆண்டு செப்டம்பரில்தான் இதேபோன்ற விவரங்கள் இந்தியாவுக்கு அளிக்கப்படும் எனவும் பெடரல் வரி நிர்வாக செய்தித்தொடர்பாளர் பேசியுள்ளார். பட்டியல் அளிக்கப்பட்டாலும் அதில் இருப்பவர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிடவில்லை. மொத்தம் 3.1 லட்சம் கணக்கு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் இந்தியாவின் கருப்பு பண முதலைகள் சிக்கியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

https://www.vikatan.com/news/india/india-has-got-the-first-set-of-swiss-bank-account-details

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

பட்டியல் அளிக்கப்பட்டாலும் அதில் இருப்பவர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிடவில்லை. மொத்தம் 3.1 லட்சம் கணக்கு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவில் இந்தியாவின் கருப்பு பண முதலைகள் சிக்கியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

கறுப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவேன் என்று, 
சும்மா வாயாலை , வடை சுடுவார்களே  தவிர,
அரசியல் வாதிகள்... தங்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.