Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தின் தேவையே உண்மையான சேவை

Featured Replies

காலத்தின் தேவையே உண்மையான சேவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கற்பதற் குத் தேவையான சகல வளங்களும் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகப் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது

யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கல்விச் செயற் பாடுகள் சீராக நடைபெறமுடியவில்லை என்ற நிலை யைப் பேரவையின் அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது.

பல்கலைக்கழகக் கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பினால் இத்தகைய நிலை தோன்றியுள்ளது என்றும் பேரவையின் அறிக்கை எடுத்துரைக்கிறது.

தாய்ச் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை களுக்கு ஆதரவு தெரிவித்துத் தாம் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கல்விச் செயற்பாடுகள் பாதிப்புறாதிருக் கும் வகையில் தாம் தொண்டர் சேவையில் ஈடுபடுவர் என்று பல்கலைக்கழக ஊழியர் சங்கம் நன்நோக்கம் கொண்ட அறிவிப்பைச் செய்திருந்தது.

ஆனால் கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் பணிப்புறக்கணிப்பு மாணவர்களின் கல்விச் செயற் பாடுகளை பெருமளவு பாதித்திருக்கிறது என்பது பேரவையினர் விடுத்த அறிக்கையில் இருந்து தெளிவா கத் தெரிகிறது.

தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் பணிநிறுத்தம் செய்வதை தவறு என்றோ, வேண்டாத செயற்பாடு என்றோ எவரும் கூற வியலாது. அது அவர்களுக்கு உள்ள உரிமை என்பதனை மறுத்தோ அன்றிக் கண்டித்தோ கருத்துச் சொல்லவும் முடியாது.

ஆனால்

பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகள் பாதிப்புறா திருக்கும் வகையில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறவில்லை என்று பேரவை உறுப்பினர்கள் கவலை கொள்ளும் அளவுக்கு பாதகநிலை வந்திருக்கக் கூடாது என்பது மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.

குடாநாட்டு மக்களின் பெரும் சொத்து கல்வியே. அது எந்த நிலையிலும், எந்தக் காரணத்தினாலும் இழக்கப் படுவதை சீரணிக்க முடியாது. குறிப்பாக உயர் கல்வி பீடமாக விளங்கும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாண வர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அது உடனடியாக மட்டு மன்றி நீண்டகாலப் பின்னடைவுகளைத் தோற்றுவிக்கும்.

இத்தனைக்கும்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற் பாடு கடந்த சுமார் ஒன்றரை வருடங்களாக பெருமளவில் பாதிப்படைந்திருந்தமை மாணவர்கள், அவர்களின் பெற் றோர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்களை மட்டுமன்றி சமூக உணர்வுள்ள எல்லோரையுமே கவலையில் ஆழ்த்தி இருந்தது.

2005ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மாறுதல டைந்த அரசியல் சூழ்நிலை முதற்கொண்டு 2006 ஓகஸ் டில் உருவான போர்ச்சூழல் வரை அவர்களின் கல்வி பெரிதும் தடைப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக சமூகத்தின் தீவிர முயற்சியாலும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நலன் விரும்பிகளின் ஆதரவாலும் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் மீண்டும் துளிர்த்தன.

இந்த வேளையில் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் கல்விச் செயற்பாடுகளைத் தறுக்கணிக்கச் செய்யப்போகிறதோ என்ற ஆதங்கம் மாணவர்கள், அவர் களின் பெற்றோர்கள் மனதில் எழுந்தது. ஆயினும் கல்வி சாரா ஊழியர்களின் அறிக்கை அதனைத் தணித்து ஆறு தல் தந்தது.

ஆனால் எதிர்பார்த்தது போலன்றி, நிலைமை மாறி இருப்பதாகப் பல்கலைக்கழகப் பேரவையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது, முன்னர் குறிப்பிட்டது போல, பல தரப்புகளையும் கவலை கொள்ளவைத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக தடைப்பட்டிருந்த யாழ். பல் கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப் புறாமல் இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வுட னேயே, தொண்டர் சேவையில் ஈடுபடப்போவதாக கல்விசாரா ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால் அது நடைமுறையில் உரியவாறு செயலுரு வம் பெறவில்லை என்று பல்கலைக்கழகப் பேரவை சுட் டிக்காட்டுகிறது.

முன்னைய காலங்களில் ஏனைய பல்கலைக்கழகங் களில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தடைகள் ஏற்பட்டபோதெல்லாம், யாழ். பல்கலைக்கழகம் சீராக இயங்கி பெருமை சேர்த்ததை பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் பெற்றோர் உதயனுக்கு எழுதிய வாசகர் திரு முகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த நிலை மீண்டும் இங்கு வரவேண்டும் பல் கலைக்கழக மாணவர்கள் எந்த நிலையிலும் பாதிக்கப் படக்கூடாது என்பது குறிப்பிட்ட பெற்றோர் ஒருவரின் விருப்பம் மட்டுமன்று. குடாநாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது, தடங்கலுறக் கூடாது என்பதே கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள சகல தரப்புகளினதும் பெரு விருப்பமாகும்.

எனவே

எங்கே தவறு; எத்தரப்பின் குறைபாடு என்ற பரி சோதனைக்கு அல்லது விவாதத்துக்கு இடமளிக்காது, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற் பாட்டுக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாதிருக்க சம்பந்தப்பட் சகல தரப்புகளும் கைகோர்த்துச் செயற் படவேண்டும். அதுவே காலத்தின் தேவை; உண்மை யான சேவை. சமூகப் பொறுப்புணர்வின் தள்ளிவைக்க முடியாத கடமையுமாகும்.

உதயன் ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.