Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக தொடர்பு இருந்தது - மோடி

Featured Replies

IMAGE-MIX.png
 

சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி தெரிவித்துள்ளார். 

சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை யும் கண்டுகளித்தனர்.

 

modi.jpg

 

 பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கு இரவு விருந்து விழங்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் அமர்ந்து, கடலையும் இயற்கையையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் கடற்கரையை ரசித்தனர்.

அதன்பின்னர் மோடி, ஜி. ஜின்பிங் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

201910121550236475_1_xi-jinping-talks.jp

 

அப்போது சீன ஜனாதிபதி வரவேற்று பேசிய மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேசினார். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்றார்.

இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன என்றும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங்கிற்கு இடையிலான இரண்டுநாட்கள் நடைபெற்ற முறைசாரா பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து சீன ஜனாதிபதி சென்னையில் இருந்து நேபாள தலைநகரை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

https://www.virakesari.lk/article/66742

  • தொடங்கியவர்

ஷி ஜின்பிங் - மோதி சந்திப்பு: தமிழ்நாடு - ஃபூஜியன் மாகாணம் இடையே 'சகோதர மாநில' உறவு ஏற்படுத்த முடிவு

தமிழ்நாட்டுக்கும் சீனாவின் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையில் சகோதர மாநில உறவு ஒன்றை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், ஷி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கும் ஃபூஜியன் மாகாணத்துக்கும் இடையிலான உறவு குறித்து ஆராய ஒரு கல்வி நிறுவனம் அமைக்கப்படும். ஏற்கனவே இந்தியாவின் அஜந்தா - சீனாவின் துன்ஹுவாங் இடையே இது போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவும் விரிவான தொடர்புகளை கணக்கில் கொண்டு கடல்சார் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பிராந்திய பொருளாதார கூட்டுறவு

இந்த பிராந்தியத்தில் வெளிப்படையான, உள்ளடக்கிய, வளமான, நிலையான சூழல் நிலவுவது இந்த பிராந்தியத்தின் வளமைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் முக்கியம் என்ற கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர். இரு தரப்புக்கும் பயனளிக்கும் விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுறவு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவும் வணிக உறவுகள், மக்களுக்கு இடையிலான உறவுகள், குறிப்பாக கடல் சார்ந்த தொடர்புகள் குறித்த பார்வைகளை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர்.

 

https://www.bbc.com/tamil/india-50028071

வணிகப் பற்றாக்குறைக்கு தீர்வு காண என்ன திட்டம்?

இந்தியா- சீனா வணிக உறவில் நிலவும் வணிகப் பற்றாக்குறை, அதாவது சீனா செய்யும் ஏற்றுமதியின் அளவு அதிகமாகவும், இந்தியா செய்யும் ஏற்றுமதியின் அளவு குறைவாகவும் இருப்பது, பற்றி பேசப்பட்டதாகவும் விஜய் கோகலே கூறினார்.

இந்தியா சீனா உறவில் விரிசலும், நட்பும் : விரிவான தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த பிரச்சனை பற்றி ஆராய இந்திய நிதியமைச்சர் - சீனாவின் துணைப் பிரதமர் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அந்தக் குழு இந்தப் பிரச்சனையை ஆராயும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் விஜய் கோகலே.

விதிப்படியான உலக ஒழுங்கு

இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையாக மதிப்பீடு செய்த மோதியும் ஜின்பிங்கும், சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் இருநாடுகளின் பங்கினை பிரதிபலிக்கும் வகையில், இந்தியா சீனாவின் இருதரப்பு தொடர்புகளை ஆழப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.

மோதி - ஷி ஜின்பிங்படத்தின் காப்புரிமைRAVEESH KUMAR / TWITTER

 

சர்வதேச சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க மறுவரையறை நடப்பது குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டனர். அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற சீனாவுக்கும், இந்தியாவுக்குமான பொதுவான நோக்கத்தில், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கின்படி எல்லா நாடுகளும் தங்கள் வளர்ச்சியைத் தொடரவேண்டும் என்ற கருத்தை இரு தலைவர்களும் கொண்டிருந்தனர்.

 

வளர்ச்சி சவால்கள் - தீவிரவாதம்

பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உள்ளிட்ட சர்வதேச மேம்பாட்டு சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் எடுக்கும் முக்கிய முயற்சிகளை இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கோடிட்டு காட்டினார்கள்.

தீவிரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தலாக இருப்பது குறித்து மோதியும் ஷி ஜின்பிங்கும் கவலை தெரிவித்தனர். இந்தியாவும் சீனாவும் பெரிய, பன்முகத்தன்மை மிக்க நாடுகள் என்பதால், தீவிரவாத அமைப்புகளுக்கு சிலர் பயிற்சியளிப்பது, நிதி வழங்குவது, ஆதரவு அளிப்பதற்கு எதிராக சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கைகளை பாரபட்சம் பார்க்காமல் எடுப்பதை உறுதி செய்ய இரு நாடுகளும் கூட்டாகப் பாடுபடுவது முக்கியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

https://www.bbc.com/tamil/india-50028071

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.