Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? - யதீந்திரா 

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு கையாளுவது? இதற்கான சில முயற்சிகள் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றிருந்தன. அரசியல் ஆய்வாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் என ஒரு தரப்பினர் இதற்காக இரவு பகலாக உழைத்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டிருந்தது. தமிழ் மக்கள் சார்பில், ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதே அனைவரதும் ஒருமித்த நிலைப்பாடாக இருந்தது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோவின் செயலாளர் சிறிகாந்தா ஆகியோரை மேற்படி பேரவையின் குழுவினர் சந்தித்திருந்தனர். இந்தக் குழுவினர் குறித்த அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு முன்னர், தமிழ் கருத்தருவாக்கங்களில் செல்வாக்குச் செலுத்திவரும் சிலர், யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

இதன் போது பிரதான வேட்பாளர்களான கோட்டபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமாதச ஆகியோர் சிங்கள –பௌத்த தேசியவாதத்திற்கு தலைமை தாங்குபவர்கள்- எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் எவையும் நிற்கப்போவதில்லை. அந்த வகையில் இருவருக்குமிடையில் அடிப்படையான வேறுபாடுகள் எதுவுமில்லை – என்பதில் அனைவருமே உடன்பட்டிருந்தனர். அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவுகள் என்ன என்னும் கேள்விக்கான பதிலாகவே, தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அபிப்பிராயம் மேலெழுந்தது. ஒரு வேளை, அது சாத்தியமாகாத பட்சத்தில், தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, குறித்த குழுவினர், கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். எனினும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் கட்சிகள் உடன்படவில்லை. இந்தப் பின்னணியில் பேரவையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் தமிழ் பொது வேட்பாளர் முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது? – என்பது பற்றி இதுவரை குறித்த குழுவினர் மக்களுக்கு விளக்கமளிக்கவில்லை. அது கட்டாயாம் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டியதில்லை என்னும் வாதத்தின் அடிப்படையில்தான், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனவே அந்த முயற்சி தோல்வில் முடிந்திருக்கின்ற சூழலில், தமிழ் மக்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்பது தொடர்பில் குறித்த குழுவினர் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில் குறித்த குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுமாறு தமிழ் மக்களை இனி கோர முடியாது. அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு கண்ட தமிழ் கருத்துருவாக்கிகள் எவருமே ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுமாறு கட்டுரைகளை எழுத முடியாது. அவ்வாறு செயற்பட்டால் அது ஒரு சந்தர்ப்பவாதமாகவே பார்க்கப்படும். எனவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று வாதிட்ட கருத்துருவாக்கிகள் மற்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் பேரவை, அதன் சார்பில் இயங்கிய சிவில் சமூக பிரமுகர்கள் – அனைவருக்கும் முன்னால் இப்போது இரண்டு தெரிவுகள்தான் உண்டு. அதில் ஒன்று, மிகவும் வலுவான எழுத்து மூல உடன்பாடு ஒன்றின் அடிப்படையில் ஒருவரை தெரிவு செய்வது. அந்த உடன்பாடு கட்டாயமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். அது சாத்தியப்படாத நிலையில், தேர்தலை முற்றிலுமாக பகிஸ்கரிக்குமாறு மக்களை கேட்பதுதான் இறுதியான தெரிவு. அதற்காக களத்தில் இறங்கி பணியாற்றுவது.

இதற்கு அப்பாலும் ஒரு தெரிவுண்டு. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் கூட, தற்போது களத்தில் ஒரு தமிழ்த் தேசிய பின்புலம் கொண்ட ஒரு வேட்பாளராக டெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவாஜலிங்கம் இருக்கிறார். அவரை ஒரு பொது வேட்பாளராக தத்தெடுக்கலாமா என்பது தொடர்பிலும் பேரவையின் குழுவினர் யோசிக்கலாம்தானே என்றும் சிலர் வாதிடுகின்றனர். சில அரசியல் செயற்பாட்டாளர்களுடன் பேசுகின்ற போது, அவர்கள் இதனை வலியுறுத்தினர். இந்த வாதத்தையும் அவ்வளவு இலகுவாக நிராகரிக்க முடியாதுதான். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாடிய தமிழ் மக்கள் பேரவையின் குழுவினர், தங்களுடைய வேட்பாளர் தெரிவில் பிரபலமான நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. நபர்கள் என்பதை ஒரு குறியீடாக நோக்க வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. கட்சிகளுடனான சந்திப்பின் போது அவர்கள் பலருடைய பெயர்களை குறிப்பிட்டிருக்கின்றனர் அதில் ஒருவர், திருகோணமலையை சேர்ந்த ஒரு சாதாரண பெண்மணி. அவரது பெயரை குறிப்பிட்ட போது எவருக்குமே அவரை தெரிந்திருக்கவில்லை. அவ்வாறாயின் தமிழ் மக்கள் பேரவையும், குறித்த குழுவினரும் சிவாஜிலிங்கத்தை ஏன் ஒரு குறியீட்டுத் தெரிவாக அங்ககீரிக்கக் கூடாது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சூழலில், மேற்படி வாதத்தையும் இலகுவாக நிராகரிக்க முடியவில்லை. ஏனெனில் பேரவையின் குழுவினர் நபர்களை எங்குமே முதன்மைப்படுத்தியிருக்கவில்லை.

sajith and gota

இவ்வாறான பினபுலத்தில்தான், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிறிதொரு முயற்சியை தொடங்கியிருக்கின்றனர். அதாவது, தமிழ் தேசிய நிலைப்பாடு கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒரு பொது உடன்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முயல்கின்றனர். பேரவையின் குழுவினர் எந்த கட்சிகளுடன் பேசியிருந்தனரோ, அந்த கட்சிகள் அனைத்தும் இதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்துவது, அதன் பின்னர் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றுடன் பிரதான வேட்பாளர்களான கோட்டபாய மற்றும் சஜித் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் இந்த முயற்சியின் இலக்கு. எந்த வேட்பாளர் கோரிக்கைகளுக்கு உடன்படுகின்றாரோ, அவருக்கு ஆதரவு வழங்குவது. ஆனால் இங்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது. எழுத்து மூல உடன்பாட்டிற்கு இணங்காத பட்சத்தில் அடுத்துள்ள தெரிவு என்ன? தமிழ் பொது வேட்பாளர் முயற்சியில் ஈடுபட்டு தோல்விகண்ட குழுவினர் எதிர்கொள்ளும் அதே பிரச்சினையைத்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்கொள்ளப் போகின்றனர். மாணவர்கள் எவருடைய வழிகாட்டலில் இதனை முன்னெடுக்கின்றனர் என்று தெரியாவிட்டாலும் கூட மாணவர்களுக்கும், மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் கடப்பாடுண்டு. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மாணவர்கள் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுப்பதற்கான தகுதியை இழந்தவிடுவர்.

இதற்கிடையில், இதில் பங்குபற்றவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமர் பொன்னம்பலம் தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை அறிவித்திருக்கின்றார். ஒருபுறம் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றிக் கொண்டே இன்னொரு புறமாக தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பில் அறிவிப்பதானது ஒரு முரண்பாடான விடயமாயே நோக்கப்படுகின்றது. கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில் சிங்கள வேட்பாளர்கள் எவரையுமே அவரால் ஆதரிக்க முடியாது. அவ்வாறு ஆதரித்தால் அவர் இதுவரை சொல்லிவந்த நிலைப்பாடுகள் அனைத்தையும் அவர் கைவிடநேரிடும். பேரவையின் குழுவினருடனான சந்திப்பின் போதும் கஜேந்திரகுமார் தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பிலேயே பேசியிருக்கின்றார் ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பங்குகொண்டவாறு கஜன் இவ்வாறு அறவிப்பதுதான் தவறானது. பகிஸ்கரிப்புத்தான் முன்னணியின் உறுதியான நிலைப்பாடு எனின் குறித்த கலந்துரையாடலில் முன்னணியினர் பங்பற்றியிருக்கக் கூடாது. கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் அதிகம் பங்குபற்றுவதற்கான வாய்ப்பில்லை என்று கணிக்கின்றார் எனவே பகிஸ்கரிப்பிற்கு தலைமை தாங்கியது தனது கட்சியே என்பதை அவர் பதிவு செய்ய விரும்புகின்றார் போலும் தெரிகிறது. ஆனால் கஜேந்திரகுமார் ஒரு விடயத்தை கவனிக்க மறந்துவிட்டார். அதாவது, பிரதான வேட்பாளர்கள் எவருமே எழுத்து மூல உடன்பாட்டிற்கு உடன்படப் போவதில்லை. எனவே இன்னும் சற்று பொறுமையாக இருந்திருந்தால் பெரும்பாலான கட்சிகள் முன்னணியின் பகிஸ்கரிப்பு நிலைப்பாட்டை நோக்கியே திரண்டிருக்கும். ஏனெனில் இரண்டு வேட்பாளர்களுமே சிங்கள – பௌத்த வாக்குகளை கவரும் உத்திகள் தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர். எனவே எந்தக் கோணத்தில் விவாதித்தாலும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரையும் ஆதரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் தமிழ் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் இல்லை. உண்மையில் இந்தத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. ஆனால் ஒரு நெருக்கடி நிலையை கையாளுவதில்தான், ஒரு தலைமையின் துனிவும் ஆற்றலும் வெளிப்படும். எவ்வாறான நிலைப்பாடு என்றாலும் அதனை துனிவாக முன்னெடுக்க வேண்டியதே இன்றைய தேவை. 2005இல் விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறானதொரு முடிவைத்தான் எடுத்திருந்தது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தலை-தமிழ்-த/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.