Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல

Featured Replies

இந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க வில்லை. எனவே மலையக மக்கள் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஊறுகாயோ கறிவேப்பிலையோ அல்ல என அருனலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார். 

நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று பகல் டிக்கோயா அருனலு மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

01col2160824647_7557812_13102019_SSK_CMY.jpg?itok=k-e0KQdV

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு தோட்டத் தொழிலாளர்களை முதலாளியாக்குவோம் என தெரிவித்து மொட்டையாக்கிய வரலாறுகள் தான் உள்ளன.நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரணதரம் படித்த 23 ஆயிரம் பேரும் பட்டதாரிகள் 300 பேரும் வேலையின்றி உள்ளனர். இவர்கள் எவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் ஜெனிவா சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் இல்லாமல் தொழிலாளர் சேமலாப நிதியம், தொழிலாளர் நலன்புரி நிதியம் ஆகியவற்றை அறவிட முடியாது என சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.இதனை பிரதமர் ,ஜனாதிபதிக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்த போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் 52 நாள் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ச பிரதமராகிய போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில் தான் நாங்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

அவர் வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க , வீட்டுரிமை, மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு, தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததனையடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். எனவே நாடு பூராகவும் உள்ள எமது கட்சி அங்கத்தவர்கள் அவருக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  

ஹற்றன் விசேட நிருபர்    

https://www.thinakaran.lk/2019/10/14/உள்நாடு/42031/மலையக-மக்கள்-ஊறுகாயோ-கறிவேப்பிலையோ-அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஊறுகாய், கறிவேப்பிலை இல்லை, மிகவும் பெறுமதி மிக்க தேயிலை கொழுந்துகள்.

அதுதான் அவர்களை லம்ப்பா ஒரு தொகை பேசி கோட்டவுக்கு விற்று விட்டோம் 😂

  • தொடங்கியவர்

"அவர் வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க , வீட்டுரிமை, மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு, தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததனையடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். எனவே நாடு பூராகவும் உள்ள எமது கட்சி அங்கத்தவர்கள் அவருக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  

 

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக  உழைத்து வரும் மக்கள். -  மலையக மக்கள். 

மலையக உறவுகள் ஒரு ஐம்பது ரூபா உயர்வை கூட இரணில் அரசில் பெற முடியாத நிலை. சஜித் தரப்பு இதை விட உயர்வான சலுகைகளை எழுத்தில் தர வைக்கவேண்டியது அவரை ஆதரிக்கும் மலையை  தமிழ் தலைமைகள் கடமை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.