Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மட்டும் 668.5 மில்லியன் ரூபா நிதி தேவை

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Ruwan_Gunasekara.jpg

பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள நிதியில்,  சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 45.8 மில்லியன் ரூபா நிதியும் உள்ளடங்கியுள்ளது.

எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படும் நிதிக்கு மேலதிகமாக, தேர்தல்கள் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், அவர்களது நலன்புரி நடவடிக்கைகள்,  வாகன வாடகை, எரிபொருள் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் ஏனைய நிதி தமக்கு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/66950

  • தொடங்கியவர்

 

தேர்தல் பிரசாரக் கூட்டத்தால் உண்டாகும் அசெளகரியத்தை கட்டுப்படுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  

அதன்படி  ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில்  உரிய அதிகாரிகளுடன் இணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து தேவையான நடவடிக்கையினை முன்னெடுக்க என  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரதிப் பொலிஸ் மா அதிபர்  கே.பி.எம். குணரத்னவை இது தொடர்பில் நியமித்துள்ளதாகவும் அது தொடர்பில் செயற்பட விஷேட நடவடிக்கை பிரிவொன்றினையும் ஸ்தாபித்துள்ளதாகவும்  பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்திஒயட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்னவின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடவடிக்கை பிரிவுடன் 0112697923 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ, அல்லது 011 2697886 எனும் தொலை நகல் இலக்கத்துடனோ வேட்பாளர்கள் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்கள் குறித்து முறைப்பாடுகள், தகவல்களை வழங்க முடியும்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களால் குறித்த பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் மற்றும் பொது மக்கள் அசெளகரியங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எம்.எம். விக்ரமசிங்கவின் கீழ் விஷேட நடவடிக்கைப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 0112473402 அல்லது 0113024894 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ, 0112439534 என்ற தொலை நகல் இலக்கம் ஊடாகவோ தொடர்பு கொண்டு முறைப்பாடு, தவல்களை வழங்க முடியும்.

https://www.virakesari.lk/article/66952

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.