Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி கால் சென்டர்.. பொதுமக்களிடம் மோசடி..!

Featured Replies

சென்னையில் போலியாக கால் சென்டர் நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 12 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


சென்னை சித்தாலபாக்கத்தில், ஃபீனிக்ஸ் கால் சென்டர் என்ற நிறுவனம் ஆறு மாத காலமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த கால்சென்டர் மூலம், பொதுமக்களின் செல்போன்களுக்கு அழைத்து குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். வங்கிக்கு நேரடியாக சென்றாலும் கிடைக்காத வட்டி விகிதத்தில் தங்கள் நிறுவனத்தால் கடன் பெற்று தர முடியும் என ஆசையைத் தூண்டியுள்ளனர்.

பணத் தேவை உள்ள பலரும் அவர்களை நம்பி, மோசடி கும்பல் கேட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களை கொடுத்துள்ளனர். ஓரிரு நாட்களில் தொடர்பு கொண்டு வங்கி கடன் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கான போலி குறுஞ்செய்தியை அனுப்பி மோசடி கும்பல் நம்ப வைத்துள்ளது.

கடன் தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமானால், தங்களது வங்கி கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் முதல் கடன் தொகைக்கு ஏற்றவாறு வைப்புத் தொகை இருக்க வேண்டும் என கூறியதைக் கேட்டு பலரும் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுள்ளனர்.


இதை அடுத்து அவர்களது வங்கி விவரங்களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடிக் கும்பல் திருடியுள்ளது. இதுதொடர்பாக நூற்றுக்கணக்கானோர் புகார் அளிக்கவே சென்னை மத்திய குற்றப் பிரிவில் இயங்கும், வங்கி மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

போலி கால்சென்டரில் அதிரடியாக சோதனை நடத்திய அவர்கள், நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் மற்றும் அதில் வேலை பார்த்தவர்கள் என 5 பெண்கள் உட்பட 12 பேரைக் கைது செய்தனர். எழும்பூரில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் 5 பட்டதாரி பெண்களுக்கு இந்த மோசடியில் தொடர்பில்லை என்றும், வேலை வாய்ப்பு என்ற விளம்பரத்தை பார்த்து தான் அந்நிறுவனத்தில் டெலி காலர்களாக சேர்ந்ததாகவும் கூறி அவர்களது உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர்.

https://www.polimernews.com/dnews/84894/போலி-கால்-சென்டர்..பொதுமக்களிடம்-மோசடி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.