Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்''

Featured Replies

''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்''

-வேனில்-

விடுதலைப்புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் (33 நாட்களில்) மூன்று தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் வானூர்திகள் சிறிலங்காவின் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளன. வன்னி வான்பரப்பில் வட்டமிட்டு தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளையில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றும் விடுதலைப்புலிகளின் வான் எதிர்ப்பு அணிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது முதற் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை சிறிலங்கா படைத்துறை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதன்பின்பு மீண்டும் விடுதலைப்பலிகளின் வானூர்திகள் தாக்கலாம் என்ற பயமும் எதிர்பார்ப்பும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இருந்தது. தென்னிலங்கையிலும், வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் சிறிலங்காவின் முப்படைகளும் அதியுச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தன. விமான எதிர்ப்புக் கருவிகள், விமானத்தை கண்டறிவதற்கான ராடார் கருவிகள் என்பன பல இடங்களிலும் பொருத்தப்பட்டன. படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 24ம் திகதி வடக்கின் மிகப்பெரிய சிறிலங்காப்படைத்தளமான பலாலி படைத்தளம் மீது வான்புலிகளின் வானூர்திகள் தாக்குதலைத் தொடுத்தன.

முதல் தாக்குதலினால் எற்பட்ட கலக்கத்திலும் பார்க்க மோசமான நிலை சிறிலங்கா அரசிற்கு ஏற்பட்டது. ஏனெனில் எதிர்பார்த்திருந்த நிலையில், கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் வான்புலிகள் தாக்கலாம் என்ற அச்சம் மேலோங்கத் தொடங்க, விடுதலைப்பலிகளின் விமானங்கள் பறப்பதாக கனவுகளில் விழத்துக் கொள்ளும் நிலை தென்னிலங்கையில் ஏற்பட்டது. வான்புலிகளின் விமானங்கள் பறப்பதாக சிங்கள மக்களின் தொலை பேசி அழைப்புகள் பாதுகாப்புப்படையினருக்கு ஒவ்வொரு நாளும் வந்த வண்ணமிருந்தன.

திடீரென ஒருநாள் அதாவது ஏப்ரல் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து சரமாரியன துப்பாக்கி, பீரங்கி வெடியோசைகள் முழங்கத்தொடங்க படையினரும் அயலில் இருந்த சிங்கள மக்களும் கதிகலங்கினர். கொழும்பு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறிலங்காவின் தலைநகரம் சில மணி நேரம் இருளில் மூழ்கியது. வான்புலிகள் வருவதான வதந்தியால் ஏற்பட்ட பீதியே இதற்கு காரணம்.

இச்சம்பவம் இடம்பெற்ற சில நாட்களிலேயே மீண்டும் வான்புலிகள் தெற்கு நோக்கிப்பறந்து சென்று கொலன்னாவ, முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியங்ளைத் தாக்கினர். சிறிலங்காப் படைத்துறை தமது உச்சநிலைப் பாதுகாப்போடு இருந்த சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. இம்மூன்று தடவைகளும் புலிகளின் வானூர்திகள் கச்சிதமாக தம் காரியத்தை நிறைவெற்றிவிட்டு சிறு சிராய்ப்புகள் கூட இன்றி தளம் திரும்பின..

விடுதலைப்புலிகளின் வான்படை கொடுத்த அடுத்த அதிர்ச்சி, கடந்த 30ம் திகதி வன்னி வான்பரப்பில் வைத்து சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக விமானமொன்று தாக்கிழிக்கப்பட்டமையாகும். இவ்விமானத்தின் பின்பறம் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் தீப்பற்றியபடி வேகமாக தெற்கு நோக்கி பறந்து சென்றதை வன்னியிலுள்ள பொதுமக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர். விழுந்த இடமே இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் இழப்புகளை மறைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறது.

மார்ச் 26 இல் கட்டுநாயக்கா தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்களினால் தங்கள் வானூர்திகளுக்கோ, வான்படைத்தளத்திற்கோ எதுவித சேதமும் இல்லை என்று கூறும் அரசு இதுவரை ஊடகவியலாளர்களையோ, போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரையோ வான்படைத்தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டவில்லை. பலாலிப்படைத்தளம் மீதான தாக்குதலின் பின் கூட அங்கு எவ்வித சேதமும் இல்லை என்று கூறிவிட்டு குறிப்பிட்ட சில கொழும்பு ஊடகர்களை மட்டும் அங்கு அழைத்துச் சென்று காட்டியது. அதுவும் பலாலித்தளத்தை காண்பிக்காமல் மயிலிட்டிப்பகுதியை மட்டும் காட்டியிருக்கிறது. கொலன்னாவ, முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியங்கள் மீதான தாக்குதல்களின் சேதத்தையும் சிறிலங்கா அரசாங்கம் மறைத்து வருகிறது. மிக் விமானம் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டமையினையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.