Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு

முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம்

மே 07, 2007

கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில்,

நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை.

அமைதி உடன்பாடு அமலில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானால், புலிகளைத் தாக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசு விட்டுத் தராது.

கடந்த 2002ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இதுவரை அது 10,000 முறை மீறப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தம் செத்துவிட்டதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் என்றார்.

வன்னி பகுதியை விமானங்களைக் கொண்டு உளவு பார்ப்பது ஒப்பந்தந்தை மீறிய செயல் என நார்வே அமைதி கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனரே என்று கேட்டதற்கு, அது குறித்துப் பேச அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

சமீபகாலமாக விமானத் தாக்குதலும் புலிகள் நடத்தி வருவதால் வான் வழியாக உளவு பார்ப்பதை அதிகரிக்கப் போகிறோம்.

புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில் விமானப் படையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ககிலியா.

2002ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி எந்தத் தரப்பாவது ஒப்பந்ததை கைவிட முடிவு செய்தால் 14 நாள் நோட்டீஸ் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/05/07/lanka.html

உளவு விமானம் இனி அடிக்கடி தற்கொலை செய்யும் அதிசயத்தை இனி பார்க்கலாம் போலதான் கிடக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெடுகிறன் பந்தயம் பிடி என்றியல்

நல்ல வசியம் நடக்கட்டும்

இப்போ மட்டும் இவையள் என்ன ஒப்பந்தத்தை கையிலையா எடுத்து வச்சிருக்கிணம் லூசுக்கூட்டம்

கெடு குடி சொல் கேளாது அமைதி உடன்பாடு அமலில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானால், புலிகளைத் தாக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசு விட்டுத் தராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது: சிறிலங்கா அரசாங்கம்

[திங்கட்கிழமை, 7 மே 2007, 17:43 ஈழம்] [செ.விசுவநாதன்]

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது:

யுத்த நிறுத்த ஒப்பந்தமானது பலமுறை மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்து அதனை துண்டித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு சீர்குலைகின்ற நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதில் அரசாங்கத்துக்கு எதுவித தயக்கமும் இல்லை. தேசப் பாதுகாப்பு தொடர்பில் நாம் எதுவித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்றார் அவர்.

"எந்தத் தரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காத நிலையில் அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதில் அர்த்தம் ஏதுமில்லை" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்துள்ளார்.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வனை பிரித்தானிய பாரளுமன்றத்தில் பேச அழைத்திருப்பதை முறியடிக்கும் வேலையாக இருக்குமோ? ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தால் புலிகளைத்தடை செய்யலாம். பின்னர் புலிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கலாம்.

ஈழம் முற்றிலும் வெல்வது திடமாகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தானாகவே வேறு வழியில்லாமல் அந்த வலையில் விழுகின்றது. உண்மையில் இப்படியான முடிவை அவர்கள் எடுத்தால் நல்லது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு என்ன பூச்சாண்டி காட்டினமா. அதுதான் எப்போ கைவிட்ட மாதிரிதான்

பைத்தியங்களின் ஆட்சியில் இப்படித்தானிருக்கும். எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகிவிட்டனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெகலிய இப்படித்தான் சொல்லுவான் ஆனால் செய்ய மாட்டான், அவன் சொன்னதை என்றைக்கு செய்திருக்கிறான், முதலில் ஒப்பந்ததை கைவிடும் தரப்பிற்கு எதிராக சர்வதேசம் திரும்ப வாய்ப்பிருப்பதால் மகிந்தா கொஞ்சம் யோசிப்பான். :lol::huh::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசியம்.. அதை வேளைக்கே இவை அறிவிச்சு விட்டினம் என்றால் தமிழ் மக்களுக்கு புண்ணியமா போகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒப்பந்தத்தை தாங்களாக முறிக்கப்படாது என்றரீதியில்தான் நம்மவர்கள் இவ்வளவு காலமும் பொறுமைகாக்கின்றனர். எனி சிறிலங்காவுக்கு முடிவுகாலமும் எமக்கு விடிவுகாலமும்தான்.

நாட்டை பாதுகாக்க போர்நிறுத்த உடன்படிக்கையை மீற தயங்கப்போவதில்லை

கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தில் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புத்துறைப்பேச்சாளர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.