Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதப் புராணம்

Featured Replies

பயங்கரவாதப் புராணம் பயன்தரப் போவதில்லை

`

சுயகௌரவத்துடன் கூடிய வாழ்வியல் இருப்புக்காக அடிப்படை உரிமைகளுக்காக இலங்கைத் தீவில் தமிழினம் நடத்தும் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்துக்கு மேற் குலக சமுதாயம் பயங்கரவாத முத்திரை குத்தியிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் உரிமைகளையும் நியாயபூர்வமான அபிலாஷைகளையும் வழங்க மறுத்து, ஆரம்பத்தில் அவர் களின் அஹிம்சை வழியிலான சாத்வீகப் போராட்டத்தை யும், பின்னர் ஆயுத வழிக்குத் திரும்பிய வலோற்காரப் போராட் டத்தையும் அடக்கி, ஒடுக்கி, தமிழர்களுக்கு எதிராகப் பெரும் சமரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தென்னிலங்கைச் சிங்களமும் தமிழர்களின் உரிமை எழுச்சியை "பயங்கர வாதம்' என்றே அடையாளப்படுத்துகின்றது.

அது சரியானதா, நீதியானதா என்பவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தப் பிரச்சினை பிணக்கு ஏன் உருவாகி, விஸ்வ ரூபம் எடுத்து பெரும் போராக வெடித்துள்ளது என்பதற்கான காரணத்தை அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒரு வர் சரியாக இனங்கண்டிருக்கின்றார்.

""உலகெங்கும் வாக்குரிமையும் ஏனைய அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு நம்பிக்கையும் சுயகௌரவமும் இழந்த நிலைக்குத் தள்ளப்படும் மக்கள் சமுதாயத்தின் மத் தியிலிருந்துதான் "பயங்கரவாதப் பயமுறுத்தல்' பரிணமித்து விஸ்வரூபம் எடுக்கின்றது'' என்று கூறியிருக்கின்றார் அவர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவான "பென்ரகனில்' இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டமொன்றில் கருத்துத் தெரிவித்த, அமெரிக்கக் கூட்டுப்படை அலுவலர்களுக்கான கொள்கை மற்றும் தந்திரோபாயத் திட்டங்களுக்கான பணிப் பாளர் கடற்படை லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் எவ்.சட்லர் என்பவரே இந்த உண்மையை நினைவூட்டியி ருக்கின்றார்.

தமிழர் தாயக மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் மூல வரலாற்றையும், அதன் பெறுபேறாக வெடித்த கொந் தளிப்பு மிகுந்த போராட்டங்களையும், புரட்சிகளையும் நோக்குபவர்கள் நீண்டதும், நெருக்கடிகள் நிறைந்ததுமான இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட வடிவம், ஒன்றிலிருந்து மற்றது முழுமையாக வேறுபட்டதான இரண்டு உருவ நிலைகளை நோக்கி மாற்றமடைந்து சென்றிருப் பதைக் காண்பார்கள்.

சுயநிர்ணயத்திற்கான தமிழர்களின் அரசியல் வாழ்வி யல் போராட்டம் சுமார் ஆறு தசாப்த காலத்துக்கு மேல் நீண்டு செல்கிறது. இப்படிநிலை வரலாற்றில் இப்படி நிலை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களை அது எடுத்ததாயினும், அதனை இரண்டு பிரதான வகைக்குள் அடக்கி விடலாம்.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளிலும் அறுபது களிலும் தமிழ்த் தேசியத்துக்கான உரிமைப் போரை வழி நடத்திய தமிழ் மிதவாதத் தலைவர்கள் எல்லோருமே மகாத்மா காந்தியின் கொள்கைகளாலும், தத்துவங்களாலும், ஆன்மீக அரசியல் தரிசனங்களாலும் கவரப்பட்டு, ஆகர்ஷிக்கப் பட்டு அதன் வழி நடப்பவர்களாக செயற்படுபவர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் முன்னெடுத்தவை அமைதியான மென்முறைப் பாதையில் அமைந்த அறவழியில் நெறிக் கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களாக மிளிர்ந்தன. அத் தோடு ஜனநாயக நாடாளுமன்ற அரசியல் முறையைத் தமது தடமாகவும், தளமாகவும் அவை கொண்டிருந்தன.

குந்து மறியல், சட்டமறுப்பு, கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்ற பல்வேறு நிலையுருக்களில் முன்னெடுக்கப்பட்ட அந்த அறவழிப் போராட்டங்களும் அவற்றுக்கு உட்கிடை யாகப் புதைந்து கிடந்த நியாயங்களும் தமிழ் மக்களின் தேசிய உணர்வைத் தட்டித் தூண்டிவிட்டு, அவர்களை ஒன்று பட்ட மக்களாக ஒரு தேசமாக எழுச்சி கொள்ள வைத்தன.

சுருங்கக் கூறுவதானால் தமிழினத்தவர்களை தேசியப் பற்றுணர்வோடு ஐக்கியமுறவைத்து, தமது வரலாற்றுத் தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சரித்திரபூர்வ மான தங்களது சுயாட்சி உரிமையைத் தாங்கள் மீளப் பெறு வதற்கான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடுத்த அந்த அறவழிச் செயற்பாடுகள் அவர்களுக்கு வழிகாட்டின.

அரசியல் உரிமைகோரி தமிழ் மக்கள் தொடுத்த அஹிம்சை வழிப் போராட்டங்களை சிங்கள இனவாத அரசு கள் ஆயுத வன்முறைவாயிலாக பலாத்காரத்தால் அடக்கி ஒடுக்கின. தமிழர்களின் உரிமைப் போராட்டங்களின் பின் னால் ஆழ வேரூன்றி நிற்கும் நியாயங்களை ஏற்கவோ, பரிசீ லிக்கவோ மறுத்த தென்னிலங்கை அப்போராட்டங்களை தீவிர நடவடிக்கைகள் மூலம் இராணுவப் பலத்தால் நசுக் கியது. பல முனைகளில் ஏவிவிடப்பட்ட இந்த அரச ஒடுக்கு முறை தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாசார வாழ்விய லில் ஆழமான பாதிப்புகளையும் அழியாத வடுக்களையும் ஏற்படுத்தி அவர்களை மென்மேலும் அடிமைப்படுத்தியது.

இந்த அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்தபோது, அத னால் விரக்தியுற்ற தமிழர்களின் இளஞ்சமூகம் வேறுமார்க்க மின்றி அரசியல் வன்முறையில் குதித்தது. அக்கட்டத்தி லேனும் நியாயம் செய்ய மறுத்த தென்னிலங்கை, கிளர்ச்சி செய்த தமிழ் இளைஞர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையை மேன்மேலும் தீவிரப்படுத்தியது.

அவ்வாறு அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் எல்லை மீறியபோது, அதற்கு எதிரான தமிழ் இளைஞர்களின் புரட்சியும் உக்கிரமடைந்து தமிழர் தாயகத்தில் பெரும் வன்முறைப் புயல் வீசியது.

அரச அடக்குமுறைக்கு எதிராக எழுபதுகளின் முற்பகுதி யில் முளைவிட்ட தமிழ் இளைஞர்களின் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் காலப்போக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதப் போராட்ட வடிவமாக உருவெடுக்க, முழு இலங்கைத் தீவுமே கொந்தளிக்கும் போர்க்களமாக மாறி, இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றது.

இந்த அடிப்படைகளை காலம் தாழ்த்தி இப்போதேனும் புரிந்துகொண்டு, உண்மைகளை ஏற்று, தமிழர்களுக்கு நியாயம் செய்ய தென்னிலங்கைத் தலைவர்கள் முன்வரா விட்டால் இப்பிணக்குக்கு சமரசத் தீர்வு சாத்தியமற்றதாகவே இருக்கும் என்பதே உண்மை.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை "பயங்கரவாதம்' என விமர்சித்து புராணம் பாடுவதை விடுத்து, அந்த வழிக்கு அவர்களைத் தெண்டித் தள்ளிய தென்னிலங்கைப் பேரின வாதத்தின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, அத்தவறுகளை நிவர்த்திப்பதற்கு கொழும்பு முயல்வதே இவ்விடயத்திற்கு நியாயமான தீர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.