Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் மீண்டும் உணவுப் பற்றாக்குறை அபாயம்: உலக உணவு திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மீண்டும் உணவுப் பற்றாக்குறை அபாயம்: உலக உணவு திட்டம்

கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு விநியோகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அது எதிர்வரும் ஜூன் மாதம் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் உலக உணவு திட்ட அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் அப்பகுதி தலைவரான ஜெஃப் ரஃப்டிக் தெரிவித்துள்ளதாவது:

புதிய நன்கொடைகள் இன்றி தற்போதுள்ள உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. கொடையாளிகளினால் குறுகிய காலத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள் குறித்து நாம் திருப்பதி அடைந்துள்ளோம்.

ஆனால் நாம் நீண்டகால திட்டங்கள் குறித்து கவலை அடைந்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்கு இரு உதவிகளும் எமக்கு தேவை என தெரிவித்துள்ளார்.

உணவுக் கையிருப்பு ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடைய உள்ளதாக கடந்த மார்ச் மாதமும் உலக உணவுத் திட்டம் அறிவித்திருந்தது. எனினும் கொடையாளிகளான யப்பான், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய அவசரகால நிதியம் ஆகியன உதவிகளை வழங்கியிருந்தன. இது உணவுத் தேவையை ஜூன் மாதம் வரை நிவர்த்தி செய்திருந்தது.

இதனிடையே இடம்பெயர்ந்த மக்களின் தேவையை நிறைவு செய்வதற்கு தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிகமான உணவுத் திட்டங்களை கைவிட வேண்டி உள்ளதாக உலக உணவுத் திட்டம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 140,000 மக்கள் தற்போதும் முகாம்களில் தங்கியுள்ளனர். இவை தவிர 150,000 மக்கள் ஏனைய வடக்கு - கிழக்கு மாகாணப் பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ளனர்.

இலங்கைத் தீவில் உள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் உணவுத் தேவைகளையும் நிறைவேற்ற தமக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வாரம் தோறும் வேவைப்படுவதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ள இடம்பெயர்ந்த மக்களில் 70 வீதமான மக்களின் உணவுத் தேவைகளை உலக உணவுத் திட்டம் நிறைவேற்றி வருகின்றது. மிகுதியை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிறைவேற்றி வருகின்றன. எனினும் எல்லா உதவிகளும் அரச தலைவர் அலுவலகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

மட்டக்களப்பில் உள்ள 100,000 இடம்பெயர்ந்த மக்களின் மாதாந்த தேவைகளுக்கு 1,500 மெற்றிக் தொன் உணவு தேவைப்படுவதாகவும், இதில் 600 தொன் அரிசி, 600 தொன் கோதுமை மா, 180 தொன் பருப்பு, 60 தொன் சீனி மற்றும் சமயல் எண்ணை என்பன அடங்கும் என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.