Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி மீது அடுத்தடுத்து அஸ்திரங்கள்... எடப்பாடி 'எழுச்சி'யின் பின்னணி!

Featured Replies

''ரஜினி என்றதுமே, 'அவர் பி.ஜே.பி-யின் விசுவாசி' என்றுதான் பொதுவாகவே அனைவருக்கும் தோன்றும். அதற்கு ஏற்றாற்போலவே அவருடைய அறிக்கைகளும் அமைந்திருக்கும். சமீபத்தில்கூட 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி ரஜினியைக் குஷிப்படுத்தியது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற காரணங்களால், ரஜினி விஷயத்தில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது 'காவிக்கு' எதிர் நிலையில் இருப்பதுபோல் ரஜினி பேசவும், அதையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட இது ரஜினிக்கு எதிரான அவருடைய யுத்தம் என்றே சொல்லாம்'' என்கிறார்கள் தமிழக அரசியலை கவனிப்பவர்கள்

கடந்த 8-ம் தேதியன்று கமல் அலுவலகத்தில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''தமிழகத்தில் இன்னும் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது'' என்று வழக்கம்போல்தான் சொன்னார். இந்தத் தடவை அ.தி.மு.க தரப்பு இதை வேடிக்கை பார்க்கவில்லை. 'காம்பவுண்ட் அரசியல்வாதி' என்று ஆரம்பித்து காய்ச்சித்தள்ள ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், "ரஜினியின் பேச்சுக்கு இனியும் சும்மா இருக்கக் கூடாது என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. அடுத்தடுத்த நாளில் ரஜினி, கமல் என்று எடப்பாடியார் பாய்ச்சல் காட்டுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது" என்கிறார்கள்.

எடப்பாடிக்கு நெருக்கமான சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "பா.ஜ.க தரப்பு ரஜினியை வைத்து தமிழக அரசியல் களத்தில் நிலைகொள்ள நினைத்தது. அதை அ.தி.மு.க-வும் அமைதியாக வேடிக்கை பார்த்தது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதைவிட அவரை வைத்து அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடுதல் வாக்குகள் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று எடப்பாடி தரப்பு நினைத்து வந்தது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்' என்று சொன்னதுதான், எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது.

இந்த நிலையில், வெற்றிடம் என்று ரஜினி பேசிவைக்க, எரிச்சலாகி விட்டார் எடப்பாடியார். ஏற்கெனவே தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளைக் கடக்க விருக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டார். டெல்லியும் எடப்பாடியாரின் மூவ்களை அங்கீகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆளுமையான ஒரு தலைவராகவே தன்னை உணர்கிறார் எடப்பாடியார். இதற்குப் பிறகும் வெற்றிடம் என்று ரஜினி பேசுவது, 'தன்னை ஒரு பொருட்டாகக்கூட ரஜினி மதிக்கவில்லை' என்று எடப்பாடியாரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அதனால்தான் அவர் தன் அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்துவிட்டார்.

 

'ரஜினியைத் தூண்டிவிடுவதே கமல்தான். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்கள்' என்று உளவுத்துறை ஒரு தகவலைத் தட்டிவிட்டுள்ளது. இதை வைத்து, 'கமல் தனியாக இருக்கும் வரை பெரிதாக ஆபத்து இல்லை. ரஜினியுடன் இணைந்தால் மிகப்பெரிய ஓட்டுவங்கியாக மாறுவார்கள். அது, அ.தி.மு.க-வைப் பாதிக்கக்கூடும்' என்று கட்சியினர் சிலர் கவலையாகப் பேசியதும் எடப்பாடியை மிகவும் யோசிக்கவைத்துவிட்டது. எனவேதான், ரஜினி - கமல் இணைப்பை முளையிலேயே கிள்ளியெறிய முடிவுசெய்து விட்டார்" என்றார்கள்.

ரஜினி தரப்பில் எடப்பாடியின் எதிர்த்தாக்குதலை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம், ரஜினி விமர்சித்தாலுமேகூட மனம் தளராத விக்கிரமாதித்தன்போல பா.ஜ.க தரப்பும் ரஜினியை தங்கள் பக்கம் கொண்டுவர தொழிலதிபர் ஒருவர் மூலம் மீண்டும் முயல்கிறது.

https://www.vikatan.com/spiritual/astrology/november-18-to-24-weekly-panjangam?artfrm=infinite

 

  • தொடங்கியவர்
Just now, ampanai said:

ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்' என்று சொன்னதுதான்எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது.

அந்த 'மூத்த தலைவருக்கு' பாராட்டுக்கள். பி.ஜே.பி. ( மோடி மற்றும் ஷா ) கைகளில் தமிழகம் சிக்கக்கூடாது.  ஆனால், அவரும் பி.ஜே.பி. சேர்ந்தவர் என்பது இது ஒரு ஏமாற்றும் வேலையாக கூட இருக்கலாம்.  😎

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார், அண்ணா, காமராசர் இடையிலெழும் கருத்து வேறுபாடுகளை அலசிய தமிழகம் இன்று எடப்பாடி, ரஜினி எனும் நிலைக்கு வந்துள்ளது. மக்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே தலைவர்கள். தமிழகம் தரம் தாழ்ந்து போனதற்கு சான்று வேறு வேண்டுமா என்ன?

  • தொடங்கியவர்
9 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

மக்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே தலைவர்கள். தமிழகம் தரம் தாழ்ந்து போனதற்கு சான்று வேறு வேண்டுமா என்ன?

உண்மை. இன்று தமிழினத்திற்கு உலகளாவிய ரீதியில் ஒப்பற்ற தலைமை என்று இல்லாத துர்ப்பாக்கியம். 

விரைவில் இது மாறும், மாற்றப்பட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.