Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருக்கின்றனர்; நாமல்!

Featured Replies

ஸ்ரீலங்காவின் அரசியலில் தீர்க்கமான சக்தியாக இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்காது என்ற தெளிவான பதிலை இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச கூறினார்.

நடைபெற்றுமுடிந்த ஸ்ரீலங்காவின் 08ஆவது ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலை வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, இந்த வெற்றி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களில் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்த போதிலும் அதனை மீறி மக்கள் கனிசமாக வாக்குகளை அவருக்கு வழங்கியிருப்பதால் இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தைகள் செல்லாக்காசாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

தெற்கிலுள்ள மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல வடக்கு, கிழக்கு மக்களும் கனிசமான வாக்குகளை வழங்கியுள்ளனர். ஆகவே இப்போது சஜித் பிரேமதாஸவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் உண்மையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல, அவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக அளிக்கப்பட்ட வாக்குகளாகும். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை அங்கிருந்து நீக்கினால், அவர்களும் சஜித் பிரேமதாஸ கூட்டணியிலிருந்து நீங்க வேண்டும். இந்த நிலையில், இந்த நாட்டின் தீர்க்கமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்ற பதிலை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதேபோல எந்தவித அழுத்தங்களுக்கு மத்தியிலும் கோட்டாபய ராஜபக்சவுக்காக வடக்கு, கிழக்கு மக்கள் கனிசமான வாக்குகளை அளித்துள்ளனர். இன்று நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்திருக்கின்றனர். அதனூடாக ஒற்றையாட்சி என்கிற விடயத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பது தெளிவாகின்றது”.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் அற்ற ஒரு புதிய அரசியல் பயணத்தை கோட்டாபய ராஜபக்ச தொடரவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்சவுக்காக கோட்டாபய ராஜபக்சவை மக்கள் அதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். அம்பாந்தோட்டையில் 100 வருடங்கள் ராஜபக்சவினர் அரசியல் செய்துள்ளனர். அதேபோல இந்த மாவட்டத்தைப் போன்றே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் கோட்டாபய ராஜபக்ச மீது அதீத நம்பிக்கையை வைத்து வாக்களித்திருக்கின்றனர். கடந்த 04 வருடங்களாக நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம், பல்வேறு அரசியல் பழிவாங்கல்களுக்கும் முகங்கொடுத்தோம். சிறைகளுக்கும் சென்றோம். பலவந்தமாக பொய்சாட்சி சொல்லவும் சிலரை தூண்டினார்கள். இவ்வாறு அனுபவித்த கஸ்டங்களுக்கான மக்களின் பிரதிபலனாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ச பொதுஜன முன்னணி கட்சியை அமைத்தபோது ஆதரவு வழங்கிய அனைவருக்கும் இன்று நன்றி தெரிவிக்கின்றோம். அரசியல் பழிவாங்கலின்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் புதிய அரசியல் பயணத்தை தொடர்வதற்கு கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆயத்தமாகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/131421?ref=imp-news

3 hours ago, Rajesh said:

இந்த தேர்தல் முடிவுகளின் ஊடாக ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி நாடு என்பதை மக்கள் உறுதிசெய்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச கூறினார்.

அடுத்த சிங்கள மகிந்த அண்ட் கோ வாரிசு - நாமல்.  

கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள்  கோத்தாபயவிற்கு ஆதரவு - நாமல் 

656X60-X150.gif
 

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

namal.jpg

பழமையான  அரசியல் செயற்பாடுகளில் இருந்து  வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இம்முறை மாற்றமடைந்துள்ளார்கள். வடக்கில்  நாங்கள் தோல்வி என்று கருத முடியாது.  வெற்றிக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் பழிவாங்களுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் ஒன்றினைந்து  பலமான அரசாங்கத்தினை தோற்றுவிப்பதற்கு  வழிமுறைகளை ஜனநாயக முறையின் ஊடாக  ஏற்படுத்தியுள்ளார்கள். மக்கள் விரும்பும் ஆட்சிமுறைமையினை  உருவாக்குவதற்கு பாராளுமன்றம் தொடக்கம் கிராமிய மட்டத்தில் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றிப்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரின்  தலைமையிலான அரசாங்கத்தினை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்  நன்றியினை தெரிவித்துக் கொள்ள  வேண்டும் என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/69132

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.