Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அதிபராகும் கோட்டாபய: வைகோ, ராமதாஸ், கொளத்தூர் மணி, ஜெயக்குமார் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபராகும் கோட்டாபய: வைகோ, ராமதாஸ், கொளத்தூர் மணி, ஜெயக்குமார் கூறுவது என்ன?

இலங்கை அதிபராகும் கோட்டாபய: என்ன சொல்கிறார்கள் தமிழக தலைவர்கள்?

இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று உள்ளதால் இலங்கைத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுவதாகத் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, முன்னாள் அதிபர் ராஜபக்ஷவின் சகோதரர் ஆவார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாசா இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி என்பது தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.

''எந்த சிங்களவர் தேர்வாகியிருந்தாலும் தமிழர்களின் நலன் குறித்து யோசிக்கவேண்டியிருக்கும். ஆனால் கோட்டாபய தேர்வாகியுள்ளது தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தனக்கு எதிராக வாக்களித்த தமிழர்களை அவர் எப்படி நடத்துவார் என்ற அச்சம் உள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து குரல்கொடுப்பதால், அந்த அரசாங்கங்களின் எதிர்ப்பு கோட்டபாயவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

இலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது நடந்து விட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Dr. S. Ramadoss

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Dr. S. Ramadoss

''இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. தமிழினத்தின் எதிரியான கோட்டாபய ராஜபக்‌ஷ அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது,''எனத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நலன் காக்கப்படும் எனப் பிரசாரம் செய்த சஜித் பிரேமதாசாவின் தோல்வி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறிய மதிமுக தலைவர் வைகோ, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நாள் தமிழர்களுக்கு மோசமான நாள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச தமிழர் அமைப்புகள் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறையுடன் செயல்படவேண்டும் தெரிவித்துள்ளார். கடுமையான காலங்களைக் கடந்துவந்த தமிழினம் காக்கப்படவேண்டும் என்றார்.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தமிழர்களின் பாதுகாப்புக்குத் தமிழக அரசு தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றார். ''நம் தொப்புள்கொடி உறவாக இருக்கக்கூடிய தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும்,'' எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-50452449

அண்ணளவாக 68 மில்லியன்கள் உறவுகள் என்றும் ஈழமக்களுக்கு பலமாக உறவாக இருப்பார்கள். !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல் ராஜபக்‌ஷ அறிக்கை

நமால் ராஜபக்‌ஷபடத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமால் ரபடத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்களை பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் அவதானித்ததாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ததையும் அவர் தனது அறிக்கையில் நினைவூட்டினார்.

இந்த விஜயத்தின் போது குறித்த குழுவினர் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

நமால்படத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

இந்த விஜயத்தில் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டிருந்த அதேவேளை, தமது நிலைப்பாட்டையும் அவர் தெளிவுற அறிந்துக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தமது நிலைப்பாட்டை அறிந்து தொல்.திருமாவளவன் இன்று இவ்வாறு சந்தர்ப்பாத அறிக்கையை விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ கூறுகின்றார்.

தமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது என நாமல் ராஜபக்ஷ அனைத்து தமிழக அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தான் தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50469958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.