Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டியாந்தோட்டையில் தழிழர்கள் மீது அடாவடித்தனம் !

Featured Replies

மரத்தில் இருந்து விழுந்­த­வனை மாடு மிதித்­தது போலத் தான் இன்­றைய தமி­ழர்­களின் நிலைமை ஊச­லா­டு­கி­றது. ஆண்ட தமி­ழினம் என்ற வீர வலாற்றை கொண்ட எம்­மினம், இன்று அடி­மை­க­ளா­கவும் உட­மை­களை இழந்­த­வர்­க­ளா­கவும் அடிப்­படை உரி­மை­க­ளுக்கே மற்­ற­வர்­க­ளிடம் கையேந்­து­ப­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருப்­பது காலத்தின் கொடு­மை­யாகும்.

நேற்று முன்­தினம் இரவு கேகாலை எட்­டி­யாந்­தோட்டை கனே­பொல தோட்­டத்தில் பதி­வான சம்­ப­வமே, இன்று தமிழ் மக்­க­ளி­டத்தில் இவ்­வா­றான எண்­ணங்­க­ளையும் ஆதங்­கத்­தையும் மனக்­க­வ­லையையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வாக்­கு­ரிமை என்­பது ஜன­நா­ய­கத்தின் ஆணிவேர். வாக்­கு­ரிமை என்­பது ஜன­நா­யக உரிமை. வாக்­கு­ரிமை என்­பது முறை­கே­டா­ன­வர்­களை தண்­டிக்கும் ஆயுதம். வாக்­கு­ரிமை என்­பது ஒரு பிரம்­மாஸ்­திரம். ஒரு ஆட்­சி­யா­ளரின் தலை­யெ­ழுத்தை மாற்றும் சக்தி இந்த வாக்­கு­ரி­மைக்கு உள்­ளது. இவ்­வாறு வாக்­கு­ரி­மையின் அருமை பெரு­மையை நீட்­டிக்­கொண்டே செல்­லலாம்.

ஆனால்..! இந்த ஜன­நா­யக உரி­மையை பயன்­ப­டுத்­திய ஒரு அப்­பாவி இனத்தின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­மை­யா­னது மிகவும் இழி­வுக்­கு­ரி­யதும் அதிர்ச்­சிக்­கு­ரிய செய­லுமாகும்.

நாட்டில் வாழும் ஏனைய இனத்­த­வர்கள் போன்றே கேகாலை, எட்­டி­யாந்­தோட்டை கனே­பொல தோட்­டத்தில் வசிக்கும் சிறு­பான்மை மக்­க­ளா­கிய இந்­திய வம்­சா­வ­ளியை சேர்ந்த மலை­யக மக்­களும் தமது வாக்­கு­ரி­மையை கடந்த 16 ஆம் திகதி பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

வெளி­யான உத்­தி­யோ­க­பூர்வ தேர்தல் முடி­வு­களின் அடிப்­ப­டையில், எட்­டி­யாந்­தோட்டை தேர்தல் தொகு­தியில் ஜனா­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தாபய ராஜ­பக்ஷ 32 ஆயி­ரத்து 753 வாக்­கு­களை பெற்று வெற்றி பெற்­றி­­ருந்தார். எதிர் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச 28 ஆயி­ரத்து 215 வாக்­கு­களை பெற்­றி­ருந்தார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் நேற்று முன்­தினம் கனே­பொல தோட்­டத்­துக்கு சென்ற குண்­டர்கள் சிலர் 'யாருக்கு வாக்­க­ளித்­தீர்கள்?" என துவே­சத்தை கக்கி அந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

 

tamil-pepole.jpg

 

அடை மழை­யிலும் கடும் வெயி­லிலும் பாடு­பட்டு வியர்வை சிந்தி சிறிது சிறி­தாக சேர்த்து வைத்­தி­ருந்த அந்த தோட்­டத்து மக்­களின் உட­மை­க­ளையும் இந்த குண்டர்கள் தாக்­கி­ய­ழித்­துள்­ளனர்.

இந்த கொடூர சம்­பவம் தொடர்பில் அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த பிர­தே­ச­வாசி ஒருவர் கருத்து பகிர்­கையில்,

'நாங்கள் பிர­பா­க­ர­னுக்கா வாக்­க­ளித்தோம்..? சிங்­கள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த ஒரு­வ­ருக்கே வாக்­க­ளித்தோம். வாக்கையும் போட்டு உதை­யையும் வாங்­கு­கின்றோம். வீடு­க­ளுக்குள் புகுந்து ரிவி மற்றும் பொருட்­களை உடைத்­துள்­ளார்கள். எமக்கு ஏன் இந்த நிலைமை. எமக்­காக யாரும் குரல் கொடுக்க மாட்­டார்­களா?. கேட்க, பார்க்க யாரும் இல்லை.

இரு பொலிஸ்ஸார் வந்து சும்மா பார்த்து விட்டு சென்று விட்­டார்கள். அவர்கள் ஒன்றும் செய்­ய­வில்லை. எம்மை தாக்­கிய குண்­டர்கள் வீடு­களில் இருந்த இளம் யுவ­தி­க­ளையும் தள்­ளிவிட்டு சென்­றார்கள். இந்த நிலைமை எமக்கு தேவை தானா? என மனக் கவ­லை­யுடன் ஆதங்­கப்­பட்டார்.

இதே­வேளை அங்­கி­ருந்த தாய்­மார்கள் ஆதங்­கத்­துடன் கருத்­துக்­களை பகிர்ந்­தனர். 'இதுவே கடைசித் தருணம். இதற்கு மேல் யாருக்கும் ஓட்டுப்போடப் போவ­தில்லை. யாருமே எம்­மிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம். இன்றே ஓட்டு லிஸ்ட்டை எல்­லோரும் கிழித்து விடுவோம். ஓட்டு போட்டு அடி­வாங்­கு­கின்றோம்.

எமக்கு சம்­பள உயர்வு தரு­கின்றேன் என்றார். அதற்­காக தான் தோட்டத் தொழி­லாளர் என்ற அடிப்ப­டையில் அவ­ருக்கு ஓட்டு போட்டோம். நாங்கள் ஏற்­க­னவே பாம்பு, அட்டை, குள­வி­க­ளிடம் கடி வாங்கி கஷ்­டப்­பட்டு உழைத்து வாழ்­கின்றோம். ஓட்டு போட்டு இவர்­க­ளிடம் அடி­வாங்க வேண்­டுமா? இதுவா எங்கள் தலை­விதி? இந்த நாட்டில் எமக்­கென ஒரு உதவி கிடைப்­பதில்லை. அடிப்­ப­தற்கு மாத்­திரம் வரு­கி­றார்கள்" என்­றனர்.

இந்த மக்­களின் கோபம் ஆதங்­கம் கலந்த மன­வே­த­னை­யு­ட­னான கேள்­வி­க­ளுக்கு யார் பதி­ல­ளிக்கப்போகின்­றார்கள். அந்த மக்­களின் பாது­காப்­புக்கு யார் பொறுப்புக்கூறப்போகின்­றார்கள்.வாக்­க­ளித்­த­மைக்­காக அடி­வாங்­கிய இனம் என்ற கறுப்பு புள்­ளியை உலக வர­லாற்­றில் இலங்கை மாத்­திரம் கொண்­டி­ருக்க போகின்­றது என்­பது கசப்­பான உண்­மை­யாகும்.

எனவே ஒரு நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­ன­தாக நாட்டில் வாழும் சாதா­ரண ஒரு குடி மகனின் பாது­காப்பை நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

பாது­காப்பு, பாதுகாப்பு என்று வாய்கிழிய பேசுவதால் மாத்திரம் ஒன்று நடப்பதில்லை. அதற்கான ஏற்பாடுகளை சகல இடங்களிலும் இனப்பாகுபாடு இன்றி முன்னிறுத்த வேண்டும்.

மேலும் ஆட்சியாளர்கள் இனவாதம், துவேசம் என்பவற்றுக்கு அப்பால் நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை சமூகத்தை இணைக்கும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் மீண்டும் ஒரு கறுப்பு சகாப்தத்துக்கு இலங்கை செல்ல நேரிடும் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

 

எம்.டி. லூசியஸ்

https://www.virakesari.lk/article/69306

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.