Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டினரை அடையாளம் காண நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி அறிவிப்பு

Featured Replies

 ‘‘சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதிரடி அறிவிப்பை  வெளியிட்டார்.

கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால்,  கடந்த 1971 மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  கடந்தாண்டு வெளியான இதன் வரைவு அறிக்கையில் 40 லட்சம்  பேரின் பெயர் விடுபட்டதால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து மத்தியில் ஆளும் பாஜ அரசு, லட்சக்கணக்கானோர் பெயரை நீக்கியிருப்பதாக மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணம் கொடுத்து  பெயரை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் இறுதி அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் 19 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளது.

இதற்கிடையே, அசாமைப்போல் நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேற்று அதிரடியாக வெளியிட்டார். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு காஷ்மீர் சூழல் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர் பேசியதாவது:அசாம் போலவே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்வதற்கான சாதாரண நடைமுறையே இது. உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், பதிவுகள்  மேற்கொள்ளப்படும். எனவே யாரும், எந்த மதத்தினரும் அச்சப்பட வேண்டியதில்லை. நாடு முழுவதும் என்ஆர்சி பதிவு மேற்கொள்ளப்படும் போது, அந்த சமயத்தில் அசாமிலும் அதற்கான பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்கள் சட்ட ரீதியான  தீர்வை பெற அசாம் முழுவதிலும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு உரிய ஆவணங்களுடன்  பதிவு செய்துக் கொள்ளலாம். தேசிய குடிமக்கள் பதிவேடு மத அடிப்படையிலானது அல்ல. இதற்கும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கும் சம்மந்தமில்லை. குடியுரிமைச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக துன்புறுத்தல்களை  சந்தித்து வரும் சிறுபான்மையினர்களான இந்து, புத்த, ஜெயின், கிறிஸ்தவ, சீக்கியர், பார்சி அகதிகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும். இந்த மசோதாவின் மூலம், அகதிகளாக வந்த  அனைவருக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கப்பெறும்.இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையின் நிலைக்குழுவும் அனுமதி வழங்கிய நிலையில், 16வது மக்களவை காலாவதி ஆனது. எனவே மீண்டும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில்  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைதியை சீர்குலைப்பதா?மம்தா உடனடி எதிர்ப்பு
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் லட்சக்கணக்கானோர் பெயர் விடுபட்டதற்கே கடுமையாக கொந்தளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு முழுவதும் என்சிஆர் அமல்படுத்தப்படும் என்ற அமித்ஷாவின் அறிவிப்புக்கு  உடனடி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சாகர்திகியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, ‘‘என்சிஆர் என்ற பெயரில் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் சதி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்திக்  கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் என்சிஆர்-ஐ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இங்கு எவரது குடியுரிமையையும் பறித்து, அகதியாக மாற்ற விட மாட்டோம். மத அடிப்படையில் எங்களை பிரிக்க முடியாது’’ என்றார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542536

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.