Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி சேகரிப்பை தடுக்குமாறு சர்வதேசத்திடம் கோருவோரே புலிகளுக்கு இரகசியமாக உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி சேகரிப்பை தடுக்குமாறு சர்வதேசத்திடம் கோருவோரே புலிகளுக்கு இரகசியமாக உதவி

[11 - May - 2007]

* சாடுகிறது ஐ.தே.க.

- எம்.ஏ.எம்.நிலாம் -

சர்வதேச சமூகம் அரசு மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் மனித உரிமை மீறல் விவகாரத்தில் அரசு- புலிகள் இருதரப்பினர் மீதும் சர்வதேசம் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது ஆளும் தரப்பினரே குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் அவற்றை மூடி மறைப்பதிலேயே அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதன் காரணமாகவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டனர்.

ஜனநாயக விரோத நடவடிக்கை மூலமே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்றாலும் தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசியக்கட்சி ஜனநாயகத்தை மதித்து ஏற்றுக் கொண்டது.

இன்று ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களாலேயே உண்மை வெளிவந்துள்ளது. சர்வதேசத்திடம் புலிகளைத் தடை செய்யக்கோருபவர்கள் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளனர். புலிகள் நிதி திரட்டுவதை தடுக்கக் கோரியவர்களே கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்துள்ளனர். உண்மையிலேயே இது தேசத்துரோகச் செயலாகும். தேசத்துரோகம் பற்றிக் கூப்பாடு போடும் ஜே.வி.பி.யும், ஹெலஉறுமயவும் தொடர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.

இந்த இரகசிய உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத்தெரிவுக்குழுவை அமைக்குமாறு நாம் கோரினோம். மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் அரசு அதனைச் செய்யத்தவறியுள்ளது. தாங்கள் தவறிழைக்கவில்லையென்றால் ஏன் விசாரணைக்குப் பயப்பட வேண்டும் எனக் கேட்க விரும்புகின்றோம். உண்மையை வெளியிட்ட மங்கள, ஷ்ரீபதி போன்றோர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் வாய்களை மூடியுள்ளனர்.

இரகசிய உடன்படிக்கையின் பிரகாரம் மீதித் தொகையை வழங்கத் தவறியதாலும் கருணா அணியினரை நிராயுதபாணிகளாக ஆக்கும் உத்தரவாதம் நிறைவேற்றப்படாமையினாலுமே விடுதலைப் புலிகள் ஆத்திரமடைந்து அரசுக்கு எதிராக செயற்படத் தொடங்கினர்.

இன்று சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் வலுக்கட்டாயமாக தலையிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் தூதரகச் சுவர் மீது மகஜர் ஒட்டப் புறப்பட்ட ஜே.வி.பி.யினர் அதற்கு எதிர்ப்புறமாக இருக்கும் அலரி மாளிகைச் சுவரிலும் அதனை ஒட்டத் தவறியுள்ளனர். முதலில் ஒட்டி இருக்க வேண்டியது அலரி மாளிகைச் சுவரிலாகும். பிரிட்டிஷ் தலையீட்டை வரவேற்கும் அரசாங்கத்தை விட்டுவிட்டு பிரிட்டிஷ் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதானது நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். விலைவாசி அதிகரிப்பைக்கூட ஜே.வி.பி, ஹெலஉறுமய என்பவை கண்டு கொள்வதாக இல்லை. எரிபொருள் விலை வாராந்தம் அதிகரிக்கின்றது.

சமையல் எரிவாயு, மின்சாரக் கட்டணம், கோதுமை மா, பாண் விலைகள் என ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்று அரசாங்கம் மட்டுமல்ல உள்ளூராட்சி சபைகள் கூட இயங்க முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் மௌனிகளாகிப் போயுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எமது கடமையை நாம் செய்கின்றோம். மாற்று அரசாங்கம் என்ற ரீதியில் உள் நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எமது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நன்றி - தினக்குரல்

பொருளாதாரம், சர்வதேச அணுகுமுறை, கருணா விவகாரம், மனித உரிமை மீறல்,... என்று பல சிக்கல்களில் முகம்கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் திணறிக்கொண்டிருப்பது மட்டும் புரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருளாதாரம், சர்வதேச அணுகுமுறை, கருணா விவகாரம், மனித உரிமை மீறல்,... என்று பல சிக்கல்களில் முகம்கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் திணறிக்கொண்டிருப்பது மட்டும் புரிகிறது.

முக்கியமாக எப்போதும் வானத்தையே ஆவெண்டு பாக்கவேண்டிய புதிய பிரச்சனையை விட்டுட்டியள்

28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம்

ஐ.தே.க. எம்.பி. சரத் ரணவக்க இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் எத் தரப்பும் அதில் வெற்றி பெற முடியவில்லையென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், யுத்தத்தில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை.

தற்போது யுத்தம் சில வருடங்களாகவே நடைபெறுகின்றதென்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முற்படுகின்றனர். இது தவறானதாகும்.

புலிகளின் விமான ஓடுபாதை பற்றிய விபரங்களை பெற்றிருந்த அரசாங்கம் ஏன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

கோதாபய ராஜபக்ஷ குறித்து வீதியெங்கும் போஸ்டர் ஒட்டுவதால் பயனில்லை. இராணுவத்தின் சில உயர் அதிகாரிகள் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆயுத பலம் குறித்து தெரிவித்த கருத்துகள் பொய்யாகிப் போயின.

புலிகள் கையினால் இயக்கும் ஏவுகணைகள் மூலம் 2 அவ்ரோ விமானங்களை வீழ்த்தியிருந்தனர். இச்சபையில் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். அதாவது, புலிகளிடமிருக்கும் ஏவுகணைகளாவது எம்மிடம் இருக்கின்றதா? அப்படியிருந்திருந்தால் ஏன் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியவில்லை?

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியைத் தடுத்தவர்களே மங்களவும் ஷ்ரீபதியும். ஆனால், அவர்கள் புலிகளுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து இன்று பேசுவதை மறந்துவிட்டார்கள்.

இந்நாட்டில் பயங்கரமானதொரு யுத்தம் நடந்தபோது தற்போதைய பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்த ஒருவரேயாவார்.

புலிகளின் விமானங்கள் தேங்காய் போன்ற அளவு கொண்டது என்றார் ஜே.வி.பி. யின் விமல் வீரவன்ச. ஆனால், புலிகளோ 3 தடவை குண்டுகளை வீசி விட்டு பத்திரமாக திரும்பிச் சென்றுவிட்டனர்.

சர்வதேச விமான நிலையம் இன்று இரவில் மூடப்படுகிறது. மிஹின் எயார் விமானம் பறந்தவுடனேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிக் குழாய்கள் மூலமாக இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது. அவ்வாறே பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலமும் சமாதானத்தை உருவாக்க முடியாது.

விங்கொமாண்டர் அஜந்த டி சில்வா வீம்பு பேச்சு பேசுகிறார். அவரின் கூற்றுக்கு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே பதில் கூற வேண்டும். இதனால் தான் நாம் பாதுகாப்பு குறித்து இங்கு கேள்வியெழுப்புகிறோம்.

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.