Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம்

[11 - May - 2007]

* ஐ.தே.க. எம்.பி. சரத் ரணவக்க

இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் எத் தரப்பும் அதில் வெற்றி பெற முடியவில்லையென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

"இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், யுத்தத்தில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை.

தற்போது யுத்தம் சில வருடங்களாகவே நடைபெறுகின்றதென்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முற்படுகின்றனர். இது தவறானதாகும்.

புலிகளின் விமான ஓடுபாதை பற்றிய விபரங்களை பெற்றிருந்த அரசாங்கம் ஏன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

கோதாபய ராஜபக்ஷ குறித்து வீதியெங்கும் போஸ்டர் ஒட்டுவதால் பயனில்லை. இராணுவத்தின் சில உயர் அதிகாரிகள் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆயுத பலம் குறித்து தெரிவித்த கருத்துகள் பொய்யாகிப் போயின.

புலிகள் கையினால் இயக்கும் ஏவுகணைகள் மூலம் 2 அவ்ரோ விமானங்களை வீழ்த்தியிருந்தனர். இச்சபையில் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். அதாவது, புலிகளிடமிருக்கும் ஏவுகணைகளாவது எம்மிடம் இருக்கின்றதா? அப்படியிருந்திருந்தால் ஏன் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியவில்லை?

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியைத் தடுத்தவர்களே மங்களவும் ஷ்ரீபதியும். ஆனால், அவர்கள் புலிகளுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து இன்று பேசுவதை மறந்துவிட்டார்கள்.

இந்நாட்டில் பயங்கரமானதொரு யுத்தம் நடந்தபோது தற்போதைய பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்த ஒருவரேயாவார்.

புலிகளின் விமானங்கள் தேங்காய் போன்ற அளவு கொண்டது என்றார் ஜே.வி.பி. யின் விமல் வீரவன்ச. ஆனால், புலிகளோ 3 தடவை குண்டுகளை வீசி விட்டு பத்திரமாக திரும்பிச் சென்றுவிட்டனர்.

சர்வதேச விமான நிலையம் இன்று இரவில் மூடப்படுகிறது. மிஹின் எயார் விமானம் பறந்தவுடனேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிக் குழாய்கள் மூலமாக இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது. அவ்வாறே பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலமும் சமாதானத்தை உருவாக்க முடியாது.

விங்கொமாண்டர் அஜந்த டி சில்வா வீம்பு பேச்சு பேசுகிறார். அவரின் கூற்றுக்கு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே பதில் கூற வேண்டும். இதனால் தான் நாம் பாதுகாப்பு குறித்து இங்கு கேள்வியெழுப்புகிறோம்."

நன்றி - தினக்குரல்

28 வருடங்களில் புலிகள் வன்னிப் பெருநிலத்தில் ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்ததும், உலகிலேயே முதல் தடவையாக அரசாங்கம் அல்லாத ஒரு அமைப்பு வான்படையை உருவாக்கி தங்களை உயர்த்தியதையும் சரத் ரணவக்க கருத்தில் கொள்ளவில்லை.

ஒருவேளை இவர் புலிகளின் வெற்றி என்று சொல்வது தனித் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துவதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ அரசுருவாக்கம் என்பது ஓரிரு நாட்களில் நடைபெறும் விடயமல்ல. அது படிப்படியாகக் கூர்ப்பித்து காலவோட்டத்தில் முழுமை பெறும் ஓர் நிகழ்வுப்போக்கு. சில அரசியல் ஆய்வாளர்களும் வெற்றி தோல்வி யாருக்கும் கிடைக்கவில்லையென்று புலம்புகின்றனர். உண்மையில் ஓர் அரசின்கீழ் ஒற்றுமைப்பட்டிருந்த இலங்கைத்தீவு இன்று சிங்கள சிறீலங்காவாகவும் தமிழீழமாகவும் மாற்றம் பெற்று ஒரே பணப்புழக்fத்தையும் ஆனால் nவt;வேறு நிர்வாகஇ பாதுகாப்பு அலகுகளையும் கொண்டு இயங்கும் நிலைக்கு வந்துவிட்டது. திரும்பிப் போகமுடியாத பாதையில் தமிழரின் விடுதலைப்போர் பலவருடங்களுக்கு முன்னரேயே நடைபோடத் தொடங்கிவிட்டது. இதை இந்தியா உட்பட அனைத்துத் தேசங்களும் உணர்ந்துள்ளன. இலங்கை அரசுகூட உணர்ந்துள்ளது. தற்போது இலங்கையரசு காட்டும் பிடிவாதம் வெறும் வீம்புத்தனம். களநிலைமைகளுக்கு முற்றிலும் பொருத்தமற்ற நிலைப்பாடு. அவ்வகையில் தோல்வியைத் தழுவியுள்ளவை சிங்கள அரசாங்கங்களே. படிப்படியாக வெற்றியின் பாதையில் செல்வோர் ஈழத்தமிழர்களே. இழப்புக்கள் இருப்பினும் இழக்கப்படாத நிலம் தமிழருக்குண்டு. நடைபெற வேண்டியது(இருப்பது) நிலமீட்பும் முழுமையான அரசியல் பொருளாதார சுயாதிபத்திய ஆட்சியமைப்புமே

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.