Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமகளாக சீனர்களுக்கு விற்கப்பட்ட பாகிஸ்தான் பெண்கள்

Featured Replies

பாகிஸ்தான், பெண்கள், சீனர்கள், கடத்தல், விற்பனை

 பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் 629 பேர் திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளதும், அவர்கள் சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.


பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2018 முதல் இவ்வாறு பாகிஸ்தான் பெண்கள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் விசாரணைக்கு பாதியிலேயே தடை விதிக்கப்பட்டது. சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விஷயத்தை விசாரிப்பதற்கு உயரதிகாரிகள் தடை விதித்தனர்.

இதனால், அக்டோபர் மாதம், பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 31 சீனர்களை பாகிஸ்தான் கோர்ட் விடுதலை செய்தது. இந்த வழக்கில், தொடர்புடைய பெண்களுக்கு மிரட்டல் விடப்பட்டன. சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரணையின் போது கூறிய தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தவில்லை என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவிற்கு விற்கப்பட்ட பெண்களை மீட்டு வருவதில் முக்கிய பங்காற்றிய சலீம் இக்பால் என்பவர் கூறுகையில், விசாரணை அதிகாரிகளுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுக்க துவங்கினர். சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அரசிடம் இது குறித்து எடுத்து கூறினோம். ஆனால், அரசு கவனம் செலுத்தவில்லை என்றனர். இது குறித்து பாகிஸ்தான்உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், விசாரணை நடவடிக்கைகள் , உயர் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக குறைக்கப்பட்டன. அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். செய்திகளை வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. பெண்கள் கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

இதில் தொடர்புடையவர்கள், வழக்கில் இருந்து தப்பித்து விடுவோம் என உறுதியாக நம்புகின்றனர். அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. விசாரணை நடத்தக்கூடாது எனநெருக்கடி கொடுப்பதால், பெண்கள் கடத்தப்படுவது அதிகரிக்கிறது எனக்கூறிய அவர்கள், தங்களது பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது எனக்கூறினர். இதற்கு, நாங்கள் நாங்களாக வாழ வேண்டும். மனிதநேயம் என்பது இங்கு இல்லை என்கின்றனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2426410

 

 

  • தொடங்கியவர்

சீனாவுக்கு விற்கப்பட்ட 629 பாகிஸ்தான் இளம்பெண்கள்

சீனாவை சேர்ந்த ஆடவருக்கு மணமுடிப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து 629 இளம்பெண்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மகப்பேறின்போது கருவில் இருந்த பெண்சிசு கலைக்கப்பட்டது போன்ற காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்தது.

இதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாகிஸ்தானில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி சீனர்கள் திருமணம் செய்து வருகின்றனர்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்களை விலைக்கு வாங்கி, கடத்தி சீனர்களிடம் ஒரு கும்பல் விற்று வருகிறது. இருநாடுகளின் அமைப்புகள் நடத்திய விசாரணையில் இதுதெரிய வந்துள்ளது.

https://www.polimernews.com/dnews/91408/சீனாவுக்கு-விற்கப்பட்ட-629பாகிஸ்தான்-இளம்பெண்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.